திரையரங்குகளை கலக்கிய AUGUST 16 1947 படத்தை இப்போ OTTயில் பார்க்கலாம்

திரையரங்குகளை கலக்கிய AUGUST 16 1947 படத்தை இப்போ OTTயில் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து வெளியான படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடிக்க, குக் வித் கோமாளி புகழ், ‘அருவி’ பட நாயகி அதிதி பாலன், ஷர்மா ரிச்சர்ட், அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘ஆகஸ்ட் 16 1947’ படம் கடந்த ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், மக்களிடமும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், ‘ஆகஸ்ட் 16 1947’ படம் இன்று மே 5-ம் தேதி முதல் பிரபலமான அமேசான் பிரைமில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gautham Karthik’s ‘AUGUST 16 1947’ on OTT from today

அக நக… பாடகியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் ஏஆர். ரஹ்மான்

அக நக… பாடகியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் சேர்ந்து ‘தி டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழில் ‘கடல்’, ‘மரியான்’, ‘ராஜா ராணி’, ‘இரண்டாம் உலகம்’, ‘மெட்ராஸ்’, ‘காக்கி சட்டை’, ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற பல படங்களில் பாடி தனது வசீகரமான குரலால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.

இந்த நிலையில், ‘தி டெஸ்ட்’ படத்தில் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் குறைந்த அளவிலேயே பெண் இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்ற நிலையில் அந்த லிஸ்டில் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் சேர்ந்துள்ளார்.

மேலும், சக்திஸ்ரீ கோபாலன் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்தி இடம்பெறும் “அக நக அக நக முக நகையே” பாடலை பாடி பலரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman introduced shakthisree gopalan as music director in the test movie

செல்வராகவனின் அடுத்த பட அப்டேட்.: யோகி பாபு & புஷ்பா நடிகருடன் கூட்டணி.!

செல்வராகவனின் அடுத்த பட அப்டேட்.: யோகி பாபு & புஷ்பா நடிகருடன் கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன்.

அதன்பிறகு ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’, ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நானே வருவேன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

செல்வராகவன் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளார்கள்.

செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார்.

மேலும், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “யோகிபாபு மற்றும் ‘புஷ்பா’ பட புகழ் சுனிலுடன் நடிப்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

yogibabu and pushpa actor joined the selvaraghavan

புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், அஜ்மல், ஸ்ரீமன், துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களின் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

இரட்டை இயக்குநர்கள் பி. ஜி. மோகன்- எல். ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் சத்யராஜ் உடன் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் இன்று மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

எனவே நேற்று மே 4ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பலரும் பாராட்டி வந்தனர்.

ஆனால் இது போன்ற ஒரு படம் வெளியே வருவதே பலருக்கும் தெரியவில்லை. முக்கியமாக மீடியாக்களில் வலம் வரும் பலருக்கே இது தெரியாமல் போனது தான் மிகவும் சோகமான விஷயம்.

ஏனென்றால் இந்த படத்திற்கு போதுமான பிரமோஷன் இல்லை என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படத்திற்கே மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது. முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் முதல் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு இந்த படத்தை பல்வேறு விதங்களில் ப்ரோமோஷன் செய்தனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற சின்ன படங்களை ப்ரமோஷன் செய்தால் மட்டுமே மக்களிடையே சென்றடையும்.

படம் நன்றாக இருந்தால் மட்டும் போதுமா.? அது ரிலீசாவது வெளியே தெரிய வேண்டாமா.? மக்களை சென்றடைய வேண்டாமா?

இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி நிஜமான பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு படத்தை பிரமோஷன் செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் நிலையும் உயரும்.

நல்ல படத்திற்க்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி விழித்துக் கொள்வது நல்லது.

Theerkkatharsi movie without promotion.; Will the producers wake up?!

#Theerkadarishi from Today

An inventive investigative thriller

@saravanaafilms @actor_ajmal @jayadusshyanth
@jaiwanth_vg #PgMohan @Lrsundarapandi1 #LaxmanDop @sathish4641 @actorsriman @ranjeetckedit @balamusician @deepandeep99 @teamaimpr https://t.co/h0sV60BJjU

ஊரே பார்க்க திரைக்கு வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

ஊரே பார்க்க திரைக்கு வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

இப்படத்தில் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிப்பதாகவும், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் மகிழ் திருமேனி மற்றும் மோகன்ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்ததாக இருந்தது நிதி பிரச்சனையால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Vijay Sethupathi’s ‘Yaadhum Oore Yaavarum Kelir’ release on May 19

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை அமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை காட்டிய விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி.

அதில்… “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு எதுவும் தெரியாது. அந்த படத்தை பார்த்தது இல்லை என தெரிவித்தார்.

மேலும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் – 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் பட திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில்…

“பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி. அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Ban on the movie ‘Pichaikaran 2’? Court order to submit collection details after release

More Articles
Follows