ஜோ விமர்சனம் 4.25/5.. ஜொலிக்கும் காதல்

ஜோ விமர்சனம் 4.25/5.. ஜொலிக்கும் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் எப்பொழுதும் இரண்டு வகையான கதைகள் உண்டு. ஒன்று வித்தியாசமாக முற்றிலும் புதிய திரைக்கதையாக இருக்கும். அல்லது நாம் பார்த்து பழகிப் போன கதையை அருமையான திரைக்கதையாக கொடுத்திருப்பார்கள்.

இதில் இயக்குநர் ஹரிஹரன் ராம் நமக்கு பழகிய காதலை தன்னுடைய பாணியில் ஓவியமாக படைத்திருக்கிறார்.

கதைக்களம்…

ரியோ ராஜ் நாயகன். காதலியாக மாளவிகா மனோஜ்..

‘ஜோ’ படத்தின் ஆரம்பத்தில் பள்ளிக்கூட காட்சிகள் கலாட்டா மோதல் என 10 நிமிடத்தில் முடிந்து விடுகிறது. அந்த காட்சி படத்தின் முக்கியமானது என்பதால் அதை கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்.

அதன் பிறகு கல்லூரியில் படிக்கிறார் நாயகன் ரியோ ராஜ். இவர்தான் ஜோ. அதே கல்லூரியில் அதே வகுப்பில் படிக்கும் மலையாள பெண்குட்டி மாளவிகா. நாயகியை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார்.

ஒரு கட்டத்தில் மாளவிகாவும் காதலிக்க ஜாலியாக ரொமான்டிக்காக கல்லூரியை முடித்த பின்னர் மாளவிகா தன் சொந்த ஊர் ஆலப்புழாவுக்கு செல்கிறார். ரியோ தமிழ்நாட்டில் வசிக்கிறார்.

அதன் பின்னர் காதலர்களிடையே சின்ன சின்ன ஈகோ மோதல் வெடிக்கிறது. ஒரு நாள் தன் வீட்டிற்கு நாயகனை வர சொல்கிறார் மாளவிகா. உன்னுடைய ஈகோவை தூக்கி வைத்து விட்டு எனக்காக வா என்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு பிரச்சனை எழவே காதலர்களிடையே விரிசல் ஆரம்பம். அதன் பின்னர் என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? மனைவி எப்படி வந்தார்? அவருக்கு இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

JOE – RIO RAJ
SUCHI – MALAVIKA MANOJ
SHRUTHI – BHAVYA TRIKHA
SECURITY – CHARLIE
SANTHA – ANBUTHASAN
PRAVEEN – AEGAN

VINOTH – VJ RAKESH
JOE APPA – ELANGO KUMANAN
SUCHI APPA – JAYAKUMAR
TAMILARASAN – M J SHRIRAM

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தில் பார்த்த ரியோ ‘ஜோ’ படத்தில் பார்த்த ‘ரியோ’ என ஏகப்பட்ட வித்தியாசங்கள். நடிப்பில் அத்தனை மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார். ‘ஜோ’ கேரக்டரை ஜொலிக்க வைத்துள்ளார் ரியோ.

காதலை சொல்ல தயங்கும் இடத்தில் அவரின் தொண்டைக்குழி கூட நடித்திருக்கிறது. ரியோ தன் கண்களை குளமாக்கி நம்முடைய இதய துடிப்பை லப்டப்பை எகிற செய்திருக்கிறார்.

மலையாள பெண் குட்டியாக நிஜ மலையாளி மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். கண்களிலும் உதடுகளிலும் தன்னுடைய பாதி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திடீரென லவ் யூ சொல்வது திடீரென வெறுத்து ஒதுங்குவது என பெண்களின் தவிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே சமயம் தந்தைக்காக காதலனை எதிர்க்கும் சமயத்தில் அச்சு அசல் சுயநல பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு வரும் பவ்யா கொழு கொழு பொம்மை ஆக நம்மை ஈர்க்கிறார். ஆரம்பத்தில் இவரது கேரக்டரை நாம் வெறுத்தாலும் மெல்ல மெல்ல பவ்யா மீதும் நமக்கு பாச மழை வழிந்து விடும். அதற்காகவே கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரிய திருப்புமுறையை வைத்திருக்கிறார் இயக்குனர்.

