EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 – 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்தது அதிகாலை சிறப்பு காட்சிகள்.

ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் சிறப்பு காட்சிகளுக்கு அரசும் அனுமதி வழங்கியது.

ஒரு படம் ரிலீசாகும் நாள் அன்று நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4 – 5 மணி காட்சிகள் என சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாகிவிட்டது.

அந்த சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்களும் டிக்கெட் விலையை தாறுமாறாக விற்றனர்.

ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் வரை விலை கொடுத்து படத்தை பார்த்து வந்தனர்.

நள்ளிரவில் கண் விழித்து தியேட்டர் வாசலில் விடிய விடிய காத்துக் கிடந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் இரவெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர்.

அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் தங்கள் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே சின்ன படங்கள் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுடைய ஆட்களை வைத்தாவது அதிகாலை சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாலை சிறப்பு காட்சி வசூலில் யார் முன்னணி.? என்ற கருத்துக் கணிப்புகளும் அதிக அளவில் நடைபெறுகிறது.

இவை இல்லாமல் மக்கள் விமர்சனங்களை பதிவு செய்ய பல்வேறு மீடியாக்களும் நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும். இதனால் தியேட்டருக்கு அருகே உள்ள வசிப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தும் வருகின்றனர்.

இந்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் வெளியானது.

இதில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு படங்களும் ஒரே தியேட்டரில் வெளியாகும் போது பல இடங்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில இடங்களில் காட்சிகளை திரையிட விடாமல் ரசிகர்கள் தியேட்டர்களை நாசம் செய்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை & நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் துவங்குகிறது. அதுபோல சிம்புவின் சகப் போட்டியாளராக கருதப்படும் தனுஷின் ‘நானே வருவேன்’ & ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.

தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒரு புதிய பாதையில் பயணிப்பதாக திரைப்பட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோர்களும் பின்பற்றுவார்களா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Simbu and Dhanush decision on FDFS fans show. Will top actors accept?

சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடம் மீண்டும் திறப்பு.; நடந்தது என்ன.?

சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடம் மீண்டும் திறப்பு.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 11 அன்று சௌத் இந்தியன் சினி, டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் இயங்கி வந்த அலுவலக கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இன்று 29-03-2023 புதன்கிழமை, காலை சுமார் 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து, நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 17-04-2023 வரை அவகாசம் அளித்து, காவல்துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து, கட்டிடத்தை திறந்தனர்.

சட்டபூர்வ செயல்பாடுகள் பூர்த்தியானதும் டப்பிங் யூனியன் வசம் இடம் மீண்டும் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.

டப்பிங் யூனியன் நிர்வாகிகளான உபதலைவர் கே.மாலா, செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செபாஸ்டியன், ப்ரதீப்குமார், சரவணன், சதீஷ் நாகராஜ் ஆகியோருடன் பொருளாளர் ஷாஜிதா மற்றும் பொதுச் செயலாளர் டி.என்.பி.கதிரவன் மற்றும் மேலாளர் அம்மு ஆகியோர் உடன் இருந்தனர்.

“கடந்த காலங்களில் டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் சிலர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் நீக்கப்பட்டனர்.

அதில் பி.ஆர்.கண்ணன் என்பவருக்கு மட்டும் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை உள்ளதால் அவர் இன்னும் உறுப்பினராக உள்ளார். அவர் நீக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டு இன்னும் சிலரை தூண்டி 2014 முதல் டப்பிங் யூனியனுக்கு எதிராகவும் , அதன் தலைவர் “டத்தோ” ராதாரவி அவர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக பல அவதூறுகளை பரப்பி 2018ல் நடந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி, தேர்தலில் தோற்றார்கள்.

அடுத்து 2020ம் ஆண்டு தேர்தலில் அதை விட மோசமாக தோற்றார்கள். 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் 23 பதவிகளுக்கு போட்டியிட 23 வேட்பாளர்கள் கூட இல்லாமல் வெறும் 11 பேர் மட்டுமே போட்டியிட்டு ஒருவர் கூட டெபாசிட் வாங்கவில்லை.

இதுதான் அவர்களது தரம் மற்றும் நிலைமை. உண்மை என்றுமே மாறாது. ஆனால் பொய் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அவர்களோடு இருந்த பலரே அவர்களை விட்டு விலகி விட்டார்கள்.

நேர்மையாக இருக்க முடியாதவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தலைவரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எத்தனையோ நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் டப்பிங் பேசி அதில் இருந்து கொடுத்த 5 சதவீதத்தை சிறுக சிறுக சேமித்து அந்த பணத்தில் கட்டிய இந்த கட்டிடத்தை பாதித்துள்ளனர். சிறியதொரு குறையை வைத்து எங்கள் கட்டிடத்தை இடிக்க அவர்களின் தீய முயற்சி இது.

டப்பிங் யூனியன் இருந்த கட்டிடத்திற்கு தடை ஏற்படுத்தலாம், ஆனால் டப்பிங் யூனியனை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

எங்கள் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் சிறப்பான தலைமையில் இதே இடத்தில் , “டத்தோ ராதாரவி வளாகம்” மீண்டும் சீரியதொரு எழுச்சி பெறும். டப்பிங் யூனியன், தனது உறுப்பினர்களுக்காக தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்படும்,” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Reopening of Sealed Dubbing Union Building.; what happened.?

