தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை முடித்துவிட்டு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
இதனிடையில் ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார்.
இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது சிம்பு நடிப்பில் உருவாக 48வது படமாகும்.
இதில் நாயகியாக சாய் பல்லவி நடிப்பார் எனக் கூறப்படுகிறது்
இந்த நிலையில் சிம்புவின் 49 படத்தின் பற்றிய தகவல் வந்துள்ளது.
அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் சிம்பு இணைவார் என தகவல்கள் வந்துள்ளன.
சமீபத்தில் சிம்புவை சந்தித்து இயக்குனர் ஒன் லைன் சொன்னதாகவும் அதற்கு சிம்பு ஓகே சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.
STR49 will be directed by Por Thozhil director Vignesh Raja