இவர்களுடன் அருமையான செக்யூரிட்டி வேடத்தில் நடித்துள்ளார் சார்லி. தன்னுடைய அனுபவ அடிப்பான் சபாஷ் போட வைக்கிறார்.

ரியோவின் நண்பராக வரும் அன்பு தாசன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கலக்கி இருந்தார். இதில் நண்பனின் காதலுக்காக அவர் ஒவ்வொன்றையும் செய்து விட்டு அடி வாங்குவது ரசிக்க வைக்கிறது.

ரியோவுக்கு தூது போகும் நண்பராக நடித்தவரும் சின்ன சின்ன வசனங்களில் மூலம் நம்மை கவர்கிறார்.

டெக்னீசியன்கள்…

ART DIRECTOR
ABR

EDITOR
VARUN K.G

CINEMATOGRAPHY
RAHUL KG VIGNESH

MUSIC
SIDDHU KUMAR

PRODUCED BY
DR.D.ARULANANDHU
MATHEWO ARULANANDHU

WRITTEN & DIRECTED BY
HARIHARAN RAM S

ஹரிஹரன் ராம் அறிமுக இயக்குனர் என்றாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனரை போல ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்.

அருமையான திரைக்கதையை அமைத்து அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு காதல் விருந்து படைத்துள்ளார்… அண்மைக்காலமாக போதை கஞ்சா குடி ஆக்சன் வன்முறை என தமிழ் ரசிகர்கள் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் காதல் தென்றலை வீசி இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.

அவருக்கு உறுதுணையாக இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சித்து குமார்.. ரியோ – மாளவிகாவின் டூயட் பாடல் இனி காதலர்களின் ரிங்டோன் ஆக மாறும்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணியை உணர்ந்து செய்துள்ளனர்.

ஆட்டோகிராப், பிரேமம், வாரணம் ஆயிரம், 96, ராஜாராணி என பல படங்களில் நாம் பார்த்த காதல் தான் என்றாலும் இதில் தன் திரைக்கதையால் சுவாரஸ்யப்படுத்தி காதலர்களையும் கவர்ந்து இருக்கிறார் இயக்குனர்.

எனவே இந்த ஜோ… ஜொலிக்கும் காதல்..

joe movie review and rating in tamil

செவ்வாய்க்கிழமை பட விமர்சனம்..

செவ்வாய்க்கிழமை பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஹீரோயின் பாயல் ராஜ்புட் நடிப்பில் தெலுங்கில் ‘மங்களாவாரம்’ என உருவாக்கப்பட்டு தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளது.

கதைக்களம்…

1990-களில் நடக்கும் திரைக்கதை இது.

ஒரு ஊரில் ஜமீன்தார் அவரது மனைவி.

அந்த ஊரில் உள்ள ஒரு அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். ஆனால் இதே நாளில் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.

முதல் வாரம் செவ்வாய்க்கிழமை யாரோ ஒரு ஜோடிக்கு கள்ளக்காதல் என்று சுவற்றில் ஒரு நபரால் எழுதி வைக்கப்படுகிறது. அதே நாளில் ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் இறந்து கிடக்கின்றனர்.

இதைப்பற்றி விசாரிக்க போலீஸ் நந்திதா ஸ்வேதா வருகிறார். இது ஷைலு என்ற பேய் நிகழ்த்தி கொலை என்கின்றனர் ஊர்க்காரர்கள். மேலும் உடலை போஸ்ட் மாடம் செய்ய மறுக்கின்றனர்.

