சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்த படம் நாளை மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் தன் அனுபவங்கள் குறித்து பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம்.

இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார்.

அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சிலம்பரசனின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும்.

ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு பிரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பைக் கொடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை ‘பத்து தல’ கொண்டுள்ளது”.

இவ்வாறு தன் அனுபவங்களை பகிர்ந்தார் ப்ரியா பவானி சங்கர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

Actress Priya Bhavani Shankar talks about working in Pathu Thala

‘விடுதலை’ ரிலீசை ஒட்டி தன்னுடைய உதவியாளர்களுக்கு பரிசு வழங்கிய வெற்றிமாறன்

‘விடுதலை’ ரிலீசை ஒட்டி தன்னுடைய உதவியாளர்களுக்கு பரிசு வழங்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடுதலை பார்ட் 1’, மார்ச் 31 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

இதனிடையே வெற்றிமாறன் தனது 25 உதவி இயக்குனர்களுக்கு படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நிலம் வாங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனது உதவியாளர்களுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெற்றிமாறன் உதவியாளர்களுக்கு அங்கு வீடு கட்டி அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நிலத்தை விற்கக் கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Vetrimaaran’s unique gift to his assistants ahead of ‘Viduthalai Part 1’ release!

தங்களை நம்புகிறவர்களை வெற்றி பாதிக்காது.; RRR படக்குழுவை சந்தித்த குஷ்பூ

தங்களை நம்புகிறவர்களை வெற்றி பாதிக்காது.; RRR படக்குழுவை சந்தித்த குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பிரபலமான பாடலான ‘நாட்டு நாடு’ 95வது அகாடமி விருதுகளில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் அகாடமி விருதை வென்ற முதல் முழுமையான இந்தியப் பாடலாக அமைந்தது.

இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இருவரையும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜமௌலி மற்றும் கீரவாணி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இந்திய சினிமாவின் பெருமைகளான எஸ்.எஸ். ராஜமௌலி காரு மற்றும் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி காரு மற்றும் அவர்களின் அழகான கருணையுள்ள துணைவர்கள் ஆகியோரை ஹைதராபாத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். ஆரோக்கியமான ஆடம்பரமான காலை உணவுடன். வெற்றி தங்களை மிகவும் உறுதியாக நம்புபவர்களை பாதிக்காது. இந்த அற்புதமான மனிதர்கள் அதை நிரூபிக்கிறார்கள்” என கூறினார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Khushbu meets Rajamouli and MM Keeravani

EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 – 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்தது அதிகாலை சிறப்பு காட்சிகள்.

ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் சிறப்பு காட்சிகளுக்கு அரசும் அனுமதி வழங்கியது.

ஒரு படம் ரிலீசாகும் நாள் அன்று நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4 – 5 மணி காட்சிகள் என சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாகிவிட்டது.

அந்த சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்களும் டிக்கெட் விலையை தாறுமாறாக விற்றனர்.

ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் வரை விலை கொடுத்து படத்தை பார்த்து வந்தனர்.

நள்ளிரவில் கண் விழித்து தியேட்டர் வாசலில் விடிய விடிய காத்துக் கிடந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் இரவெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர்.

அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் தங்கள் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே சின்ன படங்கள் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுடைய ஆட்களை வைத்தாவது அதிகாலை சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாலை சிறப்பு காட்சி வசூலில் யார் முன்னணி.? என்ற கருத்துக் கணிப்புகளும் அதிக அளவில் நடைபெறுகிறது.

இவை இல்லாமல் மக்கள் விமர்சனங்களை பதிவு செய்ய பல்வேறு மீடியாக்களும் நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும். இதனால் தியேட்டருக்கு அருகே உள்ள வசிப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தும் வருகின்றனர்.

இந்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் வெளியானது.

இதில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு படங்களும் ஒரே தியேட்டரில் வெளியாகும் போது பல இடங்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில இடங்களில் காட்சிகளை திரையிட விடாமல் ரசிகர்கள் தியேட்டர்களை நாசம் செய்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை & நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் துவங்குகிறது. அதுபோல சிம்புவின் சகப் போட்டியாளராக கருதப்படும் தனுஷின் ‘நானே வருவேன்’ & ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.

தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒரு புதிய பாதையில் பயணிப்பதாக திரைப்பட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோர்களும் பின்பற்றுவார்களா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Simbu and Dhanush decision on FDFS fans show. Will top actors accept?

சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடம் மீண்டும் திறப்பு.; நடந்தது என்ன.?

சீல் வைக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடம் மீண்டும் திறப்பு.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 11 அன்று சௌத் இந்தியன் சினி, டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் இயங்கி வந்த அலுவலக கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இன்று 29-03-2023 புதன்கிழமை, காலை சுமார் 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து, நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 17-04-2023 வரை அவகாசம் அளித்து, காவல்துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து, கட்டிடத்தை திறந்தனர்.

சட்டபூர்வ செயல்பாடுகள் பூர்த்தியானதும் டப்பிங் யூனியன் வசம் இடம் மீண்டும் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.

