தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.
இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த் பேசியதாவது…
சினிமாவில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன்.. ஆனாலும் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லை.
கொரோனாவுக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை என்ற போது சினிமாவை விட்டு விட முடிவு செய்த நிலையில் தான் எனக்கு லால் சலாம் பட வாய்ப்பு கிடைத்தது.
முதலில் இயக்குனர் ஐஸ்வர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் அல்லது வில்லன் கேரக்டர் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.
வாழ்க்கையில் ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாதது.. அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன்.. “சார் இனிமேல் உங்களை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை உங்களிடம் கேள்வி கேட்கலாமா? ” என்றேன். கேளுங்கள் கேளுங்கள் என்றார்.
அப்போது.. “சார் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்களே? ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் அளிக்கும் போது..ஒரு காட்சியை சில நிமிடங்களில் எடுத்து முடித்து விடுவார்கள்.. ஆனால் அது பற்றிய சிந்தனையில் நமக்கு இருக்க வேண்டும்.
இதைத்தான் எனக்கு பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்தார்.. நான் சொன்னால் என் இயக்கத்தில் 100 பேர் நடிக்க காத்திருப்பார்கள்.. ஆனால் ஒரு ரஜினிகாந்த்தால் இந்த கேரக்டருக்கு.. இந்த காட்சிக்கு என்ன கொடுக்க முடியும் என யோசிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.. அதை இன்று வரை செய்து வருகிறேன்” என்றார் ரஜினிகாந்த்.
இப்போதும் கூட ஒரு சூப்பர் ஸ்டாராக தன்னை நினைக்கவில்லை கே பாலச்சந்தரின் மாணவராகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அதனால்தான் இன்னும் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டிருக்கிறார்”
என்றார் விக்ராந்த்.
Vikranth speech at Lal Salaam pressmeet