நான் ஆடுவதை நிறுத்த காரணம் சிவகார்த்திகேயன் தான்.. – மாரி செல்வராஜ்

நான் ஆடுவதை நிறுத்த காரணம் சிவகார்த்திகேயன் தான்.. – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் பேசியதாவது…

”தமிழ் சினிமாவிற்கு ’அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ’பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ’கேஜிஎப்’போ அதேபோல் சிஜியில் தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். இயக்குநர் ரவிக்குமார் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி உள்ளீர்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது ’அயலான்’ பொங்கல்” என்றார்.

அடுத்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசும்போது, “ரவிக்குமார், விவேக் போன்ற புதிய தலைமுறை கலைஞர்களுடன் பணிபுரிந்து உள்ளேன். சிஜி என்றதும் பயம் வந்தது. ஆனால், இந்தப் படத்தில் சிஜி நன்றாக இருந்தது.

இதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே”.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…

“இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம்.

நான் பால் போட்டால் சிக்ஸர் தான். இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரஹ்மான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர்.

அதுக்காக தென்‌மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு! கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார்…

“இந்தப் பயணத்தில் நிறைய நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி. இந்தப் படத்திற்காக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ’அயலான்’ ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்துக்கு நன்றி.

இந்த சமயத்தில் என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அவரது ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு. இந்தப் படத்தை ஏன் இத்தனை வருடங்கள் விடாமல் நான் வைத்திருந்தேன் என்றால், என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த கமிட்மெண்ட்தான் காரணம். படத்தின் கலெக்‌ஷன் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஒரு படத்தை உணர்வுப்பூர்வமாக பார்ப்பவன் நான். இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. ரஹ்மான் சார் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது.

இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். நீரவ் ஷாவின் அனுபவம் பெரியது. அவர் எங்களுக்கு மிகப்பெரிய பலம். இப்படி திறமையான கலைஞர்களை வைத்துக் கொண்டு படம் சரியாக எடுக்கவில்லை என்றால் என்மீதுதான் பிழை.

அதனால், எல்லா விஷயங்களுமே சிறப்பாக செய்துள்ளோம். விஎஃப்எக்ஸ் வைத்து படம் நிச்சயம் சிறப்பாக எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை சாத்தியமாக்கிக் கொடுத்த சாந்தோம் எஃபெக்ட்ஸூக்கு நன்றி. உலகத்தரமான எஃபெக்ட்ஸை அவர்கள் செய்து கொடுத்தனர். அந்தக் காட்சிகளை எல்லாம் பாக்கும்போது எனக்கே பெருமையாக இருந்தது. என் உதவியாளர்கள் என்னுடன் ஆறு வருடங்களாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சப்போர்ட் மிக அதிகமாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னை எந்த இடத்திலும் சந்தேகிக்கவில்லை, தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

நான் எப்போதுமே அவருக்கு ஸ்பெஷல். இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளளார்” என்றார்.

Mari Selvaraj speech about Sivakarthikeyan at Ayalaan event

ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவான ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’

ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவான ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’.

மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கதை மேலும் இளமை துள்ளலாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது.

மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். வடசென்னை பையனாக மஹத் இந்தப் படத்தில் நடித்திருப்பது இந்தக் கதைக்கு கூடுதல் மைலேஜை சேர்த்திருக்கிறது. படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும் என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் வில்லனாக
ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

*நடிகர்கள்*: மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆதித்யா கதிர், தங்கதுரை, கூல் சுரேஷ், மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழு:*

தயாரிப்பு : ஃபேவின்ஸ் பால்,
தயாரிப்பு பேனர்: வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்,
இயக்கம்: பிரபுராம். செ,
ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்,
படத்தொகுப்பு: பி. பிரவின் பாஸ்கர்,
பாடல் இசை: தரண் குமார்,
பின்னணி இசை: கார்த்திக் கிருஷ்ணன்,
கலை: கிஷோர்,
பாடல் வரிகள்: லோகன் கு கார்த்திக்,
ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம், நடனம்: சசி குமார்,
SFX :கண்ணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா

Mahath starring kettavanu per edutha nallavanda movie news

டார்க் காமெடியில் இணைந்த சத்யராஜ் – வெற்றி எம்.எஸ்.பாஸ்கர் – கோவை சரளா

டார்க் காமெடியில் இணைந்த சத்யராஜ் – வெற்றி எம்.எஸ்.பாஸ்கர் – கோவை சரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘குரங்கு பொம்மை’ படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Sathyraj Vettri Ms Baskar Kovai Sarala teams up for dark comedy

உண்மை சம்பவத்தை சொல்லி ரசிகர்களுக்கு ‘ஜெர்க்’ கொடுக்கும் சினிமா

உண்மை சம்பவத்தை சொல்லி ரசிகர்களுக்கு ‘ஜெர்க்’ கொடுக்கும் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு “ஜெர்க்” என்று வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் குட்டி கோபி, ஃபிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்குமார், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆலன் பரத்
பிரபல இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜூம்கானா பாடல் மூலம் பட்டிதொட்டியிங்கும் பிரபலமான பாடலாசிரியர் கு. கார்த்திக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஏழுதியிருக்கிறார்.

