தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ நாளை ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா பார்த்திபன் ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மேடை ஏறிய விக்ரம் பேசியதாவது…
“எனக்கு சேது படம் கிடைத்த போது 36 வயதாகிவிட்டது. பெரிய பெரிய பிரம்மாண்ட படங்களில் பணியாற்றும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை.
ஆனால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு தன்னுடைய ஆரம்பத்திலேயே பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐஸ்வர் லட்சுமி எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார். ஒருநாள் மிகவும் சோர்வாக இருக்கிறது என்றார். ஆனால் டல்லாக இருக்கும் போதே நிறைய நேரம் பேசுவார்.
அவரும் திரிஷாவும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஏதோ உலக விஷயங்கள் அவர்கள் பேசுகிறார்கள் என்று நினைத்தால் நாய் பூனை பூக்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள் என்று கலாய்த்தார் விக்ரம்.
பொன்னின் செல்வன் படத்தின் மூலம் எனக்கு கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய இரு தம்பிகள் கிடைத்துள்ளனர். கார்த்தி நன்றாக பேசுவார். மேடையை மிகவும் கலகலப்பாக வைத்திருப்பார்.
அதுபோல ஜெயம் ரவியும் நல்ல உள்ளம் கொண்டவர். எல்லோரையும் எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். திரிஷா என்னுடைய நீண்ட கால தோழி.
இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள்.. வாய்ப்பு அளித்த மணிரத்னம் – லைக்கா நிறுவனத்திற்கு நன்றி” என தெரிவித்தார் விக்ரம்.
Vikram talks about Aishwarya Lakshmi at PS2 event