கேப்டன் மில்லர் விமர்சனம் 4/5

கேப்டன் மில்லர் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக போராடும் ஒரு கேப்டனின் கதை இந்த படம்.

அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவான படம் ‘கேப்டன் மில்லர்’.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…

1947 இந்திய சுதந்திர பெறுவதற்கு முன்பு நடைபெற்ற கதை களத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

வெள்ளைக்காரனை எதிர்த்து போராடுகிறார் சிவராஜ்குமார். இவரின் தம்பி தனுஷ். இதில் ஆங்கிலேய பட்டாளத்தில் சேர ஆசைப்படுகிறார் தனுஷ் (ஈசன்).

சுதந்திரத்தை வாங்கி ஜெயபிரகாஷ்க்கு தானே கொடுக்கப் போற.. அவிங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். எனவே நான் பட்டாளத்துல சேர்றேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். பட்டாளத்தில் சேர்ந்து சிறந்த சிப்பாயாக தேர்ச்சியும் பெற்று விடுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்திய மக்களை சுட்டுக்கொன்று குவிக்க வேண்டும் என கட்டளை இடுகிறது ஆங்கிலேய ராணுவம். தனுஷ் முதலில் செய்ய தயங்கினாலும் பின்னர் கட்டளைக்கு கட்டுப்பட்டு சுற்று கொன்று குவிக்கிறார்.

பின்னர் தான் செய்த தவறுக்காக வருந்தும் தனுஷ் தனக்கு கட்டளையிட்ட தலைமை வீரனை கொன்று விடுகிறார். இதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரியாகி விடுகிறார். இதனையடுத்து மில்லர் கேப்டன் மில்லராக மாறுகிறார்.

தலைமறைவான தனுஷை ஆங்கிலேயர்கள் தேடுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது? தனுஷ் பிடிபட்டாரா?ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இளம் வயதிலேயே இரண்டு முறை தேசிய விருது வென்றவர் தனுஷ். ஒவ்வொரு படத்திற்கும் அவரது மெனக்கடலும் அர்ப்பணிப்பும்தான் இந்த உயரத்தை அவரால் எட்ட முடிந்தது. அந்த வகையில் இந்த படத்திலும் தன்னுடைய கடின உழைப்பை கொட்டி கேப்டன் மில்லருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்.

பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல், வில்லனாக Edward Sonnenblick & அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கேன், ஸ்வாதி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு சரியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

‘ஜெயிலர்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் மோகன்லால் – சிவராஜ்குமார் மாஸாக இருப்பது போல ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சந்தீப் கிஷன் இருவரும் பட்டையை கிளப்பி உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.. பிரம்மாண்டத்தை எங்களாலும் கொடுக்க முடியும் என சவால் விட்டுள்ளார்.

கலை இயக்குனர் ராமலிங்கத்திற்கு தனி பாராட்டுக்கள்.. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை தனது கலை வண்ணத்தில் அழகாக வடிவமைத்து இருக்கிறார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டங்களை நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் வித்தியாசம் காட்டி கூடுதல் கலையை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம்.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் அதீத அர்ப்பணிப்பை கொடுத்து இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

ராக்கி & சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். முந்திய இரண்டு படங்களில் தெறிக்க தெறிக்க ரத்த காட்சிகள் இருக்கும். எனவே தன்னுடைய மூன்றாவது படத்தில் அதைவிட அதிகமாகவே ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இந்த அருண் மாதேஸ்வரன்.

அவரது முந்தைய இரண்டு படங்களை உங்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயம் இந்த படமும் பிடிக்கும். இன்றைய மாடன் மங்கைகள் ஆக்சனை அதிகம் விரும்புவதால் அவர்கள் மத்தியிலும் இந்த படம் நிச்சயம் பாப்புலராகும். முக்கியமாக தனுஷின் ரசிகைகள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

இனி வரும் காலங்களிலாவது அருண் மாதேஸ்வரன் இந்த ரத்த வெறியை கொஞ்சம் கண்ட்ரோல் செய்து படங்களை கொடுத்தால் குடும்ப ரசிகர்களும் அவரது படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள்.

இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் நிச்சயம் தனுஷுக்கும் அருண் மாதேஸ்வரனுக்கும் அவர்களது சினிமா கேரியரில் முக்கியமானதாக இருக்கும்.

கதையை 5 அத்தியாயமாக பிரித்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். கிட்டத்தட்ட மூன்று தோற்றங்களில் தனுஷை காட்டிய விதம் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ்.

ஆக இந்த கேப்டன் மில்லர் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கேப்டன் மில்லர்

Captain Miller movie review and rating in tamil

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்..

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதை தான் இந்த மெரி கிறிஸ்மஸ். மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட காலத்தில் இந்த கதை நகர்வதாக காட்டப்படுகிறது.

ஏழு வருட சிறை தண்டனைக்கு பிறகு தனது நன்னடத்தை காரணமாக ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிறார் விஜய் சேதுபதி. அவரை வரவேற்கிறார் ராஜேஷ். அன்று கிறிஸ்மஸ் திருநாள்.

