தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் ரெடின் கிங்ஸிலி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
அடுத்த வாரம் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மார்ச் 24ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
இதற்கான விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.
அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தனஞ்செயன் பேசும்போது..
“இந்த பத்து தல படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று சிம்புவிடம் கேட்டேன். அவர் உடனே ஓகே சொன்னார்.
இந்த விழா நடப்பதை அறிந்த சிம்பு ரசிகர்கள் பல பேர் டிக்கெட் கேட்டனர். கிட்டத்தட்ட 1000 பேர் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிம்புவை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.. அரங்கமே அதிர்ந்தது.
எனவேதான் பத்திரிக்கையாளர்களை சிம்பு தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். எனவே தான் ரசிகர்களை இங்கு அனுமதிக்கவில்லை.
அதற்காக நான் சிம்புவிடமும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
‘பத்து தல’ படத்தின் வெற்றி விழாவை கண்டிப்பாக மிக பிரம்மாண்டமாக நடத்துவோம்.்அப்போது சிம்பு ரசிகர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்கலந்து கொள்ளலாம்” என பேசினார் தனஞ்செயன்.
Dhananjayan apologize to Simbu fans