அடுத்த வாரம் வேறு ஒரு ஜோடிக்கு கள்ளக்காதல் என்று சுவற்றில் எழுதி வைக்கப்படுகிறது. அவர்களும் அதே செவ்வாய்க்கிழமை இறந்து கிடக்கிறார்கள். இதனால் போலீஸ் வேட்டை தீவிரமாகிறது.

3வது வார செவ்வாய்க்கிழமையில் யார் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காக ஊர் காத்திருக்கிறது? கள்ளக்காதல் ஜோடி இறந்தார்களா? இதையெல்லாம் செய்யும் மர்ம நபர் யார்? சுவற்றில் எழுதி வைப்பதன் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman and others.

நடிகை பாயல் ராஜ்புட்… கவர்ச்சிக்கு கவர்ச்சி.. காதலுக்கு காதல்.. நடிப்புக்கு நடிப்பு.. மிரட்டலுக்கு மிரட்டல் என வெரைட்டியாக கொடுத்திருக்கிறார். கண்கலங்கவும் வைக்கிறார்.. ரசிக்கவும் வைக்கிறார் பாயல்.

தான் விரும்பும் எந்த ஆண் மகனுடனும் ஒரு நிமிடத்தில் உறவு வைக்க ரெடியாகிறார். பாயல்.. அதேசமயம் வேண்டாம் என்றால் வெறுக்கிறார்.. இது போன்ற ஒரு வேடத்தை எந்த நடிகையானாலும் ஏற்க தயங்குவார்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறால் இது நடைபெறுவதாக இயக்குனர் காட்சிகள் வைத்திருந்தாலும் நடிகைகள் நிச்சயம் தயங்குவது உண்டு.

நாயகியின் காதலன் நடிப்பிலும் ஆக்ஷனிலும் தூள் கிளப்பி இருக்கிறார். தன் சிறுவயது தோழியை பாலியல் தொல்லை செய்யும் தந்தையைக் கூட கொல்லும் நேர்மையான நாயகனாக வாழ்ந்திருக்கிறார்.

50 ஆண்டுகால சினிமாவில் ஜமீன்தார் என்றாலே ஒரு ஆன்மீகவாதியாக காட்டப்படுவார்கள். ஆனால் இதில் ஜமீன்தார் நாத்திகவாதியாக மிகவும் நேர்மையானவராக நடித்திருக்கிறார்.

அதே சமயம் ஆன்மீகவாதியாக காட்டப்படும் அவரது மனைவி சபல புத்தி கொண்டவராக காட்டப்பட்டு இருப்பது இயக்குனரின் வித்தியாசமான கற்பனை.

ஆசிரியராக வரும் அஜ்மல் அமீர் கொஞ்ச நேரம் என்றாலும் வித்தியாசமான வேடமேற்று ஆன்ட்டி ஹீரோவாக அலப்பறை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஸ், லக்ஷ்மன் ஆகியோர் மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்.

Crew:

Digital Marketing: Talk Scoop
Executive Producer: Saikumar Yadavilli
Editor: Gullapalli Madhav Kumar
Dialogue writers: Tajuddin Syed, Raghav
Art Director: Mohan Talluri
Production Designer: Raghu Kulkarni
Fight Masters: Real Satish, Prithvi
Sound Designer & Audiography: National Award winner Raja Krishnan
Cinematographer: Dasaradhi Sivendra
Choreographer: Bhanu
Costume Designer: Mudasar Mohammad
Music Director: B Ajaneesh Loknath
Story, Screenplay, Direction: Ajay Bhupathi

காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜீனிஸ் லோக்நாத் இசை மூலம் மிரட்டி இருக்கிறார்.. பல இடங்களில் காந்தாரா சாயல் தெரிந்தாலும் படத்துடன் ஒன்றை வைப்பதில் இசைக்கு முக்கிய பங்கு.

இதுதான் முடிவு என்று நாம் சில காட்சிகளை நினைக்கும் போது சில திருப்புமுனைகளை கொடுத்து காட்சியை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.

