சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

சிறகன் என்றால் என்ன? என்று கண்டிப்பாக ரசிகர்களுக்கு கேட்க தோன்றும்.. ஒருவேளை மனிதனுக்கு சிறகுகள் இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றலாம்.. சிறகன் என்றால் அது ஒரு வகையான பட்டாம்பூச்சியின் பெயரை குறிப்பதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.

தன் மீது நம்பிக்கை வைத்து தன் படைப்பு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஸ்வராஜ்.

ஸ்டோரி…

ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதை விசாரிக்க இன்ஸ்பெக்டர் வினோத் வருகிறார். இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில் எம்எல்ஏ ஜீவா ரவியின் மகன் காணாமல் போகிறார்.

இதனைத் தேடும் வேட்டையில் போலீஸ் இறங்கி வரும் நிலையில் அடுத்து ஜீவா ரவியும், அவரது வக்கீல் கஜராஜின் உதவியாளரும் யாரோ ஒருவரால் கொல்லப்படுகிறார்கள்.

எனவே கஜராஜ் இன்ஸ்பெக்டர் வினோத்திடம் புகார் அளிக்கிறார்… அதன் பிறகு நடந்தது என்ன?

எல்லாக் கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தாரா? கொலையாளியின் நோக்கம் என்ன? கொல்லப்பட்டவர்களின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Casting : Gajaraj, Jeeva Ravi, Anand Nag, Vinoth GT, Fafzi Hithaya, Harshitha Ram, Rayil Ravi, Poovendhan, Malik, Balaji

கஜராஜ் மற்றும் ஜீவா ரவி இருவரும் தான் கதையின் நாயகர்கள்.. நிறைய படங்களில் நடித்துள்ள இவர்களது அனுபவம் இவரது கேரக்டர்களுக்கு ஒரு சிறப்பான அந்த அங்கீகாரத்தை கொடுக்கும்..

மகளைக் கொன்றவர்களுக்காக பழி வாங்கும் கஜராஜ் கேரக்டர் கம்பீரமான ஒன்றாகும்..

இடைவேளைக்கு முன்பே பாதி த்ரில் கதை சொல்லப்பட்டாலும் இடைவேளைக்கு பின்பு கதை நகரும் வேகம் விறுவிறுப்பை கூட்டுகிறது.

பவுசியாவின் நடிப்பு பலே போட வைக்கிறது.. மாணவனுக்கு பாடம் நடத்துவது மட்டுமல்லாமல் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இவரது துணிச்சல் சிறப்பு..

பவுசியாவின் சக ஆசிரியையாக வரும் ஹர்ஷிதா ராம் அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.

பிஞ்சிலே பழுத்து விட்டது எனச் சொல்வோம்.. அதுபோல பிஞ்சிலேயே முதிர்ச்சியான மாணவனாக பாலாஜி.. பதட்டம் வரும்..

ராணுவ வீரராக ஆனந்த் நாக்.. இவரது கேரக்டர் எதிர்பாராத ஒன்று.. இவரும் கஜராஜும் பேப்பரில் எழுதி பேசிக் கொள்ளும் ஒரு சீன் செம சீன்..

அதே சமயம் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை முயற்சிக்கும்போது ஒரு ராணுவ வீரன் எப்படி செயல்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் ஜன்னலை பிடித்துக் கொண்டு அழும் காட்சி நிச்சயம் ஒரு ராணுவ வீரனுக்கு அழகு அல்ல.?!

பிற பாத்திரங்களில் வரும் ரயில் ரவி, பூவேந்தன், ஆனந்த் வெங்கட் உள்ளிட்டோரும் கவனம் பெறும் நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

தங்கையை இழந்து விட்டு இன்ஸ்பெக்டர் உடைய உடுத்திக் கொண்டு சிறப்பாக பணிபுரியும் நேர்மையான அதிகாரியாக வினோத்.. உடன் வரும் மாலிக் கேரக்டர் கச்சிதம்..

