Upcoming Movies

  • Upcoming Movies
  • July
  • Sep

Videos

  • Teasers
  • Trailers
  • Videos Songs
  • Short films
  • Motion Poster
  • Sneak Peek

Who’s Japan? Intro Video (Tamil)

Japan Cast and Crew: Starring Karthi, Anu Emmanuel, Sunil, Vijay Milton & others. Directed by: Rajumurugan Production House: Dream Warrior Pictures Producers: S R Prakash

ARM Tamil Official Teaser

CAST: TOVINO THOMAS, KRITHI SHETTY, AISHWARYA RAJESH, SURABHI LAKSHMI, BASIL JOSEPH, ROHINI, HARISH UTHAMAN, NISTHAR SAIT, JAGADISH, PRAMOD SHETTY, AJU VARGHESE, SUDHEESH CREW: DIRECTOR: JITHIN

The Road – Exclusive Making Teaser

Movie Credits: Cast – Trisha, Dancing Rose Shabeer, Santhosh Prathap, Miya George, MS Bhaskar, Vivek Prasanna, Vela Ramamoorthy, Laxmi Priya and others Written & Directed

Mark Antony (Tamil) – Official Teaser

Movie Credits: Cast: Vishal, S.J.Suryah, Suneel, Selvaraghavan, Ritu, Abhinaya, Kingsley, Y.G.Mahendran Writer & Director: Adhik Ravichandran Production: Mini Studio Producer: S.Vinod Kumar Music: G.V.Prakash Kumar

Latest post

சினேகா நாயர்



பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தன் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை / தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது…

இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.

ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,

நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.

அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து *“UNSTOPPABLE”* புத்தகத்தை வெளியிட்டனர்.

Its not easy to work with men says Actress Sneha

விஜய் ஆண்டனி



விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து இயக்கி எடிட்டிங் செய்து நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.

இந்த படம் மே 12ஆம் தேதி வெளியானது.

இது ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

‘பிச்சைக்காரன் 2’ படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர்களுக்கு தன்னுடைய பங்களாவில் விருந்தளிப்பது போல காட்சி இருக்கும். அதனை தற்போது நிஜத்திலும் நிறைவேற்றியுள்ளார் விஜய் ஆண்டனி.

‘பிச்சைக்காரன் 2’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோர இருந்த பிச்சைக்காரர்களை ஒரு மிகப்பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு விருந்து உபசரிப்பு அளித்துள்ளார். அவர்களுக்கு உணவை பரிமாறி உள்ளார்.

இந்த காட்சி வீடியோ வெளியானது. இதை பார்த்த பல ரசிகர்களும் நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என விஜய் ஆண்டனி புகழ்ந்து வருகின்றனர்.

Actor Vijay Antony treat for Real Beggers

தாமரைச்செல்வி



நாட்டுப்புறப் பாடல்கள் பாடி தமிழக மக்களிடையே பிரபலமானவர் தாமரைச்செல்வி.

ஒரு கட்டத்தில் இந்த பிரபலம் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமான தாமரைச்செல்விக்கு தற்போது சினிமாவிலும் சீரியலிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவடையும் நிலையில் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தாமரைச்செல்வி.

இந்த நிலையில் தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலில் தாமரைச்செல்வி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

After ‘Bharathi Kannamma’, ‘Bigg Boss’ Thamarai Selvi will act another serial.

ஐஸ்வர்யா ராஜேஷ்



பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தன் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது…

முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.

ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம்.

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன்.

நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.. பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.

மைக் செட் ஸ்ரீராம் பேசும்போது,

மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். “UNSTOPPABLE” என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர்.

இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார்.

இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Aishwarya Rajesh open talk about Single mother growth

மீனா சாப்ரியா



பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

யார் இந்த மீனா சாப்ரியா?

17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்தார்.

பிவிஆர் குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.

இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பேசியதாவது…

எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி.

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி.

அண்ணாதுரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை.

நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது.

நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன்.

நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப்பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.

ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது..

எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.

மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார்.

Corporate Icon Meena Chabbria Launches Her Autobiography Unstoppable

அடா சர்மா



தமிழில் பிரபுதேவாவுடன் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்தவர் அடா சர்மா.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’.

இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்களில் போராட்டங்கள் நடந்தன.