ஜெர்க்

எடிட்டிங் – சுனில் காசிப்

ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா

கலை – அன்பரசு

நடனம் – இருசன்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – 2K புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – குரு.

ஜெர்க்

படம் பற்றி 2 K டீம் பகிர்ந்தவை…

மலைப் பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும், பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித் துவத்தால் இன்று வரை அடிமைபட்டுத் தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்றுவரை கேள்விக் குறியாக தான் இருக்கிறது.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பே இல்லாத தமிழகத்தின் ஒரு முக்கியமான மலைபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப்பகுதியில் நடத்தியிருக்கிறோம்.

இசையமைப்பாளர் தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலம்.

இந்த படத்தில் இடம்பெறும் ” நீல மலையே ” என்ற பாடலை அயப்பனும் கோஷயும் படத்தில் பாடியதற்கு தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சமாள் பாடியிருக்கிறார்.

” உன்னை போல யாருமில்ல ” என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும்,
” மஜா மஜா ” என்ற பாடலை செந்தில் ராஜலட்சுமியும் பாடியிருக்கிறார்கள்.

இந்த மூன்று பாடல்களுக்கும் தரண் குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார் நிச்சயம் இந்த மூன்று பாடல்களும் இந்த வருடத்தின் வெற்றி பாடல் மட்டுமல்லாமல் இணையதலங்களை அலங்கரிக்கும் பாடல்களாகும் என்பது எங்களது நம்பிக்கை.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்கிறார்கள்.

ஜெர்க்

Jerk based on true incidents which happened 30 years ago

பிரசாந்த்தின் சினிமாடிக் யுனிவர்ஸ் படம் ‘ஹனு-மான்’..; 3D தொழில்நுட்ப விளக்கக் காட்சி

பிரசாந்த்தின் சினிமாடிக் யுனிவர்ஸ் படம் ‘ஹனு-மான்’..; 3D தொழில்நுட்ப விளக்கக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும், இப்படம் குறித்து ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் படக்குழுவினர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அண்மையில் இப்படத்திற்கான திரையரங்க முன்னோட்டம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர்.

அவை அனைத்தும் சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான வகையில் உருவாகி.. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் 4வது பாடலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தின் பாடல் -இசையமைப்பாளர் கௌரஹரியின் இசை கோர்வையில் உருவாகி இருக்கிறது.

இந்தப் பாடலை சாய் சரண் பாஸ்கருணி, லோகேஷ்வர் இடாரா மற்றும் ஹர்ஷவர்தன் சாவேலி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.‌ இப்பாடலுடன் வெளியிடப்பட்டிருக்கும் 3D தொழில்நுட்பத்திலான விளக்கக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இதனை நாம் திரையில் காட்சிகளுடன் காணும் போது வியப்பில் ஆழ்த்துவது உறுதி. முதல் மூன்று பாடல்களைப் போலவே ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் இந்தப் பாடலும் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும்.

ஹனு-மான்

ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

ஸ்ரீமதி சைதன்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்க பொறுப்பை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.‌

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் திரைப்படம் ‘ஹனு-மான்’. இத்திரைப்படம் ‘அஞ்சனாத்ரி’ எனும் கற்பனையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால் இது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான சாத்திய கூறு உள்ளது.

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மான்’ திரைப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் படமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

Hanuman movie 4th single song released

இசைவாணி – சரவெடி சரண் இணைந்து பாடிய ‘குக்குரு குக்குரு’

இசைவாணி – சரவெடி சரண் இணைந்து பாடிய ‘குக்குரு குக்குரு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் ‘குக்குரு குக்குரு’ பாடல் வெளியானது.

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார்.

கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் A அலெக்சின் தனியிசைப் பாடல்களுக்கு வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறார்.

குக்குரு குக்குரு

உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இசைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்சிஸ்.

குக்குரு குக்குரு கானா பாடலை ஸ்பெயின் நடனக்கலைஞர் களோடு பாடகி இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

யூடியூப் ல் வைரலாகி வருகிறது இந்த பாடல்..

Kukuru Kukuru. Songs

Kukuru Kukuru album song goes viral

More Articles
Follows