டெக்னீசியன்ஸ்…

Directed By : Venkateshvaraj.S

Music By : Ram Ganesh.K

Produced By : Durga Fedrick

ராம் கணேசன் பின்னணி இசை கவனம் பெறுகிறது.. ‘எனை மறந்தேனே’ பாடல் இதம்..

சேட்டை சிக்கந்தர் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. காட்சிகளை அழகாக எதார்த்தமாக கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

வேறு எவரேனும் இந்த படத்தை படத்தை தொகுத்து இருந்தால் நிச்சயம் ரசிகர்களை குழப்பி இருப்பார்கள்.. ஆனால் இயக்குனரே ஒரு எடிட்டராக பணிபுரிந்து முன்னும் பின்னும் தாவி ஓடும் திரைக்கதைக்கு அழகான வடிவம் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க எடிட்டிங் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்வராஜ்.

Siragan movie review

ஜனமும் பணமும்..; வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்

ஜனமும் பணமும்..; வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்..

கீதாச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முன்வைத்து ஒரு ஐந்து அதிகாரங்களாக இந்த படத்தை கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.

1) எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

2) எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

3) உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?

4) எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

5) எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது.

இந்த கருத்துக்களை முன்வைத்து பணம் மட்டுமே மனித வாழ்க்கைக்கு அடிப்படை என்பதையும் பணத்தால் ஒருவரின் வாழ்வில் வளர்ச்சியும் அடுத்தவர் வாழ்வில் வீழ்ச்சியும் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஐந்து கதைகளை இணைத்து ஹைபர் லிங்க் படமாக தந்திருக்கிறார்

ஸ்டோரி…

1) தேஜ் சரண்ராஜ் ரஜின் ரோஸ் இருவரும் நண்பர்கள்.. கொள்ளை அடிப்பது கார் திருடுவது இவர்ளின் தொழில்..

2) வட்டி ஆசாமி பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. வட்டி சரியான நேரத்தில் வரவில்லை என்றால் போலீஸ் என்றாலும் பொளந்து கட்டுவார்.

3) காதல் என்ற பெயரில் வசதியான ஆண்களை வீழ்த்தி அவர்களிடம் பணம் பறித்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நாயகி அனன்யா.

4) இன்ஸ்பெக்டர் நீதிமணி.. நிதி மணி என்று கூட வைத்திருக்கலாம்.. அந்த அளவிற்கு பணத்தாசை பிடித்த காவல்துறை அதிகாரி. போலீஸ் ஸ்டேஷனிலே காணிக்கை என்ற பெயரில் வசூலிக்கும் வசூல்ராஜா இவர்..

5) கால் டாக்ஸி ஓட்டும் அடுத்த நாயகி சுவாதி மீனாட்சி. முறையான வேலை கிடைக்காத இவரின் தந்தை ஒரு விபத்தில் காயம் அடைய சிகிச்சைக்காக 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

இவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஹைப்பர்லிங்க் கதையாக தொகுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இறுதியில் என்ன நடந்தது.?

கேரக்டர்ஸ்…

Tej Charanraj (as) Chiranjeevi
Rajesh Balachandiran (as) Neethimani
Aananya Mani (as) Agalya
Swathi Meenakshi (as) Subhatra Vikram Adhitya (as) Kuberan
Regin Rose (as) Chakkaravarthi

ஓரிரு முகங்களை தவிர மற்ற அனைவருமே புது முகங்கள் தான்.. ஆனால் நடிப்புக்கு ஏற்றவாறு தங்கள் கேரக்டரில் பளிச்சிடுகின்றனர்.. எங்கும் மிகை இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை படத்துடன் ஒன்றை வைக்கின்றனர்.

