தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் முதல் காட்சி துவங்கும் போதே அதில் ரஜினியின் கபாலி சிலை திரையில் காட்டப்படும்.
அப்போது இயக்குனர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை நாம் உணரலாம்.
மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கொடுத்த நிலையில் அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டி எனக்கும் ஒரு கதை ரெடி செய்யுங்கள் என அன்பு கட்டளை விடுத்திருந்தார்.
எனவே ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெருங்குசாமி இயக்குவார் என திரையுலகம் எதிர்பார்த்த நிலையில் சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் தேசிங்கு.
ரஜினியின் தீவிர ரசிகரான தேசிங்கு பெரியசாமிக்கு தன் பேனரில் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் கமல்ஹாசன்.
இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆனாலும் இதன் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவர் தேசிங்கு பெரியசாமி உடன் சீரியஸ் டிஸ்கஷனில் இருப்பது தெரிகிறது.
இந்த புகைப்படம் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
Simbu and Desingu Periyasamy serious discussion