தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கிய ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சௌந்தரராஜா, மது குருசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் ராவடி என்ற பாடலுக்கு சாயிஷா நடனமாடி இருந்தார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.்
மார்ச் 30ல் இப்படம் வெளியான நிலையில்
முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ 12.3 கோடியை படம் வசூலித்துள்ளதாக அறிவித்து இருந்தனர்.
இது சிம்புவின் சினிமா கேரியரில் முதல் நாளின் அதிகபட்ச வசூல் என கூறப்படுகிறது.
மேலும் படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சியில்லை.. அதிகாலை 4 மணி காட்சிகள் இல்லை.. வார நாட்களில் (வியாழன்) வெளியானது. அப்படி இருந்த போதிலும் வசூல் வேட்டையாடியுள்ளது என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான நாயகன் சிம்புவை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது ‘பத்து தல’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடி உள்ளார் சிம்பு.
Simbu celebrates his hat-trick succes on their films