இது எங்க நிலம் எங்கள் அப்பாவின் தவறான சகவாசத்தால் இந்த இடத்தை இழந்து விட்டோம்.. இதை வாங்கின பிறகு தான் நம்ம கல்யாணம் என்று ஒவ்வொரு ஆண்களையும் அனன்யா ஆட்டையை போடுவது வேற லெவல் ரகம்.. ஆனால் இவரையும் காதலிக்கும் நேர்மையான நபரும் உண்டு..

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன்.. வழக்கமான ‘மாமூல்’ போலீஸ்.. பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் பணம் கொடுப்பவர் பக்கம்தான் நான் நிற்பேன் என கம்பீரம் காட்டியிருக்கிறார். இவரது சிரிப்பும் இவரது ஹேர் ஸ்டைலும் கவனிக்க வைக்கிறது.

தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ்.. இருவரும் கார் திருடுவது என சுற்றினாலும் ஒரு கட்டத்தில் பணத்திற்காக நண்பனை போட்டுத் தள்ளுவது பேராசையின் உச்சம்.

பெரும்பாலும் பணத்திற்காக ஓடும் நெகட்டிவ் மனிதர்களை காட்டி பாசிட்டிவான நேர்மையான கேரக்டராக டிரைவர் சுவாதியின் கேரக்டர்.. இவரது நேர்மைக்கு கிடைத்த வெகுமதியாக கோடிக்கணக்கில் பணம் இவர் கையில் வருவது பாராட்டுக்குரியது.. ஆனால் நேர்மைக்கு இந்த காலம் தகுமா என்பது இயக்குனரே?

ஸ்மார்ட் பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. பெரும்பாலும் பைனான்சியர்களை கொடூரமாகவே காட்டுவார்கள்.. இதில் இவர் ஸ்மார்ட்.. அவசரத்திற்காக பணம் பெறுபவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிபவர்களுக்கு இவரைப் போன்ற பைனான்சியர்கள் தேவை தான்..

இப்படியாக ஒவ்வொரு கேரக்டரும் பாராட்டப்படும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டெக்னீசியன்ஸ்…

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அஜய் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சகிஷ்னா பின்னணி இசை திரில்லர் படத்திற்கான உணர்வை கொடுத்திருக்கிறது..

கீதாச்சாரக் கதை நல்ல கேரக்டர்கள் என இருந்தும் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முடிவு கொடுக்கப்பட்டு உள்ளது.. அதே சமயத்தில் நேர்மையாக வாழ்ந்த சுவாதிக்கு கடவுள் துணை இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகவாதிகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்பலாம்

Vallavan Vaguthadhada movie review

Romeo ரோமியோ திரை விமர்சனம்

Romeo ரோமியோ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Romeo ரோமியோ திரை விமர்சனம்

விஜய் ஆண்டனி, மிருணாளினி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…

குடும்பத் தேவைக்காக வருமானத்தைத் தேடி வெளிநாட்டு சென்று பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி.. வருடங்கள் சென்று கொண்டே இருந்தாலும் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அது திருமணமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் 35 வயதை கடக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தென்காசிக்கு தன்னுடைய உறவினர் மரணத்திற்காக வரும் விஜய் ஆண்டனி அங்கு நாயகி மிருணாளினியை சந்திக்கிறார்.

தான் தேடியே கனவு காதலி இவள் தான் தன்னுடைய மனைவி என்ற ஏக்கத்தில் மிருணாளினியை காதலிக்க தொடங்குகிறார்.

ஆனால் மிருணாளினிக்கு திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.. மிகப்பெரிய நடிகையாக வர வேண்டும் என்பதற்காகவே பணக்கார கனவில் வாழ்கிறார்..

ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் நாயகி மிருணாளினி.

ஆனால் தான் நினைத்த வாழ்க்கை அமையவில்லை என்ற காரணத்தினால் விவகாரத்து கேட்கிறார் மிருணாளினி..

