சிவகார்த்திகேயனுடன் இணைந்த சிம்பு.; இது வேற லெவல் கூட்டணி ஆச்சே

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சிம்பு.; இது வேற லெவல் கூட்டணி ஆச்சே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘டாக்டர்‘.

இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் வினய் ராய், யோகி பாபு, இளவரசு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இத கொஞ்சம் பாருங்க : என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

2 மணி 28 நிமிடம் ஓடக்கூடிய படம் இந்த படம் அக்டோபர் 9ல் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் ஓடக்கூடிய தியேட்டர்களில் சிம்புவின் மாநாடு பட டிரைலரும் திரையிடப்பட உள்ளதாம்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி ‘மாநாடு‘ பட டிரைலர் யு டியுபில் வெளியானது. நான்கு நாட்களில் மாநாடு டிரைலர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Maanaadu trailer will be screened at doctor movie theatres

100 வருடங்களுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்.; மனித சமூகத்தை மீண்டும் அழிக்க வரும் வைரஸ்

100 வருடங்களுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்.; மனித சமூகத்தை மீண்டும் அழிக்க வரும் வைரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.

‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ Influenza Virus கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது.

இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது.

ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் – ‘தி புக் ஆஃப் ஏனோக்’ The Book of Enoch படத்தின் கதை.

இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் வெயிலோன் இயக்குகிறார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிரவீன் எஸ்.ஏ இசையமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, திருத்தணி, வேலூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

The Book of Enoch movie kick starts today

ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அரண்மனை 3’ திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.

‘அரண்மனை 3’ படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர்.

தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதறப்போவது உறுதியாகியுள்ளது.

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

அரண்மனை 3‘ படத்தில் இடம் பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.

பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம்.

அரண்மனை 3 திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

‘அரண்மனை 1’ மற்றும் 2 படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாபாத்திரத்தை விட அரண்மனை 3 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்யாவின் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் .

அதே போல் அரண்மனை 3 படத்தில் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.

இயக்குனர் சுந்தர் C படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .

Sundarc plays an important role in Aranmanai 3

தீபாவளிக்கு ரஜினியுடன் மோதும் எம்ஜிஆர்.; தயாரிப்பாளர் சூர்யாவை வாழ்த்திய ஐசரி கணேஷ்

தீபாவளிக்கு ரஜினியுடன் மோதும் எம்ஜிஆர்.; தயாரிப்பாளர் சூர்யாவை வாழ்த்திய ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ” உழைக்கும் கைகள்” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வெளியிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நாயகனாக நடித்துள்ள நாமக்கல் எம்.ஜி.ஆர், பல் மருத்துவரும்
படத்தின் தயாரிப்பாளருமான குமரகுருபரன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி , நாட்டியாலயா பிரேம்நாத், கணேசன் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

தீபாவளியை அடுத்து “உழைக்கும் கைகள்” படத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட தயாரிப்பாளர் குருபரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த ”அண்ணாத்த’ படம் ரிலீசாகிறது.

கிரண்மை, ஜாகுவார் தங்கம், போண்டாமணி ஆகியோர் நடித்துள்ள இதற்கு சங்கர்கணேஷ் இசையமைத்துள்ளார்.

Rajini and MGR movies to clash in this diwali

பிரபாஸின் 25வது படத்தை இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர்

பிரபாஸின் 25வது படத்தை இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார்.

‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது.

‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா

Prabhas25 to be directed by Arjun Reddy director

நரேன் நடிக்கும் ‘குரல்’.; அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

நரேன் நடிக்கும் ‘குரல்’.; அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் நரேன்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.

இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர்.

முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார்.

ரசிகர்களை கவரும் விதத்தில் இந்த திரைப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக நரேனின் மாறுபட்ட கெட்டபும், நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் வேளையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு குவிந்துள்ளது.

இந்தப் படம் ‘கைதி’ சூப்பர் ஹிட்டுக்கு பிறகு நரேன் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்:

நாயகன் : நரேன்

நாயகி : ஷ்ர்தா சிவதாஸ்

முக்கிய நடிகர்கள் : பால சரவணன், காளி வெங்கட், கனிகா, ஷெரிஸி சீன் (பிலிப்பைன்ஸ்).

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இசை : ஷஷ்வத், மங்கள்

ஒளிப்பதிவு : விவேக் மேனன்

எடிட்டிங் : நவீன்

கலை : ராஜீவ்

சவுண்ட் டிசைனிங் : ஷிஜின் மெல்வின் மன்ஹட்டன், அபிஷேக்

மக்கள் தொடர்பு : ப்ரியா

Karthi released Narain’s next film first look

More Articles
Follows