‘லால் சலாம்’ படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு வேற..: ஐஸ்வர்யா ரஜினி ஓபன் டாக்

‘லால் சலாம்’ படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு வேற..: ஐஸ்வர்யா ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.

இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது…

‘லால் சலாம்’ படத்தின் கதையை முழுவதுமாக சொல்ல முடியாது. சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.

ஆனாலும் கொஞ்சம் சொல்கிறேன்.. தேர் திருவிழா என்ற ஒரு கிராமம். அந்த கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு பிரச்சனை எழுகிறது.. அந்த பிரச்சனையில் ஒரு அரசியல் இருக்கிறது. அது என்ன?என்பதுதான் படத்தின் கதை.

ஒரு விளையாட்டு விளையாட்டாக இருக்கும் போது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த விளையாட்டு போட்டியாக மாறும்போது பணம் விருதுக்கு ஒரு கட்டத்தில் போட்டி பொறாமை ஏற்படுகிறது. பணம் உள்ளே வந்ததால் அரசியலும் வருகிறது.. அந்த அரசியல் பின்னர் என்ன ஆனது.?

நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது.. நாம் வைத்திருக்கும் ஆதார் கார்டும் ஒரு அரசியல் தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு அரசியல் இருக்கிறது.. அந்த அரசியலை இந்த லால் சலாம் படம் பேசுகிறது.

ரைட்டர் விஷ்ணு ராமலிங்கம் என்பவர் தான் இந்த படத்தின் கதையை சொன்னார்.. அவர் முதலில் இரண்டு கதையை சொன்னார்.. ஒன்று காதல் கதை மற்றொன்று லால் சலாம் கதை.

ஆனால் லால் சலாம் முன்பு வைக்கப்பட்ட தலைப்பு வேறு.. ‘திசை எட்டும் பரவட்டும்’ என்ற தலைப்புதான் வைத்திருந்தோம். அதன் பின்னர் மாற்றப்பட்டது.

ஒருமுறை விஷ்ணு சொன்னார் உங்களைப் போன்ற ஒருவர் இந்த கதையை இயக்கினால் கண்டிப்பாக இது பெரிய அளவில் ரீச் ஆகும் என்றார்.. அதன் பின்னர் நடந்தது எல்லாம் நான் ‘லால் சலாம்’ படத்தில் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து விட்டேன்.

‘வை ராஜா வை’ என்ற படத்திற்கு பிறகு படத்தை இயக்காமல் இருந்தேன்.. என்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதால் இந்த இடைவெளி.. அதன் பின்னர் தான் இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன்..” என்று பேசினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Aishwarya Rajini speech about Lal Salaam title changed

சினிமாவை விட முடிவு செய்தேன்..; ரஜினி தன்னை சூப்பர் ஸ்டாராக நினைக்கல.. – விக்ராந்த்

சினிமாவை விட முடிவு செய்தேன்..; ரஜினி தன்னை சூப்பர் ஸ்டாராக நினைக்கல.. – விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.

இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த் பேசியதாவது…

சினிமாவில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன்.. ஆனாலும் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லை.

கொரோனாவுக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை என்ற போது சினிமாவை விட்டு விட முடிவு செய்த நிலையில் தான் எனக்கு லால் சலாம் பட வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இயக்குனர் ஐஸ்வர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் அல்லது வில்லன் கேரக்டர் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.

வாழ்க்கையில் ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாதது.. அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன்.. “சார் இனிமேல் உங்களை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை உங்களிடம் கேள்வி கேட்கலாமா? ” என்றேன். கேளுங்கள் கேளுங்கள் என்றார்.

அப்போது.. “சார் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்களே? ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் அளிக்கும் போது..ஒரு காட்சியை சில நிமிடங்களில் எடுத்து முடித்து விடுவார்கள்.. ஆனால் அது பற்றிய சிந்தனையில் நமக்கு இருக்க வேண்டும்.

இதைத்தான் எனக்கு பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்தார்.. நான் சொன்னால் என் இயக்கத்தில் 100 பேர் நடிக்க காத்திருப்பார்கள்.. ஆனால் ஒரு ரஜினிகாந்த்தால் இந்த கேரக்டருக்கு.. இந்த காட்சிக்கு என்ன கொடுக்க முடியும் என யோசிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.. அதை இன்று வரை செய்து வருகிறேன்” என்றார் ரஜினிகாந்த்.

இப்போதும் கூட ஒரு சூப்பர் ஸ்டாராக தன்னை நினைக்கவில்லை கே பாலச்சந்தரின் மாணவராகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அதனால்தான் இன்னும் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டிருக்கிறார்”

என்றார் விக்ராந்த்.