தான் ஆசைப்பட்டபடி காதலி மனைவியாக அமைந்து விட்டாள் என்று உருகும் விஜய் ஆண்டனி அதன் பின்னர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நீண்ட நாட்களாகவே முழுக்க முழுக்க ரொமான்டிக் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டவர் விஜய் ஆண்டனி.. இந்தப் படத்தில் அதில் பாஸ்மார்க் பெற்றும் விடுகிறார்.. நிறைய காட்சிகளில் இப்படி ஒரு கணவர் கிடைக்க மாட்டாரா என பெண்களே ஏங்கும் அளவிற்கு நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார்.

நாயகி மிருணாளினி மெச்சூரிட்டியான நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கிறார்..

விஜய் ஆண்டனியின் காதலுக்கு ஐடியா மணியாக யோகி பாபு.. சில இடங்களில் டைமிங் காமெடியில் கலகலக்க வைக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், இளவரசு, ஷாரா ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

இயக்குனர் – விநாயக் வைத்தியநாதன்.

இசை – பரத் தனசேகர்

ஒளிப்பதிவு – பருக் ஜே பாஷா

பரத் தனசேகர் இசையில் செல்லக்கிளி உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. அதிலும் விஜய் ஆண்டனி ‘வெத்தல…’ பாடலுக்கு போட்ட ஆட்டம் நிச்சயம் ரசிகர்களையும் ஆட வைக்கும்..

ஒளிப்பதிவாளர் பருக் ஜே பாஷா தன் பணியில் பக்கா.. வைத்திருக்கும் இவரது கேமராக்கள் ஆங்கிள் அனைத்தும் படத்துடன் ஒன்ற வைக்கிறது..

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்.. என்ற பழமொழியை பார்த்து வந்திருக்கிறோம்.. இதில் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் என்ற வாழ்க்கை முறையை பார்க்கலாம்..

சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களின் வாழ்க்கையும் மனைவிக்காக விட்டுக் கொடுத்தும் செல்லும் ஆண்களின் உணர்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன்..

திரைக்கதையில் காட்சியமைப்பிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அல்லது காட்சி நீளத்தை ட்ரிம் செய்திருந்தால் இந்த ரோமியோ இன்னும் ரசிக்க வைப்பான்..

Romeo movie review

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்.. இது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜிவி பிரகாஷின் படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்களும் ரிலீஸ் ஆவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்னலாம்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் டியர்.

Deepika + Arjun = DeAr

இப்படத்தின் விமர்சனம் பார்ப்போம்…

கடந்த 2023 ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் ‘குட் நைட்’ இந்த படத்தில் ஹீரோ குறட்டை விடும் நபராக நடித்திருப்பார்.. அதையே கொஞ்சம் உல்ட்டா கதையாக டியர் படத்தில் ஐஸ்வர்யா குறட்டை விடும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

மனைவியின் குறட்டையால் கணவன் ஜி வி பிரகாஷ் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தான் இந்த படத்தின் கதை.

ஸ்டோரி..

ஒரு செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார் ஜி.வி பிரகாஷ்.. இவருக்கு பெரிய டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து பெரிய பெரிய விஐபி-களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

இந்த சூழ்நிலையில் நாயகனின் அம்மா ரோகிணி அண்ணன் காளி வெங்கட் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி ஐஸ்வர்யா உடன் திருமணம் செய்து வைக்கிறார்கள்.. அப்போதுதான் உறங்கும் போது மனைவி ஐஸ்வர்யாவுக்கு மிகப்பெரிய சத்தத்துடன் குறட்டை விடும் பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரமாக உறங்க வேண்டும்.. அப்போதுதான் வேலையில் முழு கவனத்துடன் செயல்பட முடியும் என நினைக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இந்த சூழ்நிலையில் தான் மனைவியின் குறட்டை சத்தத்தால் இவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..

