தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு ‘பத்து தல’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இப்படத்திற்கு பிறகு, ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 49’ படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.
இப்படத்தை வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்க உள்ளது.
இந்நிலையில், சிம்புவின் 50வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சிம்பு இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
simbu’s STR50 will be directed by director manirathanam