தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமூகம் ஜாதி சார்ந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் பா ரஞ்சித்.
ஒரு பக்கம் ‘கபாலி’ ‘காலா’ என ரஜினியின் பிரம்மாண்ட படைப்புகளை இயக்குனராக கொடுத்தார்.
தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
விரைவில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்குவார் என அவரே தெரிவித்து இருந்தார்.
மறுபக்கம் வித்தியாசமான படைப்புகளை ஒரு தயாரிப்பாளராக உருவாக்கி வருகிறார்.
இவரது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை, குதிரைவால், பொம்மை நாயகி என தரமான படங்களை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
நாளை பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு தங்களது புதிய படைப்பின் தலைப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்தை இயக்கிய ஆதிரை அதியன் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Ranjiths direction 10th movie News updates