ரெபெல், கள்வன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் மூன்றாவது வாரமாக வந்திருக்கும் படம் தான் இந்த டியர்… தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.. ஆனால் உடல் மொழியிலும் நடிப்பிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.. செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கும் பிரகாஷ் தாடி மற்றும் தலைமுடியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..

பெரும்பாலும் பெண்கள் குறட்டை விடுவதில்லை.. ஆனால் குறட்டை விடும் பெண்ணாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவை நிச்சயம் பாராட்டலாம்.. தனக்கு உண்டான பிரச்சனையை தீர்க்க இவர் பாடுபடும் வேதனைகள் சிந்திக்கவும் வைக்கிறது..

ஐஸ்வர்யாவின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக இளவரசு.. யதார்த்தமான நடிப்பில் கவர்கின்றனர்..

ஜிவி பிரகாஷின் தந்தையாக தலைவாசல் விஜய்… தாயாக ரோகினி அண்ணனாக காலி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.. மற்ற கேரக்டர்களுக்கு அட்வைஸ் செய்யும் நபராக இவர்கள் நடித்திருக்கின்றனர்.

அதிலும் தன் மனைவியை தன் கட்டுக்குள் அடிமையாக வைத்திருப்பவராக காளி வெங்கட் நடித்திருக்கிறார்.. இவரது மனைவியாக நடித்திருக்கும் நந்தினி கேரக்டர் நச் என்று பளிச்சிடுகிறது..

ஓடிப்போன தந்தை குடும்பத்தில் ஒரு அண்ணனாக இருந்து தம்பி மற்றும் குடும்பத்தை கவனிக்கும் காளி வெங்கட்டின் பாத்திரம் கனமான பாத்திரம்..

மூத்த மருமகளாக நந்தினி இரண்டாவது மருமகளாக ஐஸ்வர்யா.. இருவரும் இந்த குடும்பத்திற்கு கிடைத்த வரம் என்பது போல காட்சிப்படுத்தி இருப்பது மாமியார்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சந்தோஷத்தை தரும்..

விமானத்தில் பறக்கும் போது ஐஸ்வர்யாவிடும் குறட்டை அந்த கற்பனை பூகம்பம் நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைக்கும்..

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷ் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. இன்னும் பாடல்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பின்னணி இசை வழக்கம் போல சிறப்பு.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.. அழகான ஊட்டியை இன்னும் அழகாக காட்டி இருக்கிறது இவரது கேமரா.

செத்தும் ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த ரவிச்சந்திரன் தான் இந்த ஃபீல் குட் படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

குறட்டையை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் அவர் சென்று விடுவதால் படத்தை முடிப்பதற்குள் கொஞ்சம் தடுமாறி இருப்பது தெரிகிறது.. இடைவேளைக்குப் பிறகு வரும் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் எடிட்டர்..

கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பது எப்படி என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு..

Dear movie review

டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

ரஜினிகாந்த், கனகா, சின்னி ஜெயன்த், செந்தாமரை, சோ, வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடிப்பில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அதிசயப்பிறவி’.

அந்தப் படத்தில் ரஜினி இறந்து விடுவதாக ஒரு காட்சி இருக்கும். இதனை எடுத்து சித்ரகுப்தன் செய்த தவறினால் ரஜினியின் உயிர் முன்பே பறிக்கப்பட்டு விட்டதாக ஒரு காட்சி இருக்கும்.

இதனை எடுத்து தேவலோகத்தில் எமதர்மனிடம் சண்டையிடுவார்.. தனக்கு நியாயம் வேண்டும் என்பார் ரஜினிகாந்த்.

எனவே ரஜினிக்கு பொருத்தமான வேறு ஒரு உடலை தேடி அந்த உயிரை உள்ளே நுழைய வைக்க முயற்சிப்பார்கள். இந்த படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த கதையை நவீன தொழில்நுட்பத்துடன் இன்றைய 2k கிட்ஸ்களுக்கு பிடிக்கும் விதமாக வித்தியாசமாக ஒரு அனிமேஷன் முறையில் கொடுத்திருக்கும் படம் தான் ‘டபுள் டக்கர்’.