Vikranth speech at Lal Salaam pressmeet

ரஜினி பட பிரஸ் மீட்டில் விஜய் – அஜித் குறித்து பேசிய விஷ்ணு விஷால்

ரஜினி பட பிரஸ் மீட்டில் விஜய் – அஜித் குறித்து பேசிய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.

இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசியதாவது…

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த ஐஸ்வர்யா ரஜினி க்கு நன்றி.. எனக்கு அரசியல் எதுவும் தெரியாது. ஆனால் சமீபத்தில் நான் போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது..

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல்கள் வந்தன. சிறு வயது முதலே இந்தியா என்பதை நாம் கேட்டு வருகிறோம்.. இப்போது ஏன் இந்த மாற்றம் என ஒரு பதிவிட்டேன். அப்படி என்றால் நீ ஒரு ஆன்ட்டி இந்தியனா நீ ஒரு இந்து விரோதியா? என பல விரோதிகளை பேசி இருந்தனர்.

இங்கு ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை. ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் மற்றவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அந்த கருத்தை மதிக்க வேண்டும்.. ஆனால் அவரை தாக்குவதையே குறியாக உள்ளனர்.

முக்கியமாக தல தளபதி என்பது குறித்து பேசினால் ஒருவரை பிடிக்கும் என்று சொல்ல முடியவில்லை.. சொன்னால் மற்றொரு தரப்பு எதிர்க்கிறது. ஒரு கருத்தை இங்கு பதிவிட முடியவில்லை.

‘லால் சலாம்’ படம் இது குறித்து தான் பேசுகிறது.. இங்கே பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். ஒவ்வொருவரின் கருத்துக்கும் கருத்துரிமையும் சுதந்திரமும் உள்ளது அதை மதிக்க வேண்டும் என்ற கருத்தை பேசி இருக்கிறது.”

என்றார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal speech about Rajini Vijay Ajith

ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையில் டூயட் பாடும் சிரஞ்சீவி – திரிஷா

ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையில் டூயட் பாடும் சிரஞ்சீவி – திரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஸ்டாலின்” படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத்
பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா
எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Chiranjeevi and Trisha pair in Keeravani music for Vishvambara

புதிய கூட்டணி அமைத்த விஷ்ணு விஷால் & அருண்ராஜா காமராஜ்

புதிய கூட்டணி அமைத்த விஷ்ணு விஷால் & அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவுப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் லேபிள் சீரிஸ் மூலம் சொல்லப்படாத களத்தில் அருமையான கருப்பொருளை பேசி பெரும் பாராட்டுக்களைக் குவித்தார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறியுள்ளது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.

ரஜினியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘லால் சலாம்’ வெளிவரவுள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vishnu Vishal starring in Arunraja Kamaraj directorial

இல்லற ஜோடிகளின் இன்றைய சவாலை சொல்லும் ‘வெப்பம் குளிர் மழை’

இல்லற ஜோடிகளின் இன்றைய சவாலை சொல்லும் ‘வெப்பம் குளிர் மழை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. மேலும், கடினமான பிரச்சனைகளை துணிச்சலாக எதிர்கொண்ட பல படங்கள், இயக்குநர்களின் அர்ப்பணிப்போடு பரவலான அளவில் பல தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான ‘வெப்பம் குளிர் மழை’ ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறுகிறார்.

படத்தின் மையக்கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாளுகிறது.

வெப்பம் குளிர் மழை

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘சுழல்’ வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் தயாரிப்பாளரான திரவ், கதையில் சிக்கலான முதன்மை கதாபாத்திரமான பெத்தபெருமாளாக நடிக்கிறார்.

திரவ் இதற்கு முன்பு நடிகர் கிஷோர் குமார் மற்றும் சுபத்ராவை வைத்து ஒரு இசை சார்ந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளிவர இருக்கிறது.

இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவர் ஏற்கனவே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் ‘பொம்மை நாயகி’ மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில், இன்றைய சமூகத்தில் உள்ள பெண்களின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியோடு கோபமான மாமியார் பாத்திரத்தை ரமா ஏற்று நடித்துள்ளார்.

வெப்பம் குளிர் மழை

*தொழில்நுட்ப குழு*

இசையமைப்பாளர்: ஷங்கர்
ரங்கராஜன்,
எடிட்டர்: திரவ்,
ஒளிப்பதிவாளர்: பிருத்வி ராஜேந்திரன்,
ஒலி வடிவமைப்பாளர்: ஆனந்த், திரவ், அருண்,
சண்டைக்காட்சிகள்: ஸ்டன்னர் சாம்,
கலை இயக்குநர்: பாலச்சந்தர்,
ஆடை: கீர்த்தனா,
பாடல் வரிகள்: திரவ்,
டிஐ: ஸ்ரீகாந்த் ரகு.

வெப்பம் குளிர் மழை

Veppam Kulir Mazhai deals with stigmatic threat to humanity

More Articles
Follows