தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
18 கன்னடப் படங்களை இயக்கியுள்ள தமிழரான தயாள் பத்மநாபனுக்கு இது முதல் தமிழ்ப் படம்.
2018ல் ‘ஆ காரல ராத்ரி’ என்னும் கன்னடப் படத்தை இயக்கி அதை தற்போது தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார்.
தன்னுடைய சுயலாபத்திற்காக ஒருவரை கொன்றால் அது பாவமா இல்லையா.? என்பதுதான் இதன் கதை
கதைக்களம்…
கருப்பசாமி (சார்லி), அவர் மனைவி வள்ளியம்மாள் (ஈஸ்வரி ராவ்). இவர்களது மகள் மல்லிகா (வரலட்சுமி சரத்குமார்). இவர்கள் வீட்டு அழையா விருந்தாளி.
சார்லி, ஈஸ்வரி, வரலட்சுமி இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால் வரலட்சுமிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.. ஒருநாள் இக்கட்டான சூழ்நிலையில் வரும் சந்தோஷ் இவர்கள் வீட்டில் தங்க நேரிடுகிறது. அவரிடம் அதிக அளவில் பணம் நகைகள் இருப்பதை கண்டறிகின்றனர்.
இதனையடுத்து அவர்களை இந்த குடும்பத்தினர் கொல்ல திட்டமிடுகின்றனர் இறுதியில் என்ன ஆனது? கொன்றால் பாவம் இல்லையா என்பதே படத்தின் கதை.
கேரக்டர்கள்….
வரலட்சுமி, சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். படத்தின் கதை ஓட்டத்தை புரிந்து அதற்கு ஏற்ப தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்
பார்வையற்றவராக வரும் சென்றாயன், காவலராக வரும் கவிதாபாரதி, சாராயக் கடை முதலாளி சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.
டெக்னீஷியன்கள்…
செழியனின் ஒளிப்பதிவு காலத்துக்கு ஏற்ப நம்மை பயணிக்க வைக்கிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை வழக்கம்போல நம்மை கவர்ந்து விடுகிறது.. மேலும் த்ரில்லர் படத்திற்கு தேவையான பதட்டத்தைக் கூட்டுகிறது. பாடல்களும் நம் கவனம் ஈர்க்கின்றன.
இயக்குநர் தயாள் பத்மநாபன்.. ஒருவனுக்கு திருடவே மனமில்லை என்றாலும் அதிக அளவு பணத்தை பார்த்தால் மனம் சஞ்சலப்படும்.. திருடத் தூண்டும் என்பதையும் அப்பட்டமாக தன் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
மேலும் மனித வாழ்வில் ஆசையை என்றுமே தவிர்க்க முடியாது.. அதற்கு எல்லையே கிடையாது என்பதையும் சொல்லியிருக்கிறார்..
அதே சமயம் கொன்றால் பாவம்.. தண்டனை ஒருநாள் வரும் என்பதையும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் உணர்த்தி இருப்பது கூடுதல் சிறப்பு..
ஆக கொன்றால் பாவம்.. சரிதான்..
Kondral Paavam movie review and rating in tamil