ஸ்டோரி..

சிறுவனாக இருக்கும் போதே ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்து விடுகிறார் தீரஜ்.. அந்த விபத்தில் இவரது முகம் தீப்பற்றி எரியவே முகம் அகோரமாக மாறிவிடுகிறது.

இதனால் வெளியே தலை காட்ட முடியாமல் குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் பெரியவனான பிறகு தனக்கு பிடித்த ஸ்மிருதி வெங்கடிடம் தன் காதலை சொல்கிறார். ஆனால் இவரது காதலை அப்போது ஏற்கும் சூழ்நிலையில் இல்லை நாயகி.

இதனால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சிக்கிறார் நாயகன் தீரஜ்.. எதிர்பாராத விதமாக நாயகி ஃபோன் செய்கிறார் காதலை ஒத்துக் கொண்டாரா என்ற எண்ணி அவர் தூக்கு கயிரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது இறந்து விடுகிறார்.

அந்த சமயத்தில் தான் அவரை எமலோகம் அழைத்துச் செல்ல இரண்டு கார்ட்டூன் பொம்மைகள் (வான தேவதைகள்) வருகிறது. ஒன்று முனீஸ்காந்த் & காளி வெங்கட்.. இதற்கு ரைட் லெப்ட் என்ற பெயரிட்டு இவர்களின் பின்னணி குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 85 வயது வரை வாழ வேண்டிய தீரஜின் உயிர் இவர்களின் தவறுதலால் பறிக்கப்பட்ட விவரம் நாயகனுக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து அவரும் சண்டையிட்டு தன் உடல் தனக்கு வேண்டும் என்கிறார். ஆனால் அவரது உடலை சாரா திருடி கொண்டு கடத்தி செல்கிறார்.

எனவே தற்காலிகமாக வேறு ஒரு உடலில் பொருத்தி கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ராஜாவின் உடலில் தீரஜின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அதன் பின்னர் தான் ராஜாவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதும் தெரிய வருகிறது.

இதனால் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் வான தேவதைகள் சிக்கிக் கொள்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? தீரஜ்-க்கு ஒரிஜினல் உடல் கிடைத்ததா? காதலர்கள் இணைந்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகனாக தீரஜ் நாயகியாக ஸ்மிருதி வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக கோவை சரளா, கேங்ஸ்டர் ஆக மன்சூர் அலிகான், ரவுடியாக சுனில் & ஷாரா, பைத்தியமாக எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்.

அரவிந்த் & ராஜா என்ற இரு கேரக்டர் உடல்களில் நாயகன் தீரஜ்.. மிகை இல்லாத நடிப்பு.. ரொமான்ஸ் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்..

அழகும் திறமையும் நிறைந்த நாயகி ஸ்மிருதி வெங்கட். கொடுத்த காட்சிகள் குறைவு என்றாலும் கேரக்டரில் நிறைவு..

சுனில் மற்றும் சாரா தனி டிராக்கில் பிளாக் காமெடி.

காமெடியில் பின்னி எடுத்து இருக்கிறார் இன்ஸ்பெக்டர் கோவை சரளா.. சில நேரங்களில் ஓவர் ஆக்டிங்.. வில்லன் மன்சூர் அலிகானுக்கு ஓவர் பில்டப் இன்ட்ரோ…

கார்ட்டூன் வான் தேவதைகளாக முனீஸ்காந்த் & காளி வெங்கட்.. இருவரது குரல்களும் டைமிங் காமெடிகளும் செம..

ஹைடெக் திருடர்களாக கருணாகரன் & யாஷிகா ஆனந்த் நடித்துள்ளனர். இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை.. யாஷிகாவின் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட்..

டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.. அவரது இசை இந்த படத்திற்கு நல்லதொரு பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

கினி கினி கின்கினி… என்ற பாடல் குழந்தைகளுக்கான பாடலாகவும் டாலுமா டாலுமா மை டியர் டாலுமா என்ற பாடல் காதலர்களுக்கான பாடலாக அமையும்..

கலை இயக்குனர் : சுப்ரமணிய சுரேஷ்

ஒளிப்பதிவாளர் : கௌதம் ராஜேந்திரன்

ஒளிப்பதிவாளர் & கலை இயக்குனரின் பணி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது..

மீரா மஹதி என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் பல டாப் ஹீரோக்களிடம கதை சொல்லி எவரும் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் ஒரு மருத்துவரை ஹீரோவாக்கி இருக்கிறார்.

இதனால் நாயகன் தீரஜ் ஒரு யதார்த்தமான நடிப்பு கொடுத்து இயக்குனரின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

குழந்தைகளையும் கவர வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சமான கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.. பெரியவர்களையும் கவரும் வகையில் வி எப் எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்..

வான தேவதை ரைட் & லெஃப்ட் இடத்தில் திடீரென கபாலி ரஜினி, ரோலக்ஸ் சூர்யா, விக்ரம் கமல் உள்ளிட்டோரும் வந்து செல்கின்றனர்.. இந்த காட்சிகள் கமர்சியலுக்காக இணைக்கப்பட்டுள்ளது என்றாலும் தேவையற்றதாகவே தெரிகிறது.

ஒரு காட்சி தொடங்கி தொடர்வதற்குள் நாம் அதற்குள் கனெக்ட் ஆவதற்குள் அடுத்த காட்சியை காட்டி விடுகிறார் எடிட்டர்.. சுனில் – சாரா & கருணாகரன் – யாஷிகா உள்ளிட்டோரின் காட்சிகள் நீளத்தை குறைத்து இருக்கலாம்.. (படத்தொகுப்பாளர் : வெற்றிவேல்)

நான்கு கதைகள் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் அதை எடிட்டிங் செய்த விதத்தில் சுவாரஸ்யம் குறைந்து விட்டது..

படத்தில் சில லாஜிக் குறைகள் இருந்தாலும்.. இன்னுமாடா எங்க படத்துல லாஜிக் பாக்குறீங்க என்ற ஒரு டயலாக் இடம்பெறுகிறது.. எனவே நாமும் லாஜிக்கை மறந்து இந்த டபுள் டக்கர் மேஜிக்கை குட்டீஸ் உடன் இணைந்து பார்த்து ரசிக்கலாம்..

Double Tuckkerr movie review

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

ஸ்டோரி…

ரவுடிகள் மீது போலீஸ் நடத்தும் ஒரு என்கவுண்டரில் தவறுதலாக ஆனந்தியின் கணவர் விஜித் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விடுகிறார்.

கணவனை இழந்த ஆனந்தி தனது சிறு வயது மகளை காப்பாற்ற வழியில்லாமல் போராடுகிறார்.. வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் வீட்டிலும் ஆதரவு இல்லாமல் அவதிப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் கணவர் வாங்கிய கடனை செலுத்த முடியாத போது மகளை தூக்கிச் சென்று விடுகிறார் பைனான்சியர்.. இரண்டு நாட்கள் கெடு விதித்து செல்கிறார்.

இரண்டு நாட்களுக்குள் குழந்தையை மீட்க வேண்டும் என ஆலோசிக்கும் நிலையில் ஆனந்தியின் தோழி ஒருவர்.. நான் விபச்சாரம் செய்து வருகிறேன். உனக்கு உடனடி பணம் தேவை என்பதால் நீயும் விருப்பம் இருந்தால் என்னுடன் வா என்கிறார்.

வேறு வழியில்லாமல் விபச்சாரத்திற்கு செல்லும் ஆனந்தி முதல் நாள் இரவே வில்லன் ஆர்கே சுரேஷின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்.

