தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947’.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து நடித்துள்ளனர்.
‘அருவி’ பட நாயகி அதிதி பாலனின் தங்கைதான் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மார்ச் 27 மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அவர் முருகதாஸ் பற்றி பேசும்போது..” தன் உதவியாளருக்காக பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டவர் முருகதாஸ். இப்போது நான் ரங்கூன் இயக்குனருடன் ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன். அவரை எனக்கு சிபாரிசு செய்தவர் முருகதாஸ் தான்.
‘வீரம்’ படத்தில் அஜித் ஒரு டயலாக் சொல்லுவார்.. “நம்ம கூட இருக்கிறவர்களை நாம நல்லா பாத்துக்கிட்டா நம்ம மேல இருக்கிறவன் நம்மள பாத்துப்பான்” என்று அஜித் பட டயலாக்கை பேசினார்.
கௌதம் கார்த்திக் ஒரு சிறந்த மனிதர். இப்போது படத்தில் பணியாற்றிய அனைவரையும் இந்த மேடை ஏற்றி அழகு பார்த்தவர் அவர்.
அவரது தந்தை கார்த்திக்கும் அப்படிதான் எல்லாரையும் டார்லிங் டார்லிங் என்று அழைப்பார். என் நடிப்பில் ரஜினி சார் சாயல் இருக்கும். நான் பாதி சூப்பர் ஸ்டார்.
ஆனால் கௌதம் கார்த்திக் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார் சிவா.
இவரைத் தொடர்ந்து இறுதியாக முருகதாஸ் பேசும்போது..
“என்னுடைய படங்களில் ஆக்சன் காட்சிகள் வைக்கும் போது கண்டிப்பாக அதில் ஏதாவது நிச்சயம் ஒரு ரஜினி சாயல் இருக்கும்.. அதுபோல காதல் காட்சி என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் நினைவு தான் வரும்.
துப்பாக்கி படத்தில் விஜய் மற்றும் ஜெயராம் நடிக்கும் காட்சியில் எனக்கு கார்த்தி நினைவு தான் வந்தது. அதை வைத்துதான் விஜய்யை ஒரு டயலாக் சொல்ல வைத்தேன்” என்று பேசினார் முருகதாஸ்.
Sivakarthikeyan & Armurugadoss Speech at august 16 1947 audio launch