தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 10 – 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்தது அதிகாலை சிறப்பு காட்சிகள்.
ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் சிறப்பு காட்சிகளுக்கு அரசும் அனுமதி வழங்கியது.
ஒரு படம் ரிலீசாகும் நாள் அன்று நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4 – 5 மணி காட்சிகள் என சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாகிவிட்டது.
அந்த சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்களும் டிக்கெட் விலையை தாறுமாறாக விற்றனர்.
ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் வரை விலை கொடுத்து படத்தை பார்த்து வந்தனர்.
நள்ளிரவில் கண் விழித்து தியேட்டர் வாசலில் விடிய விடிய காத்துக் கிடந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் இரவெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர்.
அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் தங்கள் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே சின்ன படங்கள் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுடைய ஆட்களை வைத்தாவது அதிகாலை சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்.
மேலும் அதிகாலை சிறப்பு காட்சி வசூலில் யார் முன்னணி.? என்ற கருத்துக் கணிப்புகளும் அதிக அளவில் நடைபெறுகிறது.
இவை இல்லாமல் மக்கள் விமர்சனங்களை பதிவு செய்ய பல்வேறு மீடியாக்களும் நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.
ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும். இதனால் தியேட்டருக்கு அருகே உள்ள வசிப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தும் வருகின்றனர்.
இந்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் வெளியானது.
இதில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு படங்களும் ஒரே தியேட்டரில் வெளியாகும் போது பல இடங்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சில இடங்களில் காட்சிகளை திரையிட விடாமல் ரசிகர்கள் தியேட்டர்களை நாசம் செய்தனர்.
இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை & நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.
முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் துவங்குகிறது. அதுபோல சிம்புவின் சகப் போட்டியாளராக கருதப்படும் தனுஷின் ‘நானே வருவேன்’ & ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.
தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒரு புதிய பாதையில் பயணிப்பதாக திரைப்பட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோர்களும் பின்பற்றுவார்களா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
Simbu and Dhanush decision on FDFS fans show. Will top actors accept?