அவன் மிகப்பெரிய சைக்கோ கொலைக்காரன் என்பதை அங்கு போன பின்பு தான் தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? ஆர் கே சுரேஷிடம் இருந்து தப்பித்தாரா? தன் மகளைக் காப்பாற்றினாரா? ஆனந்தியை என்ன செய்தார் ஆர் கே சுரேஷ்? அவர் சைக்கோ கொலையாளியாக மாற என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

1. KAYAL ANANDHI as DIVYA

2. RK SURESH as DILIP

3. ROOSO SREEDHARAN as ACP VETRIMARAN

4. VIJITH as ASRAF

5. BABY NAKSHATRA as DIYA

6. SASI LAYA as INSPECTOR REKHA

7. SULIYAN BHARANI as YOUNG DILIP

8. RITTIKA CHAKRABORTHY as SWATHI

9. HASHIN as DOCTOR ANJALI

10. DHARANI REDDY as KAVYA

ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி சுமந்து நிற்கிறார் ஆனந்தி.. கடன் தொல்லை, விதவை, குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய் என அனைத்து உணர்வுகளையும் நடிப்பில் அழகாக காட்டியிருக்கிறார் ஆனந்தி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்டல் வில்லனாக ஆர்கே சுரேஷ்.. இதில் கொஞ்சம் வித்தியாசமாக சைக்கோ கொலைகாரனாக மாறி இருக்கிறார் படத்தில் மொத்தம் ஐந்து வார்த்தைகளை மட்டுமே பேசி இருப்பார்..

ஆர்கே சுரேஷ் யார்? அவரது பின்னணி என்ன ஆகிய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.

ஆர்.கே.சுரேஷின் இளவயது மருத்துவ கல்லூரி மாணவனாக வரும் சுலியன் பரணி நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..

தியாவாக பேபி நட்சத்திரா செம க்யூட்.. அம்மாவை ஏமாற்றி அப்பாவிடம் இவர் கொடுக்கும் பர்த்டே பார்ட்டி சர்ப்பிரைஸ்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக சசி லயா.. கம்பீரமும் கவர்ச்சியும் தூக்கலாகவே தெரிகிறது..

இவருடன் மற்றொரு நேர்மையான போலீஸ் ரூசோ ஸ்ரீதரன்.. சில நேர்மையான போலீஸ் அதிகாரிகளும் காவல்துறையில் இருப்பார்கள் என்பதற்கு இவரது கேரக்டர் ஒரு சான்று..

டெக்னீசியன்ஸ் …

11. Writer – Director: K RAJASHEKAR

12. Producer: N RANJANI

13. Cinematographer: V ELAYARAJA

14. Music: SUDHARSHAN

15. Editor: GOPIKRISHNA

16. Lyrics: Kaviperarasu Vairamuthu

17. Art: TN Kabilan

சுதர்ஷன் இசையில் பின்னணி இசை மிரட்டல்.. அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்பை உண்டாக்குகிறது.. வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது..

இளையராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. எடிட்டர் கோபிகிருஷ்ணா தன் பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

ஒரு த்ரில்லர் பாணியிலான கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.. தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வருகிறது ஆனால் அந்த நம்பரை டிரேஸ் செய்ய முடியவில்லை என போலீசு விளக்கம் கொடுப்பது நம்பும்படியாக இல்லை.. ஒரு போன் வந்த இடம் எங்கிருந்து என்பது கூட கண்டுபிடிக்காத அளவிற்கு காவல்துறை செயல்படுகிறது.??

மற்றபடி பெண்கள் ஒரு சைக்கோவிடம் மாட்டினால் காவல்துறையை விட அவர்கள் தன்னை நம்பி தப்பிப்பது சிறந்த வழி என்பதையும் ஒரு காட்சியாக வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.?!!??

White Rose movie review

More Articles
Follows