சிம்பு படம்.. நரிக்குறவருக்கு அனுமதி ரத்து – தியேட்டர் மீது வழக்கு.; வட்டாட்சியர் விசாரணை

சிம்பு படம்.. நரிக்குறவருக்கு அனுமதி ரத்து – தியேட்டர் மீது வழக்கு.; வட்டாட்சியர் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.

இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கி தியேட்டரில் படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வீடியோக்களையும் அவர்கள் பதிவிட்டனர்.

ஆனால் இந்த விவகாரம் திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது

திரைப்படம் பார்க்க வந்தவர்களை அனுமதிக்காத புகாரில் ரோகிணி தியேட்டர் பணியாளர் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகார் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

ரோகிணி திரையரங்கில் வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில், காவல்துறை நடவடிக்கை.

வழக்கு விவரம்…

*K11 CR:no.183/2023*
*U/s 341 IPC r/w 3(1)(X1V) SC/ST ACT 1989*

D/o 30/03/2023 @ 08:00 hrs
D/r 30/03/2023 @ 16:00 hrs

SOC:
ரோகினி திரையரங்கம் உள் வளாகம்
100 அடி சாலை கோயம்பேடு

FIR : Inspr K11 PS

*IO:*
Koyambedu Range
AC

*Complaint*
காவேரி பெ/வ 20
க/பெ செல்வம்
சோலை அம்மன் கோவில் தெரு, அலமாதி கிராமம்,
அலமாதி
திருவள்ளூர் மாவட்டம்

(ST – Kemba Telugu)

*Accused*
டிக்கெட் பரிசோதகர், ரோகிணி திரையரங்கம்.

____________________

*Previous message*
Good morning Sir
Koyambedu district
K11 CMBT PS
30/03/2023

*சிம்பு ரசிகர் மன்றத்தால் கிடைத்த டிக்கெட்டின் மூலம் படம் பார்க்கச் சென்று நரிக்குறவர்கள் மற்றும் சிறுவர்களை அனுமதிக்க மறுத்தது தொடர்பாக*

*D/0* 30/03/2023 @ 08.00hrs
*D/R*:30/03/2023 @
11.30hrs

*S0C*
ரோகினி திரையரங்கம் 100 அடி சாலை கோயம்பேடு

1.ராமலிங்கம் M/50
S/0 மணிமுத்து
No,6/22 தெற்கு மாட வீதி கோயம்பேடு
சென்னை _107
*Work: கேசியர் ரோகினி திரையரங்கம்*

2. குமரேசன் M/36
S/0 சின்ன குழந்தை
வேலூர் மாவட்டம்
Work: Security
(திரையரங்கில் தங்கி வேலை செய்பவர்)

*Gist*
08.00 மணிக்கு k11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோகிணி திரையரங்கில் சிம்பு நடித்த 10 தல திரைப்படம் 4 திரையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது திரையரங்கத்திற்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் வருகையின் போது
பாதுகாவலர்கள் (Bouncers) பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினர்.

அதற்கு தங்களை தியேட்டர் உரிமையாளர்கள் தடுப்பதாக நினைத்து மேலும் உஷா ராஜேந்தர் அவர்களை பேட்டி எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் youtube சேனல்கள் திரையரங்கத்தில் உள்ளே வீடியோ கேமராக்களை எடுத்துச் செல்ல முற்பட்டபோது திரையரங்க பாதுகாப்பிலிருந்த பாதுகாவலர்கள் வீடியோ கேமராக்களை திரையரங்கத்தின் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர் இதனால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் youtube சேனல்கள் கோபமடைந்தனர்.

மேலும் தியேட்டர் வளாகத்திற்குள் பிச்சை எடுப்பதற்கு நின்றிருந்த நரிக்குறவர்களிடம் சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்த அவர்கள் திரைப்படத்தின் டிக்கெட்டை இலவசமாக கொடுத்தனர்.

அதனை பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் நரிக்குறவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 15 நரிக்குறவர்கள் படம் பார்க்க வரும்போது நுழைவாயில் பாதுகாப்பு அலுவலில் இருந்த குமரேசன் 36 S/0 சின்ன குழந்தை என்பவர் படம் U/A சர்டிபிகேட் உள்ளதால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியதாகவும் அதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் அறிந்து ரோகிணி திரையரங்கத்தில் கேசியர் திரு. ராமலிங்கம் அவர்கள் வந்து நரிக்குறவர்களுக்கு விளக்கி சொல்லியும் புரியாததால் அனைவரையும் திரையரங்கத்திற்குள் அனுமதித்து அவர்களுக்கு இலவசமாக பாப்கான்கள் வழங்கி அவர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு 10.45 மணிக்கு திரையரங்கத்திலிருந்து மகிழ்ச்சியாக சென்றனர் விசேஷம் ஒன்றுமில்லை.

*குறிப்பு*:
மேற்படி நரிக்குறவர்கள் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே தங்கி வசித்து வருகிறனர்

மேலும் இது சம்பந்தமாக ரோகிணி திரையரங்கம் எங்கள் திரையரங்கத்தில் வரும் அனைத்து பொது மக்களுக்கும் அனுமதி சீட்டு வைத்திருக்கும் பட்சத்தில் அனைவரும் படம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் அவர்களை பாதுகாப்பாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் அனுப்புவது தான் எங்களின் முதல் வேலை என எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர்.

Narikurava people denied entry at Rohini theatre to watch Pathu Thala

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.

இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கியது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விளக்கமே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குறவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வயது பிரச்சனை.?

இதே வயதுள்ள குழந்தைகளை மக்கள் அழைத்து வரவில்லையா.? அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi and GV Prakash on Nari Kurava entry refused at Rohini Screens

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் தந்தை பாலக்காடு சுப்ரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

எனவே பல திரைக் கலைஞர்களும் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

ரசிகர்களும் தங்களது ஆறுதல்களை இணையதளங்களை பதிவிட்டனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அஜித்திற்கு ஆறுதல் இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

அதுபோல நடிகர் அஜித்தும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Ajith wishes EPS on becoming AIADMK’s general secretary

கரகாட்டக்காரன் 2..: இளையராஜா – கங்கை அமரன் வாரிசுகள் கூட்டணி

கரகாட்டக்காரன் 2..: இளையராஜா – கங்கை அமரன் வாரிசுகள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1989 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன்.

இப்படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில் சந்தான பாரதி, கோவை சரளா, வடிவுக்கரசி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்தார்கள்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்தப் படம் திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் ஓடி மகத்தான சாதனைப் படைத்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய கங்கை அமரனின் மகனும், இயக்குனருமான வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளாராம்.

மேலும், இளையராஜாவுக்கு பதிலாக யுவன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு

Venkat Prabhu plans to direct Karakattakaran 2 movie

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான படம் ‘பஹீரா’.

இப்படத்தில் அமிரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 3-ம் அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தை OTT இல் வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், ‘பஹீரா’ படத்தை மார்ச் 31 முதல் பிரபலமான ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீரா

Prabhu Deva’s ‘Bagheera’ to stream on OTT from March 31

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை, ‘ஜவான்’ அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படலாம் என்று பல தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ‘ஜவான்’ படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும், மே மாதம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவதுமாக தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நான்காவது முறையாக விஜய்யுடன் அட்லீ கைகோர்க்கவுள்ளதாகவும் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

ஜவான்

‘Jawan’ is all set to release on June 2

More Articles
Follows