தசரத்தி சிவேந்திரா என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது பணி மேக்கிங் வேற லெவல்.

பழைய கதையில் புதிய விதமான மேக்கிங் கொடுத்து இருப்பது சிறப்பு. 1990களில் கதைக்களம் நகர்வதால் அதற்கு ஏற்ப கலை வடிவத்தை கொடுத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

எங்கெல்லாம் கள்ளக்காதல் நடக்கிறதோ அங்கெல்லாம் இந்த பேய் தன் வேலையை காட்டும் எனும் மாவட்ட வாரியாக காட்டியிருப்பது சிரிப்பை வர வைக்கிறது.

Chevvaikizhamai movie review and rating in tamil

அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.கே. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’.

கதைக்களம்..

‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தில் மேல் சாதி கீழ் சாதி என்ற பிரிவினை உள்ளது.. ஒரு டீக்கடை என்றால் கூட இரண்டு பிரிவினருக்கும் வேறு வேறு டம்ளர்களில் டீ கொடுப்பதை கடைக்காரர் கூட வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஊர் கோயில் திருவிழா நடக்கிறது.. அந்த சமயத்தில் கீழ் சாதியை சேர்ந்தவர் பூசாரியின் தட்டில் கை வைத்து விபூதி எடுத்து விடுகிறார்.
?
ஒரு கீழ் சாதிக்காரன் எப்படி விபூதியில் கை வைக்கலாம் என்ற அளவில் பிரச்சினை வெடிக்கிறது?

அதன் பின்னர் என்ன நடந்தது? கோயில் திருவிழா நடைபெற்றதா? சாதி மோதல் முடிவுக்கு வந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றும் இந்த டிக் டாக் உலகத்தில் சாதி மோதலும் தீண்டாமையும் எத்தனை வன்முறைகளை நிகழ்த்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.

தந்தையாக நடித்த சன்னாசி நடிப்பு உங்களை அறியாமல் கைதட்ட வைக்கும் கண்கலங்க வைக்கும்.. பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் பெரிய அளவில் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை

டெக்னீசியன்ஸ்…

மூலக்கதை – துரை குணா.

இயக்கம் – ஜி.ராஜாஜி,

ஒளிப்பதிவு – ஓ.மகேஷ்,

இசை – அந்தோணி தாசன் –

பின்னணி இசை – ஜேம்ஸ் வசந்தன்,

படத் தொகுப்பு – பன்னீர்செல்வம்,

நடன இயக்கம் – ராதிகா,

பாடகர்கள் – பிரதீப்குமார் அந்தோணிதாசன்..

இசை அந்தோணி தாசன்.. பின்னணி இசை ஜேம்ஸ்வசந்தன் ஆகிய பிரபலங்கள் இருந்தும் நமக்கு வருத்தமே..

ஆனால் ‘எங்க தலைமுறை இதுக்கு மேல போதும்.. உங்க தலைமுறை 100 காலம் வாழும்

கண் கெட்ட தூரம் உழைச்சோம்..
சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தோம்..

நான் படிக்காத ஏட்ட நீ படிக்கனும்..
நான் வாழாத வாழ்வை நீ ஜெயிக்கனும்..
.. என்ற பாடல் வரிகள் நம்மை ரசிக்க வைக்கிறது..

கிளைமாக்ஸ் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் திரைக்கதையை முடித்து இருப்பது ராஜாஜியின் ராஜதந்திரம் எனலாம்.

..அம்பு நாடு ஒம்பது குப்பம்.. ஜாதீ மோதல்

Ambu Naadu Ombathu Kuppam movie review and rating in tamil

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெனித்குமார் இயக்கத்தில் மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’.

நவம்பர் 17- ம் தேதி ‘சைத்ரா’ வெளியான இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கதைக்களம்…

பேய் படம் என்றாலே ஒரு பெரிய பங்களாவில் பேய் குடி இருக்கும்.. அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.. இந்த டெம்ப்ளேட் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமாவில் மாறாது போல.. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு சைத்ரா இந்த படம்.

