தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது.
இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வரவுள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் முக்கிய தலைவர்களுக்கும், பல திரையுலக பிரபலங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்க்கும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு…
அயோத்தி, ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் *திரு.ரஜினிகாந்த்* அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழை கொடுப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார்*, தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு).பிரகாஷ்*, மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர்*, மாநகர் பொறுப்பாளர் ராம்குமார்* மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.
நிச்சயமாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாகக் கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக ரஜினிகாந்த் அவர்கள் கூறி, பயபக்தியுடன் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டாராம்.
Rajinikanth invited for Ayothi New Ramar Temple at UP