தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளியன்று ரஜினிகாந்த் நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ படம் ரிலீசானது.
ரஜினி ரசிகர்கள் பெண்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.
ஒரு தரப்பினரிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
ஆனாலும் உலகளவில் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளமையான தோற்றத்தில் ரஜினியை கண்ட ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் சிவாவை நேரடியாக அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார் ரஜினி.
சென்னையில் உள்ள சிவா வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அண்ணாத்த படம் குறித்தும் மற்ற விஷயங்களையும் பேசினாராம்.
மேலும் இயக்குநருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக அளித்தாராம்.
இது தொடர்பாக போட்டோ எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது தான் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சூட்டிங் நடந்த சமயத்தில் ரஜினியை கூடுதல் கவனத்துடன் அன்பாக பார்த்துக் கொண்டாராம் சிவா.
அந்த அன்பின் வெளிப்பாடுதான் ரஜினி இந்த சங்கிலி பரிசு எனத் தெரிகிறது.
இது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாவே தனது ஹூட் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth gifted gold chain to Annaatthe director Siva