இதனால் மேற்கு வங்காளத்தில் படம் தடை செய்யப்பட்டது.

தமிழக தியேட்டர்களில் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ள அடா சர்மாவுக்கு மிரட்டல்கள் வந்தன.

இந்த நிலையில், அடா சர்மா அளித்துள்ள பேட்டியில். “சில தினங்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணை விஷமிகள் இணைய தளத்தில் கசிய விட்டனர்.

இதனால் பலர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினர்.

ஒரு பெண்ணின் செல்போன் நம்பரும் மார்பிங் செய்த ஆபாச படங்களும் இணையத்தில் வெளியானால் மனம் என்ன பாடுபடும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன்.

தி கேரளா ஸ்டோரி படத்திலும் ஒரு பெண்ணின் போன் நம்பர் பகிரங்கமாக வெளியாகும்போது அந்த பெண் அடையும் வேதனைகளை காட்டி உள்ளனர்.

அதனை எனக்கு ஏற்பட்ட சம்பவம் நினைவுப்படுத்தியது. எனது செல்போன் நம்பரை வெளியிட்டவர் நிறைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்” என்றார்.

Adah Sharma phone number and Pornography leaked on the internet

அறமுடைத்த கொம்பு



திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் ‘நெல்லை கீதம்’ ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன், கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

Aramudaitha Kombu audio launch

இர்பான்



பிரபல யூடியூபர் இர்பான் உணவு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்.

இவர் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளையும் விவரித்து வீடியோ போட்டு வருகிறார்.

இவரது யூடியூப் சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் கார் வந்துள்ளது.

அப்போது, அந்த கார் எதிரே வந்த பத்மாவதி(55) மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் youtuber இர்ஃபான் இருந்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, இர்பானின் காரை அசாரூதின் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman dies after youtuber Irfan’s car hits her near Chennai

ஜெபர்சன் மச்சாடோ



பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் வசித்துவந்த நடிகர் ஜெபர்சன் மச்சாடோ.

இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் ஜெபர்சன் மச்சாடோவை காணவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜெபர்சன் மச்சாடோ செல்போனில் இருந்து குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அதில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதால் எனது மகன் அனுப்பியது இல்லை என்றும் அவரது தாய் மரியா தாஸ் போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து 4 மாதங்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார் நடிகர் ஜெபர்சனின் உடலை அந்த நடிகருக்குச் சொந்தமான ரியோ தோட்டத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

நடிகர் ஜெபர்சன் மச்சாடோவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு மரத்தடியின் கீழ் 6.5 அடி ஆழத்தில் ஒரு மரப்பெட்டிக்குள் உடலை வைத்து சங்கிலியால் பிணைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அதே தோட்டத்தில் வாடகைக்கு குடியிருந்தவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Missing Brazilian Actor Jefferson Machado Found Dead In Wooden Trunk Buried

கமல்



விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதன் ஒரு பகுதியாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IFFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.

அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

kamal haasan ‘the kerala story’ this story is not true says

ஷர்வானந்த்



கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகரான ஷர்வானந்த்.

சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் நகர் ஜங்க்ஷனில் தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றிருக்கிறார் ஷர்வானந்த்.

காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்பொழுது தவறான பாதையில் வந்த பைக்குடன் மோதுவதை தவிர்க்க முயற்சி செய்தாராம் ஷர்வானந்த். அந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.

ஷர்வானந்த் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தக்க சமயத்தில் ஷர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மேலும், நடிகர் ஷர்வானந்துக்கு விபத்தின் போது காயம் எதுவும் இல்லை. ஷர்வானந்த் நலமாக இருக்கிறார். அவரை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஷர்வானந்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Actor Sharwanand mets with car accident in Hyderabad

கே.வாசு



தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கே.வாசு.

கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

சிரஞ்சீவி முதலில் நடித்தது ‘புனிதக் ரால்லு’ என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய ‘பிராணம் கரீது’ படம் திரைக்கு வந்து விட்டது.

கே.வாசு இயக்கிய ‘ஸ்ரீ சீரடி சாய்பாபா’ படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.

இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 72.

இயக்குனர் கே.வாசு மறைவுக்கு திரையுலகினர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Filmmaker K Vasu, who introduced Chiranjeevi passes away

Follows