‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் இணையும் மூன்றாவது நாயகி

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் இணையும் மூன்றாவது நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரியா பவானி சங்கர் இடம்பெறாத படங்களை இல்லை எனும் அளவுக்கு பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

தனுசு உடன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார். சிம்புவுடன் ‘பத்து தல’, அருண் விஜய்யுடன் ‘யானை’ உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் பிரியா பவானி சங்கர் இணைவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா கெசன்ட்ரா ஆகிய இரு நாயகிகள் உள்ள நிலையில் மழ3வது நாயகியாக பிரியா இணைகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாய் நாட்டில் உள்ள அஜர்பைஜான் என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர்

Priya Bavani Shankar join with Ajith and Trisha is Vidamuyarchi

7AM காட்சிக்கு அரசே அனுமதித்தாலும் திரையிட முடியாது.. – தியேட்டர் உரிமையாளர்கள்

7AM காட்சிக்கு அரசே அனுமதித்தாலும் திரையிட முடியாது.. – தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை 9:00 மணிக்கு தான் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம்.

அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.. 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசை தயாரிப்பு நிறுவனம் நாடலாம் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் இது தொடர்பான ஆலோசனை ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர்கள் கூறியதாவது..

“அக்டோபர் 20ஆம் தேதி முதல் லியோ டிக்கெட் விற்பனைகளை ஏற்கனவே புக்கிங் செய்து விட்டோம்.

19ஆம் தேதிக்கு சில திரையரங்குகளில் 9 மணி காட்சிகள் புக்கிங் செய்யப்பட்டு விட்டன. இப்போது திடீரென அரசு 7:00 மணி காட்சிக்கு அனுமதி அளித்தாலும் அது முடியாது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உருவாகும்” என அவர்கள் தெரிவித்தனர்.

7am shows not possible for Leo movie

தலைமை செயலகத்தில் ‘லியோ’ வழக்கறிஞர்கள் வந்த கார் விபத்து

தலைமை செயலகத்தில் ‘லியோ’ வழக்கறிஞர்கள் வந்த கார் விபத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை 9:00 மணிக்கு தான் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம்.

அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.. 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசை தயாரிப்பு நிறுவனம் நாடலாம் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த இருந்தனர்.

அவர்கள் உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லி இருந்தனர்.

அப்போது அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

லியோ

Leo movie advocates car met with accident

இனி தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியிடுவது இல்லை – திருப்பூர் சுப்ரமணியம்

இனி தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியிடுவது இல்லை – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ட்ரெய்லர்கள் வெளியிடுவது வழக்கம்.

இந்த ட்ரெய்லர் வெளியிடப்படும்போது ரசிகர்களை அனுமதிப்பது ஒரு சில திரையரங்குகள் செய்து வருகின்றன.

சமீபத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் டிரைலர் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இலவசமாக ஐந்து நிமிடங்களுக்கு திரையிடப்பட்டது. அந்த ஐந்து நிமிடங்கள் கழித்த பிறகு தான் தியேட்டர் நாசமானது நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.

தியேட்டரில் உள்ள அனைத்து சீட்டுகளையும் அடித்து நொறுக்கி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு விஜய் தரப்பில் இருந்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடப்படவில்லை.்தயாரிப்பு நிறுவனமும் இதை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளோம்” என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Movie trailers will not be released in theatres

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.? இமானின் முதல் மனைவி ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.? இமானின் முதல் மனைவி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய விளம்பரப் படங்களில் இசை அமைத்த பிறகு தான் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் இமான். இன்று வரை சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஒலிப்பது இவரது இசை தான்.

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். 100 படங்களை கடந்த பின்பு தான் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்தார் இமான்.

தமிழ் சினிமாவின் மெலோடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இமான். சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எனவே இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் திடீரென சமீப காலமாக இருவரின் நட்புக்கு இடையே பிரிவு உண்டானது.

“சிவகார்த்திகேயன் ஒரு துரோகி.. இனி என் வாழ்வில் அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். என்னுடைய பர்சனல் விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது என சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார் இமான்.

இந்த நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா ஒரு ஊடகத்திற்கு தன் மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது..

“இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு இருந்தது. என்னை இமான் விவகாரத்தை செய்ய நினைத்தபோது சிவகார்த்திகேயன் எங்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

ஒரு நல்ல நண்பன் என்பது குடும்பத்திற்குள் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தது தவறா? ஆனால் அவரை துரோகி என்று சொல்லி இருக்கிறார் இமான்.

ஏற்கனவே ஒரு பெண்ணை பார்த்து விட்டு தான் என்னை விவகாரத்து செய்ய முன்வந்துள்ளார் இமான். ஒரு கட்டத்தில் எங்கள் குடும்பத்தை மிரட்டி விவகாரத்து பெறச் செய்தார். ஒன்றை மாதங்களில் விவகாரத்தும் பெற்றோம்.” என தெரிவித்துள்ளார் டி இமானின் முதல் மனைவி மோனிகா.

மோனிகா

What happen between Sivakarthikeyan and D Imman says Monica

தினமும் 1000 பேருக்கு அன்னதானம்.; கார்த்தி ப்ளானை ஆரம்பித்த ‘ஜப்பான்’ படக்குழு

தினமும் 1000 பேருக்கு அன்னதானம்.; கார்த்தி ப்ளானை ஆரம்பித்த ‘ஜப்பான்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

ஜப்பான்

இதன்போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் ‘ஜப்பான்’.

இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார்.

அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டனர்.

ஜப்பான்

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று தொடங்கி, ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் போது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை பரிமாறவிருக்கிறார்கள்.

பசித்த வயிறுக்கு உணவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை கண்டு.. யாரேனும் ஒருவர் பசித்த ஒருவருக்கு உணவு வழங்கினாலும் கார்த்தியின் நோக்கம் வெற்றி பெறும் என கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜப்பான்

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க.. ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிக்கும் 25 வது படமான ‘ஜப்பான்’ படத்தின் வெற்றிக்காக.. 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

ஜப்பான்

Karthi decided to donate food for 1000 peoples

More Articles
Follows