டிடெக்டிவ் ஏஜென்ட் திவ்யா தன் அண்ணன் போலீஸ் உதவியுடன் தன் நண்பன் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு சாமியாரிடம் உதவி கேட்டு வடக்கு வீதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவை தேடி கண்டுபிடிக்கிறார்.

அங்கு பூஜா மற்றும் அவரது கணவரும் நாயகி சைத்ரா (யாஷிகா ஆனந்த்) தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மூவரும் உள்ளே செல்ல அங்கே திவ்யா நண்பன் கொல்லப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கிறார்.

கொலை உடலைப் பார்த்த பூஜாவும் அவர் கணவரும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். வேறு வழியின்றி நண்பனை திவ்யா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே மருத்துவமனையில் டாக்டரின் டேபிளில் பூஜா மற்றும் அவர் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக வந்த செய்தியை நியூஸ் பேப்பரில் பார்க்கிறார் திவ்யா.

அப்படி என்றால் இதற்கு முன்பு நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்கஸ்…

மிகப்பெரிய விபத்திற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் இதில் நடித்திருக்கிறார்.. எந்த விதத்திலும் அவரது நடிப்பும் சரி அவரது கேரக்டரும் சரி ஒரு துளி கூட சுவாரசியம் இல்லை.

அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு ஓகே.. ஆனால் பின்னணி இசை வேஸரட்.. கதை திருநெல்வேலியில் நடப்பதால் மலையாளம் கலந்த தமிழை வசனங்களில் கேட்க முடிகிறது..

பயமுறுத்தும் பேய் படங்கள் காமெடி செய்யும் பேய் படங்கள் என பல வகை உண்டு. ஆனால் சைத்ரா எந்த வகை என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ரேடியோக்களில் நாம் கேட்கும் ஒலிச்சித்திரம் போல.. “கத்தியை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னால்.. கத்தி எடுக்கப் போகிறேன்.. கத்தி எடுத்துக் கொண்டு வருகிறேன்.. இந்தா கத்தி என்பது போல பல வசனகாட்சிகள் உள்ளன.

இவை எல்லாம் நாம் காட்சியாக பார்க்கும்போது இத்தனை வசனங்கள் தேவையா ? படம் முழுக்க இதுபோன்ற நாடகத் தன்மையான காட்சிகள் உள்ளன. ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே தருகின்றன

திரைக்கதை அமைத்து விதத்தில் இயக்குநர் ஜெனித் குமார் நம் பொறுமையை பேயளவுக்கு சோதித்து விட்டார்.

யாஷிகாவை விட டிடெக்டிவ் திவ்யா ஆக வரும் சக்தி அழகில் நம்மை ஈர்க்கிறார்.

குறைந்தபட்சமாக 10 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.. அதற்கு நாம் பாராட்டு தெரிவிக்கலாம்..

Chaitra movie review and rating in tamil

ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு விமர்சனம்.. ரௌடியிச ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவுடிகளை ரெய்டு அடித்து வேட்டையாடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் இந்த படம்.

கதைக்களம்…

போலீஸ் பிரபாகரன் (விக்ரம் பிரபு) ஒரு நேர்மையான அதிகாரி. ரவுடிகளை எந்தவித தயக்கமும் இன்றி என்கவுண்டர் மற்றும் அரிவாளால் போட்டுத் தாக்கும் பலே அதிகாரி இவர். போலீஸ் என்றாலும் காசு கொடுத்துதான் டீ குடிப்பார் இவர்.

இவரின் காதலி டெட்டின்ஸ்ட் ஸ்ரீதிவ்யா. இவரின் தங்கை அனந்திகா.

ஒரு கட்டத்தில் தன் காதலியை எதிரிகள் போட்டுத் தள்ள அவரது தங்கையை காப்பாற்ற இவர் நடத்தும் ரெய்டு தான் மீதிக்கதை.

