என்றுமே நம்பர் 1.; விஜய் – அஜித்தால் நெருங்க முடியாத இடத்தில் ரஜினி சம்பளம்.!

என்றுமே நம்பர் 1.; விஜய் – அஜித்தால் நெருங்க முடியாத இடத்தில் ரஜினி சம்பளம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் வைத்து, ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாகவும் இருக்கிறது.

கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தொடங்கப் போவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஆனால், கைதி 2 படத்திற்கு முன், ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்றும், அதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் சம்பளம் குறித்து புதிய பேச்சு எழுந்துள்ளது.

லியோ படத்திற்கு விஜய் தற்போது 130 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சம்பள விஷயத்தில் ரஜினிதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்.

தர்பார், அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ஜெயிலர் படத்திற்கு 80 முதல் 90 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதாலும், லோகேஷ் இயக்கும் படத்துக்கு தயாரிப்பு நிறுவனங்களிடம் அதிக டிமாண்ட் இருப்பதாலும், அந்த படத்துக்கு ரூ. 160 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, தான் நம்பர் 1 என்பதை ரஜினிகாந்த் நிரூபிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

lokesh kanagarajs directorial in this much crore salary for rajini

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பட சூட்டிங்குக்கு தடை விதித்த கலெக்டர்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பட சூட்டிங்குக்கு தடை விதித்த கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பபை அப்பகுதியில் நடத்த தடை விதித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller shooting stoped thenkasi district collector order

ரோலெக்ஸ் போன்ற வெயிட்டான ரோலில் ரஜினியுடன் இணையும் நடிகர் சூர்யா !

ரோலெக்ஸ் போன்ற வெயிட்டான ரோலில் ரஜினியுடன் இணையும் நடிகர் சூர்யா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் ‘தலைவர் 170’.

இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஞானவேல் சூர்யாவை மனதில் வைத்து ‘தலைவர் 170’ படத்தில் பவர்ஃபுல் கேரக்டர் கொடுக்க இருப்பதாக கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அவரை படத்தில் கொண்டு வருவது குறித்து ரஜினியுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போலவே இந்த பாத்திரம் இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

Rajinikanth and Suriya to team up for new movie?

மேலாடையின்றி நடிக்கும் பாயல் ராஜ்புட் . வைரலாகும் போஸ்டர் !

மேலாடையின்றி நடிக்கும் பாயல் ராஜ்புட் . வைரலாகும் போஸ்டர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாயல் ராஜ்புட் தனது அடுத்த படமான ‘மங்களவாரம்’ படத்தில் மிகவும் தைரியமான மற்றும் அழகான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை ‘RX 100’ இயக்குனர் அஜய் பூபதி இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ‘ஜின்னா’ மற்றும் ‘டீஸ் மார் கான்’ படங்களில் நடித்த பாயல் ராஜ்புட் சமீபத்திய போஸ்டரில்
மேலாடையின்றி முதுகைக் காட்டுவது போல் தெரிகிறது.

இந்த போஸ்டரில் படத்தின் இயக்குனர் அஜய் ஒரு மறைவான செய்தியை வெளிப்படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.

Payal Rajput goes backless in ‘Mangalavaram’ poster

Looking for next Mr. X.: இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கௌதம் மேனன்

Looking for next Mr. X.: இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசை ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் அவரது திரைப்படங்கள், இசை ஆர்வலர்களுக்கு எவர்க்ரீன் கிளாசிக் பாடல்களைப் பரிசளித்துள்ளன.

அவரது ‘Ondraga’ யூடியூப் சேனலில் வெளியான சுயாதீன பாடல்கள் ஒரே இரவில் சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன. தற்போது, அந்த சேனல் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

‘For the Love of Music’ (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டர் இப்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவை இது திறக்கிறது.

மேலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த இசை ட்ராக்ஸ் அவர்களின் சேனலில் இடம்பெறும். அவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும்.

இசையமைப்பாளர்கள் மற்றும் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குநர்களில் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒருவர்.

இசைஞானி இளையராஜா, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பெரிய இசை ஆளுமைகளுடன் பணிபுரிந்த அவர், தர்புகா சிவாவுடன் இணைந்து ‘மிஸ்டர். எக்ஸ்’ என்ற ஒரு சார்ட்பஸ்டர் ஆல்பத்தை கொடுத்துள்ளார்.

எனவே இப்போது, ​​”Looking for next Mr. X” என்ற டேக்லைன் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மத்தியில் தற்போது சென்சேஷனாகி உள்ளது.

Ondraga மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் அடுத்த திறமை வாய்ந்த இசைக்கலைஞர் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gautham Menon gives opportunities to new musicians

தங்கைக்கு ரெண்டு.. தனக்கு ஒண்ணு.; கோடிகளை கொட்டிய நடிகை ஆலியா பட்

தங்கைக்கு ரெண்டு.. தனக்கு ஒண்ணு.; கோடிகளை கொட்டிய நடிகை ஆலியா பட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஆலியா பட்.

இவரது நடிப்பில் உருவான கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்திரா & RRR ஆகிய 3 படங்களும் கடந்த ஆண்டுகளில் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

கடந்த ஆண்டு 2022 பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துக் கொண்டார் ஆலியா.

இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கவே ராஹா என பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மும்பையின் பந்திரா அருகேயுள்ள பாலி ஹில் பகுதியில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு புதிய வீட்டை வாங்கி இருக்கிறாராம். இந்த வீடு ரூ. 38 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது

இந்த அடுக்குமாடி குடியிருப்பை தனது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் என்கிற நிறுவனத்தின் பெயரில் வாங்கினார் ஆலியா.

மேலும் தனது தங்கை ஷாஹீன் பட்டிற்கு பரிசாக கொடுக்க மும்பை ஜூஹூ பகுதியில் ரூ 8 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களையும் விலைக்கு வாங்கி உள்ளாராம் ஆலியா.

ஆலியா பட்

alia bhatt buys a premium apartment worth rupees 38 crores in mumbai

More Articles
Follows