ஒரு வாரத்திற்கு ஐரோப்பாவை அதிர வைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா

ஒரு வாரத்திற்கு ஐரோப்பாவை அதிர வைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுடன் ஐரோப்பாவை கலக்கவுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

சங்கர் மகாதேவன், ஹரிசரண், பிரேம்ஜி மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி இசைக்கலைஞ‌ர்கள் யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைகிறார்கள்.

சமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தவுள்ளார்.

“ஹை ஆன் யுவன் – லைவ் இன் ஐரோப்பா” என்ற தலைப்பில், ஃபாக்ஸ் (Foxx), நிமா (Nima) மற்றும் ஃபிரேம் (Frame) ஆகியவை யு1 ரிகார்ட்ஸ் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஃபோன்கேர் (Phonecare), அகிலம் (Agilam), கரிகாலா (Karikaala) சொக்கா (Sokka) மற்றும் ஆர்ட் டெகோ பிரஸ் (Art Deco Press) ஸ்பான்சர்களாக உள்ள நிலையில், லண்டனுக்கான‌ மீடியா பார்ட்னராக ஏஜேஎஸ் ஈவென்ட்ஸ் (AJS Events) உள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி ஓபர்ஹவுசனிலும், ஏப்ரல் 2 அன்று பாரிஸிலும், ஏப்ரல் 7 அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். highonu1.com எனும் பிரத்யேக இணையதளத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, ச‌ங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் யுவன்” நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிரபல‌ பாடல்கள் இந்த நிகழ்வுகளின் போது இசைக்கப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் பலர் யுவனின் ரசிகர்களாக இருப்ப‌தால், இந்நாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ரசிகர்களுக்கு இசை விருந்தாக இந்த நிகழ்ச்சிகள் அமைவதை உறுதிசெய்ய, விரிவான ஏற்பாடுகளை செய்யபட்டு வருகின்றன. யுவனின் நேரலை நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்கான ரசிகர்களின் நெடுநாள் கனவு இதன் மூலம் நிறைவேற உள்ளது.

Yuvan to rock Europe with grand concerts in Germany France UK

Little Maestro #YuvanShankarRaja to rock Europe with grand concerts in Germany, France, UK

Over 20 top musicians including @Shankar_Live @HaricharanMusic @Premgiamaren @andrea_jeremiah to join #Yuvan

Tickets are available on highonu1.com

@thisisysr @onlynikil

விக்ரம் டப்பிங் பேசி அஜித் அறிமுகமான ‘அமராவதி’ மீண்டும் ரிலீஸ்

விக்ரம் டப்பிங் பேசி அஜித் அறிமுகமான ‘அமராவதி’ மீண்டும் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் தன் சினிமா பயணத்தை தொடங்கி தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஜித்.

1993 வெளியான ‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அஜித் ஜோடியாக சங்கவி நடிக்க மற்றும் நாசர், தலைவாசல் விஜய், சார்லி உட்பட பலர் நடித்திருந்தனர்.

செல்வா இயக்கிய இந்த படத்தை சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் இதைத் தயாரித்திருந்தார்.

பாலபாரதி இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது..

தாஜ்மஹால் தேவையில்லை… புத்தம் புது மலரே… உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.

இந்த படத்தில் அஜித்துக்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசினார்.

இந்த நிலையில் இப்படம் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதால் அதற்கான வேலைகள் நடக்கிறது.

மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம்.

Amaravathi movie to re release on Ajith’s birthday

தாயகம் விட்டு தாய்லாந்து பறக்கும் ‘இந்தியன்’ கமல்

தாயகம் விட்டு தாய்லாந்து பறக்கும் ‘இந்தியன்’ கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிடவுள்ளார்.

மேலும், ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்தவுடன் அவர் தாய்லாந்து நாட்டுக்கு சென்று நாளை முதல் ‘இந்தியன் 2’ படத்திற்கான தனது பணியைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan to leave for Thailand to shoot ‘Indian 2’

‘விடுதலை’யில் இளையராஜாவின் வாய்ப்பை தவற விட்ட பவானி ஸ்ரீ

‘விடுதலை’யில் இளையராஜாவின் வாய்ப்பை தவற விட்ட பவானி ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிப்பவர் ஜி‌வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ .

இவர் தனது சமீபத்திய பேட்டியில் “எனது குடும்பத்தில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இசையுடன் தொடர்புடையவர்கள், ஆனால் நான் மட்டும் இசையில் ஆர்வம் காட்டவில்லை.

இளையராஜா சார் எனக்கு அவரது இசையில் ஒரு பாடலைப் பாட வாய்ப்பு வழங்கியபோதும் நான் அதை செய்யவில்லை” என்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் விடுதலை படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

GV Prakash’s sister reveals that she turned down the chance to sing in Ilaiyaraaja’s music

More Articles
Follows