வேலு பிரபாகரன் மெயின் ரவுடி. இவருக்கு அடுத்து ரிஷி அவரது சகோ டேனியல் மற்றும் சௌந்தரராஜா மூவரும் கேங்ஸ்டர் கும்பல். இவர்களுடன் மோதும் போலீஸ் விக்ரம்பிரபு.

ஸ்ரீதிவ்யாவை ரவுடி கும்பல் கொல்ல என்ன காரணம்? இருவருக்கும் என்னதான் பிரச்சனை? என்பதை படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

மீசையில்லாத முகம்.. கம்பீரமான தேகம்.. உயரமான உருவம் கனிவான கண்கள் என பிரபாகரன் கேரக்டரில் விக்ரம் பிரபு.

காதலியை கண்டால் கூட கடமையே தன் லட்சியம் என இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒரு சென்டிமீட்டர் கூட சிரிக்க கூடாது என பிடிவாதமாக பிரபாகரன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஸ்ரீ திவ்யா. இவரின் காட்சிகளை எடிட்டர் வெட்டி விட்டாரோ? என நாம் தியேட்டரை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென ஸ்ரீதிவ்யா என்ட்ரி கொடுக்கிறார். அரை மணி நேரம் என்றாலும் அவருக்கும் இரண்டு டூயட் என ரசிக்க வைத்திருக்கிறார். அவரைக் கண்டதும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டலை கேட்க முடிந்தது. (ரசிகர்கள் பாவம்.. அடிக்கடி தமிழில் நடிங்க அம்மணி)

நாயகி தங்கையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் அனந்திகா. இனி இவருக்கு நிறைய படங்களில் ஹீரோயின் வேடம் கிடைக்கும். அந்த அளவிற்கு துறுதுறு பெண்ணாக அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சௌந்தரராஜா இதில் முற்றிலும் மாறுபட்டு நீண்ட தாடி வளர்த்த ரவுடியாக மிரட்டி இருக்கிறார். அதிலும் கவிதை எழுதும் ரவுடியாக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

அண்ணன் தம்பி ரவுடியாக ரிஷி மற்றும் டேனியல். இருவரும் இதுவரை ஏற்காத வேடம் என்பதால் மெனக்கெட்டு வில்லத்தனம் காட்டுயிருக்கின்றனர்.

வாய்ஸ் ஓவர் கொடுத்து பாசம் மிக்க மாமாவாக நடிகர் செல்வா நடித்திருக்கிறார். இவருகளுடன் வேலு பிரபாகரன் & ஜீவா ரவி உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்கள்ஸ்…

இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : கதிரவன்
படத்தொகுப்பு : மணிமாறன்
காஸ்டியூம் டிசைன் : மாலினி பிரியா

கதிரவனின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது..

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையில் ரசிக்க வைத்தாலும் நிறைய இடங்களில் காட்டுகத்து எரிச்சல் தான்..

எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரெய்டு படத்தை தயாரித்துள்ளது. ‘கொம்பன்’ பட முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி என்பவர் ரெய்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

முத்தையா படங்களில் இருக்கும் உணர்வு பூர்வமான எமோஷன் காட்சிகள் இதில் இல்லை என்பது வருத்தமே.. வெறும் ஆக்சனை மட்டும் நம்பி களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி.
வசனங்களும் கவரவில்லை.

இந்த படத்தை என்ன நினைத்து எடிட் செய்தாரோ தெரியவில்லை.. ஒவ்வொரு வில்லனுக்கும் ஹீரோ நாயகி ஆகியோருக்கும் தனித்தனியாக ஃப்ளாஷ் பேக்.. ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் திரைக்கதையில் குழப்பம் மிஞ்சுகிறது.

ஒரு காட்சியில் விக்ரம் பிரபு கையில் கன் இருக்கும்போது எதிரே நிற்கும் வில்லன் என் கையில் அருவா இருக்குது. இப்படி யாராவது சொல்வார்களா.? துப்பாக்கியால் எங்கிருந்தாலும் சுட்டு விட முடியும்.. ஆனால் அருவா அருகே வந்தால் மட்டுமே வெட்ட முடியும்.. இதை கூடவா வசனகர்த்த கவனிக்கவில்லை..

