‘பத்து தல’ சிம்பு படத்தை முடித்துவிட்டு ‘செல்லப்பிள்ளை’ ஆக மாறும் கௌதம் கார்த்திக்

‘பத்து தல’ சிம்பு படத்தை முடித்துவிட்டு ‘செல்லப்பிள்ளை’ ஆக மாறும் கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை குவித்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது SST Productions தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் “செல்லப்பிள்ளை” படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இப்படத்தின் முதல்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக முன்னணி நடிகர்கள் குழு மற்றும் பிரபல தொழில்நுட்ப கலைஞரகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அடுத்த மாதத்தில் மொத்த படக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது…

இது ஒரு மாஸ் கலந்த ஆக்சன் படம். கௌதம் கார்த்திக் இது வரையிலும் செய்யாத புது மாதிரியான படமாக இப்படம் இருக்கும். அவர் தற்போது மிக முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார்.

அப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாய் முடிந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.

இப்படத்திற்கு நாயகனாக கௌதம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி கூறும்போது…

“அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக்கை போலவே கௌதம் கார்த்திக அவர்களும், எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் மிக எளிதாக பொருந்தி போக கூடியவர்.

ஆகவே எனது திரைக்கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் சரியாக அவர் பொருந்திப் போவார் என நினைத்தேன்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாப்பாத்திரம் கண்டிப்பாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.

“செல்லப்பிள்ளை” படத்தின் பெயர்க்காரணம் குறித்து கூறும்போது…

“கதைக்காக மட்டும் இந்த தலைப்பை வைக்கவில்லை, கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமன் மற்றும் தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் ரசிகர்களால் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்படுகிறார்.

அவர் அனைத்து தலைமுறையினராலும் அன்போடு நேசிக்கப்படுகிறார். அதனால் “செல்லப்பிள்ளை” தலைப்பு மிகச் சரியான தலைப்பாக இருக்கும்.

தற்போது கௌதம் கார்த்திக் தமிழில் முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசன் TR உடன் இணைந்து “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மதுரையை பின்னணி களமாக கொண்டு உருவாகும் புதியதொரு குற்ற விசாரணை செய்யும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

Gautham Karthik next film is titled Chella Pillai

பீர் குளியல்… கால விரிக்க யோசிச்சிருக்கனும்..; காதலர் தினத்தில் BACHELOR செய்த அடாவடிஸ்

பீர் குளியல்… கால விரிக்க யோசிச்சிருக்கனும்..; காதலர் தினத்தில் BACHELOR செய்த அடாவடிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள படம் ‘பேச்சிலர்’ Bachelor.

இப்பட டீசர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இந்த டீசரில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு காட்சியில் பீரில் குளிக்கிறார். F–K மயிர், கால விரிக்க யோசிச்சிருக்கனும், ஓ— உள்ளிட்ட பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

இப்படம் குறித்த இதர தகவல்கள் இதோ…

Axcess Film Factory தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர்.

Axcess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது….

எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம்.

வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம்.

இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல.

இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்.

ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது…

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம்.

இளம்பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜீவி பிரகாஷ் குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார்.

படத்தின் டீஸர், இப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம்.

ஆனால் இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை.

வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்களுக்கு நன்றி.

திவ்யபாரதி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீ.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வருகிறார் இந்த பேச்சிலர்.

Audience response on Bachelor teaser

அதர்வா & அனுபமா இணைந்த படம் இனியும் தள்ளிப் போகாமல் விரைவில் திரையில்.!

அதர்வா & அனுபமா இணைந்த படம் இனியும் தள்ளிப் போகாமல் விரைவில் திரையில்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் உலுவாகியுள்ள காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே”.

இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது.

சமீபத்தில் கண்ணன் இயக்கிய ‘இவன் தந்திரன்’ எனும் ஆக்சன் கமர்ஷியல் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

இதனை தொடந்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார்.

முழுக்க முழுக்க காதல், நகைசைவை, உணர்வுகள் நிரம்பிய அழகான குடும்ப படத்தினை இயக்கியுள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ் ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல், அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் திரை வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Atharvaa’s Thalli Pogathey is ready for release

AVM-க்குள் சசிகலா பெயரில் புதிய நிறுவனம்.; பாக்யராஜ் தன்ஷிகா அம்ரீஷ் பங்கேற்பு

AVM-க்குள் சசிகலா பெயரில் புதிய நிறுவனம்.; பாக்யராஜ் தன்ஷிகா அம்ரீஷ் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AVMகொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது.

மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் “Freedom of Film making ” எனும் தாராக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன.

இதனை பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

இதில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்..” இது வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது.

மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள்”/என கூறியிருந்தார்.

அதற்கடுத்து நடிகை தன்ஷிகா அவர்கள் பேசுகையில்…

“நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர்.

அத்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு எனக் கூறியிருந்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்கள் பேசுகையில்…

” குட்டி எவிம் விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும்.

IMG-20210215-WA0018

Sasikala production company in AVM studio

வாதாபிராஜனாக ‘ருத்ரதாண்டவம்’ ஆடும் கௌதம் மேனன்..; ‘திரௌபதி’ இயக்குனருடன் கூட்டணி

வாதாபிராஜனாக ‘ருத்ரதாண்டவம்’ ஆடும் கௌதம் மேனன்..; ‘திரௌபதி’ இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menonஜி மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே தனது அடுத்த படத்தின் வேலையை உடனே துவக்கினார் மோகன்.

அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘ருத்ரதாண்டவம்’ என அறிவித்தார்.

திரௌபதி பட ஹீரோ ரிச்சர்ட் இதிலும் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாதாபிராஜன் என்ற முக்கிய கேரக்டரில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Gautham Menon joins with Mohan for Ruthra Thandavam movie

ஆதரவற்ற குழந்தைகளை காதலிக்கும் சாக்ஷி அகர்வால்..; வழக்கம்போல காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடினார்.!

ஆதரவற்ற குழந்தைகளை காதலிக்கும் சாக்ஷி அகர்வால்..; வழக்கம்போல காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடினார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வேலன்டைன்ஸ் டே’ என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்!

ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.

தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.

அவரிடம் பேசினோம்… ” ‘வேலன்டைன்ஸ் டே’வை உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன்.

யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.

மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன்.

அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.

போன வருஷ காதலர் தினத்தை, ‘எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன்.

‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.

இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்றார்.

‘குட்டி ஸ்டோரி’ படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘டெடி’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘தி நைட்.’

விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். ‘அரண்மனை 3’யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.

Sakshi Agarwal Celebrated Valentines day with Childrens

More Articles
Follows