தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தின் தோல்வியால் ரஜினி மற்றும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஏற்பட்ட பிரிச்சினை நாம் அறிந்ததே.
இந்நிலையில் இவ்வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் என கூறப்படும் கபாலியும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் தாணுவிடம் முறையிட்டுள்ளனர்.
படத்தை வாங்கி வெளியிட்ட ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து, தனக்கு பணம் வரவுள்ளதால், அது கிடைத்த உடன் தெரிவிக்கிறேன் என்று கூறினாராம் தாணு.
ஆனால் அதற்குள், நஷ்டம் ஏற்பட்டால் எப்போதும் ரஜினியிடம் கேட்கும் நீங்கள் இப்போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.?
ரஜினியிடம் சென்று நஷ்டஈட்டை கேளுங்கள் என தாணு தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகிவிட்டது.
கபாலீஸ்வரா… இனி இது தொடர்பாக என்னென்ன வதந்திகள் உலா வரப்போகிறதோ.?