தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட தன் மகனை மீட்க போராடும் ஒரு தகப்பனின் கதை இந்த ஜெயிலர்..
கதைக்களம் :
முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகன் வசந்த ரவி மருமகள் பேரன் என ஒரு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான வசந்த் ரவி ஒரு சிலை கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். இதனால் அந்த கும்பலுக்கும் வசந்த ரவிக்கும் மோதல் உருவாக வசந்த ரவியை கடத்தி விடுகிறது.
அந்த கும்பலிடம் இருந்து தன் மகனை மீட்க அவதாரம் எடுக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர்.
அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் யதார்த்தமான சீனியர் சிட்டிசனாக அறிமுகமாகிறார் ரஜினி.
பேரனுடன் விளையாடுவது.. மனைவியுடன் செல்லமாக கோபிப்பது.. மகன் மீது பாசத்துடன் கை கோர்ப்பது என சிம்பிளாக வந்து செல்கிறார் சூப்பர் ஸ்டார்.
ஒரு கட்டத்தில் தன் மகனை மீட்க இவர் எடுக்கும் அசுரவேகம் அதகளம் செய்கிறது.
தலைவர் அலப்பறை தலைவர் நிரந்தரம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இடைவேளைக்குப் பிறகு மாஸ் காட்டி இருக்கிறார் ரஜினி.
மகனாக வசந்த்ரவி. இவரது கேரக்டரில் இயக்குனர் வைத்த திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.
அழகான மனைவி அன்பான துணைவி என்பது போல விஜயா கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
நடிகை காம்னா கேரக்டரில் தமன்னா.. காவலா பாட்டுக்கு நம்மையும் ஆட வைக்கிறார்.
கால் டாக்சி டிரைவராக யோகிபாபு வருகிறார். இவரும் ரஜினியும் சேர்ந்து செய்யும் டார்க் காமெடி களை கட்டியுள்ளது எனலாம்.
ரஜினிக்கு நிகரான மிரட்டல் வில்லனாக விநாயகன் நடித்திருக்கிறார். இவரது காட்சிகள் படத்திற்கு பெரும் பலம். முக்கியமாக இவர் எதிரிகளை கொல்லும் காட்சிகள் வித்தியாசமான கற்பனை.
மோகன்லால் – சிவராஜ்குமார் – ஜாக்கி ஷரப் ஆகியோரது கேரக்டர்கள் படத்திற்கு பிளஸ். ஆனால் அவர்களுக்கான கொடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு.
பெரிய சூப்பர் ஸ்டாரை பயன்படுத்தும் போது அதில் இன்னும் கொஞ்சம் வெயிட் ஏத்தி இருக்கலாம்.
பருத்தி வீரன் சரவணன் கொஞ்ச நேரம் வந்தாலும் சரவெடி. சுனில் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வர வைக்கிறது. இவரது கெட் அப் கூட சிரிக்க வைக்கும்.
டெக்னீஷியன்கள்…
தன் குடும்பத்தை காக்க ஒரு குடும்பத் தலைவன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை அதிரடி ஆக்ஷன் உடன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
அனிருத் இசையில் உருவான காவலா என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. தலைவர் அலப்பறை என்ற பாடல் ரஜினி ரசிகர்களை முறுக்கேற்றுகிறது. மற்ற பாடல் பெரிதாக கவனம் பெறவில்லை.
படத்தின் ஒளிப்பதிவு எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.
ஆனால் படத்தின் கருவாக கருதப்படும் ஜெயிலர் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. முக்கியமாக ரஜினியின் போலீஸ் கெட்டப் கவனம் பெறவில்லை.
இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு தான். ஆனால் அதை எல்லாம்
கிளைமாக்ஸில் வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் ஹைலைட்டாக கருதப்பட்ட டார்க் காமெயை இந்த படத்திலும் இடைவேளை வரை கொடுத்து படத்தை படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார். முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் ட்ரீட் கொடுத்துள்ளார் நெல்சன்.
ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்டைலான மாஸ்தான்..
அதை ஒரு காட்சியில் வைத்து ரஜினி மோகன்லால் சிவராஜ்குமார் ஆகிய மூவருக்கும் சேர்த்து சூப்பர் ஸ்டார் பாடலை ஒலிக்க விட்டது கூடுதல் சிறப்பு.
ஆக ‘ஜெய்லர்’.. ஜெயிச்சுட்டாரு..
rajinikanth’s Jailer review and rating in tamil