ஆக.. ரௌடியிச ரெய்டு

ரெய்டு

raid movie review and rating in tamil

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

கிடா விமர்சனம்.. மறிக்காத மனிதநேயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் கிடா போன்ற சில படங்கள் பிரம்மாண்ட கதையை நம்பி களமிறங்கும் என்பதற்கு இது சான்று.

தீபாவளி பண்டிகைக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் மத்தியில் ரூ.500-க்கி வழியில்லாத சாமானியனின் கதை தான் இது.

பூ ராமு – பாண்டியம்மாள் இவர்கள் பெற்றோரை இழந்த தங்கள் பேரனை வளர்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் விளம்பரத்தில் பார்த்த ஒரு விலை உயர்ந்த ஆடையை வாங்கி கேட்கிறான் பேரன். அதை வாங்க இவர் போராடும் கதை ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை செய்பவர் காளி வெங்கட். ஒரு கட்டத்தில் அவரது முதலாளியிடம் பிரச்சனை ஏற்படவே தீபாவளி என்று தானே தனியாக ஒரு கடையை திறப்பேன் என சவால் விடுகிறார்.

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்..

நடிகர் பூ ராமு தற்போது மறைந்து விட்டாலும் அவரது இந்த கேரக்டர் என்றும் மனதில் நிற்கும். கிடா மூலம் தன் கம்பீர நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேரனுக்காக அவர் செய்யும் ஒவ்வொன்றும் இப்படி ஒரு தாத்தா நமக்கு இல்லையே என்று குழந்தைகளை ஏங்க வைக்கும்.

அநீதி படத்தில் தங்க புள்ளையாக வந்து தங்கமாக ஜொலித்த காளி வெங்கட் இதில் கறி வெட்டும் கேரக்டரில் நம் உள்ளங்களை துண்டாக்கி இருக்கிறார். எங்குமே மிக இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்.

அதுபோல பூராமின் மனைவியாக பாண்டியம்மா.. பேரனாக மாஸ்டர் தீபன் ஆகியோரும் நாங்களும் நடிப்பில் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ்டர் தீபன் காட்டும் திருட்டு முழி ரியாக்ஷன் சூப்பர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் காளி வெங்கட் பணத்தை கொடுக்கும் காட்சி மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கான சாட்சி.

காளி வெங்கட்டின், மகன், மகனின் காதலி, காளி வெங்கட்டின் நண்பர் ஆகியோரும் சிறப்பு.

டீக்கடைக்காரன் பாண்டியாக கருப்பு கலகலப்பு. காளி வெங்கட் மனைவி லோகியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவர்களுடன் திருடர்களாக ஆனந்த், ஜெய், தேவா மற்றும் சங்கிலி நால்வரும் கலகலப்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.

ஒரு சினிமா என்றால் காதல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா.?
காதலர்கள் பாண்டி & ஜோதி இருவரும் கச்சிதம்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷ் நம்மை மதுரைக்கு அழைத்துச் சென்றது போல ஒரு உணர்வு. அந்த மக்கள் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளார்.

தீசனின் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது எனலாம். எடிட்டர் ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் சிறப்பு.

இயக்குனர் ரா.வெங்கட்டிற்கு இது முதல்படம் என்று அவரே சொன்னால் கூட நம்மால் நம்ப முடியாது. அப்படி ஒரு நேர்த்தியான படைப்பை கொடுத்திருக்கிறார்.

என்னதான் நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று ஆயிரம் பேர் சொன்னாலும் ஏதோ ஒரு நல்லவர், ஏதோ ஒரு மனிதநேயமிக்கவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ‘கிடா’ போன்ற படங்களே உதாரணம்.

Kida movie review and rating in tamil

More Articles
Follows