டப்பிங் யூனியன் நிர்வாகிகளான உபதலைவர் கே.மாலா, செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செபாஸ்டியன், ப்ரதீப்குமார், சரவணன், சதீஷ் நாகராஜ் ஆகியோருடன் பொருளாளர் ஷாஜிதா மற்றும் பொதுச் செயலாளர் டி.என்.பி.கதிரவன் மற்றும் மேலாளர் அம்மு ஆகியோர் உடன் இருந்தனர்.

“கடந்த காலங்களில் டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் சிலர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் நீக்கப்பட்டனர்.

அதில் பி.ஆர்.கண்ணன் என்பவருக்கு மட்டும் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை உள்ளதால் அவர் இன்னும் உறுப்பினராக உள்ளார். அவர் நீக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டு இன்னும் சிலரை தூண்டி 2014 முதல் டப்பிங் யூனியனுக்கு எதிராகவும் , அதன் தலைவர் “டத்தோ” ராதாரவி அவர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக பல அவதூறுகளை பரப்பி 2018ல் நடந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி, தேர்தலில் தோற்றார்கள்.

அடுத்து 2020ம் ஆண்டு தேர்தலில் அதை விட மோசமாக தோற்றார்கள். 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் 23 பதவிகளுக்கு போட்டியிட 23 வேட்பாளர்கள் கூட இல்லாமல் வெறும் 11 பேர் மட்டுமே போட்டியிட்டு ஒருவர் கூட டெபாசிட் வாங்கவில்லை.

இதுதான் அவர்களது தரம் மற்றும் நிலைமை. உண்மை என்றுமே மாறாது. ஆனால் பொய் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அவர்களோடு இருந்த பலரே அவர்களை விட்டு விலகி விட்டார்கள்.

நேர்மையாக இருக்க முடியாதவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தலைவரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எத்தனையோ நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் டப்பிங் பேசி அதில் இருந்து கொடுத்த 5 சதவீதத்தை சிறுக சிறுக சேமித்து அந்த பணத்தில் கட்டிய இந்த கட்டிடத்தை பாதித்துள்ளனர். சிறியதொரு குறையை வைத்து எங்கள் கட்டிடத்தை இடிக்க அவர்களின் தீய முயற்சி இது.

டப்பிங் யூனியன் இருந்த கட்டிடத்திற்கு தடை ஏற்படுத்தலாம், ஆனால் டப்பிங் யூனியனை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

எங்கள் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் சிறப்பான தலைமையில் இதே இடத்தில் , “டத்தோ ராதாரவி வளாகம்” மீண்டும் சீரியதொரு எழுச்சி பெறும். டப்பிங் யூனியன், தனது உறுப்பினர்களுக்காக தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்படும்,” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Reopening of Sealed Dubbing Union Building.; what happened.?

ஒரு வாரத்திற்கு ஐரோப்பாவை அதிர வைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா

ஒரு வாரத்திற்கு ஐரோப்பாவை அதிர வைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுடன் ஐரோப்பாவை கலக்கவுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

சங்கர் மகாதேவன், ஹரிசரண், பிரேம்ஜி மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி இசைக்கலைஞ‌ர்கள் யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைகிறார்கள்.

சமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தவுள்ளார்.

“ஹை ஆன் யுவன் – லைவ் இன் ஐரோப்பா” என்ற தலைப்பில், ஃபாக்ஸ் (Foxx), நிமா (Nima) மற்றும் ஃபிரேம் (Frame) ஆகியவை யு1 ரிகார்ட்ஸ் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஃபோன்கேர் (Phonecare), அகிலம் (Agilam), கரிகாலா (Karikaala) சொக்கா (Sokka) மற்றும் ஆர்ட் டெகோ பிரஸ் (Art Deco Press) ஸ்பான்சர்களாக உள்ள நிலையில், லண்டனுக்கான‌ மீடியா பார்ட்னராக ஏஜேஎஸ் ஈவென்ட்ஸ் (AJS Events) உள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி ஓபர்ஹவுசனிலும், ஏப்ரல் 2 அன்று பாரிஸிலும், ஏப்ரல் 7 அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். highonu1.com எனும் பிரத்யேக இணையதளத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, ச‌ங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் யுவன்” நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிரபல‌ பாடல்கள் இந்த நிகழ்வுகளின் போது இசைக்கப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் பலர் யுவனின் ரசிகர்களாக இருப்ப‌தால், இந்நாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ரசிகர்களுக்கு இசை விருந்தாக இந்த நிகழ்ச்சிகள் அமைவதை உறுதிசெய்ய, விரிவான ஏற்பாடுகளை செய்யபட்டு வருகின்றன. யுவனின் நேரலை நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்கான ரசிகர்களின் நெடுநாள் கனவு இதன் மூலம் நிறைவேற உள்ளது.

Yuvan to rock Europe with grand concerts in Germany France UK

Little Maestro #YuvanShankarRaja to rock Europe with grand concerts in Germany, France, UK

Over 20 top musicians including @Shankar_Live @HaricharanMusic @Premgiamaren @andrea_jeremiah to join #Yuvan

Tickets are available on highonu1.com

@thisisysr @onlynikil

More Articles
Follows