தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானது.
ஞானவேல் இயக்கிய வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த டீசரில் ரஜினிகாந்த் பேசும் வசனம் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் குறி வச்சா எர விழனும் என ரஜினி மாஸாக ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பேசும் டயலாக் தற்போது வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார். அதில் இரு வேடன்கள் வேட்டைக்கு செல்கின்றனர்.
ஒருவன் வேட்டையாடி திரும்பி வருகிறார். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். அவனால் வேட்டையாட முடியவில்லை. ஆனாலும் அவனே வெற்றி பெற்றவன்” என பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினி பேசிய வசனம் ‘குறி வைச்சா எற விழனும்…’ என்ற பேசிய பஞ்ச் டயலாக் விஜய்க்கு எதிராக உள்ளதாக விஜய்யை கலாய்க்கும் வகையில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rajinis Vettaiyan punch dialogue trolls Vijay?