அன்று எதிர்பாராத விதமாக ஒரு ஹோட்டலில் கத்ரீனாவை அவளின் மகளுடன் சந்திக்கிறார் விஜய்சேதுபதி. பின்னர் தியேட்டருக்கு செல்கின்றனர். அங்கும் அவர்கள் சந்திக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல இருவருக்கும் இடையே நட்பு தொடர்கிறது.

தனது வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லி வரவழைத்து உபசரிக்கிறார் கத்ரீனா. சில மணி நேரங்களில் மற்றொரு அறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எனவே விஜய் சேதுபதி உதவியை கேட்கிறார் கத்ரீனா. ஆனால் நான் இப்போதுதான் ஜெயில்யிருந்து விடுதலை ஆகி வந்தேன். மீண்டும் போலீஸிடம் சிக்கினால் பிரச்சனையாகும் என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? கத்ரினாவுக்கு உதவி செய்தாரா விஜய் சேதுபதி.? கணவரை கொன்றவர்கள் யார்.? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன்
கவின் பாபு மற்றும் பலர்.

கதையின் நாயகன் விஜய்சேதுபதி என்றாலும் கத்ரீனா பெயர் தான் டைட்டில் கார்டில் முதலில் இடம் பெறுகிறது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கலாம். இதற்கு முன்பு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தீபிகா படுகோனவின் பெயர் இடம் பெற்றது. அதை ஷாருக்கான் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படபட பேசாமல் நிறுத்தி நிதானமாக பேசி தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் விஜய்சேதுபதி.. ஆனால் கத்ரீனாவிடம் இருக்கும் பயம் இவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை என்பது ஏன்? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது

தமிழ் வசனங்களுக்கு ஏற்ற உதட்டு அசைவு சிறப்பு. கத்ரீனாவுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார் தீபா வெங்கட்.. பயம் பதட்டம் ஏக்கம் தவிப்பு தயக்கம் என ஒவ்வொன்றையும் அழகாக உணர்ச்சிப்பூர்வமாக காட்டி நடித்திருக்கிறார் கத்ரீனா.

மகளாக வரும் சிறுமி பரி ஷர்மா. இவருக்கு படத்தின் ஒரு வசனம் கூட கிடையாது. ஆனால் ஒரே ஒரு வசனத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டு அப்ளாசை அள்ளிச் செல்கிறார் பரி ஷர்மா.

கவின் ஜே.பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் ஆகியோர் காட்சிக்கும் படத்திற்கும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளனர்.

முக்கியமாக போலீஸ் சண்முகராஜன், ராதிகா ஆகியோரின் விசாரணை கண்ணோட்டம் ரசிக்கவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

ஏழு வருடத்திற்கு முந்தைய பிளாஷ்பேக்கில் கௌரவத் தோற்றத்தில் ராதிகா ஆப்தே வருகிறார்.

டெக்னீசியன்ஸ்…

இயக்குநர் – ஸ்ரீராம் ராகவன்

தயாரிப்பு
டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்

பெரும்பாலும் வசனங்கள் லைவ் முறையில் படம் ஆக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஓரிரு வசனங்கள் சிந்திக்க வைக்கிறது

கத்ரினா தன்னுடைய ஃப்ளாஷ்பேக் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது.. போட்டோக்களில் நீங்கள் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிகிறது என்கிறார் விஜய் சேதுபதி.. யாராவது அழுவது போல போட்டோ எடுத்து வைப்பார்களா என்று கேட்கிறார் கேத்ரினா.

இது ஒரு ஹிந்தி படமாக உருவாக்கப்பட்டாலும் தமிழிலும் ரசிக்க முடிகிறது.

விஜய் சேதுபதி, ராதிகா, ராஜேஷ், சண்முகராஜன் ஆகியோரது தமிழ் உச்சரிப்புகள் போல கத்ரீனாவுக்கும் தமிழ் உச்சரிப்புகள் பொருந்துகிறது.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். பூஜா லதா ஸ்ருதி படத்தொகுப்பு. ப்ரீத்தமின் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘காணாத காதல்’ பாடல் இதம். டானியல்.பி.ஜார்ஜ் பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார்.

பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் வசனம் & திரைக்கதையில் தங்கள் எழுத்து ஆர்வத்தை காட்டி இருக்கிறது.

இது காதல் படமா? திரில்லர் படமா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒரு கிறிஸ்மஸ் இரவில் நடக்கும் கதையை விடிவதற்கு சொல்லி முடித்திருக்கிறார் அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

இந்தி மட்டுமல்லாது, தமிழிலும் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பதால் அதையும் பாராட்டலாம். ஆனால் முன் பாதி நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை பல காட்சிகள் தருகிறது.

இரண்டாம் பாதியில் வரும் டார்க் ஹுயூமோர் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.

Merry Christmas movie review and rating in tamil

அயலான் பட விமர்சனம் 3.75/5

அயலான் பட விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர் ரவிக்குமார். பல ஆண்டுகளுக்கு முன்னரே டைம் டிராவல் கதையை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியமாக கொடுத்திருந்தவர் இவர்.

தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரகுமான் உடன் கைகோர்த்து விருந்து படைத்திருக்கிறார்.. அயலான் விமர்சனத்தை பார்ப்போம்..

இதுவும் கிட்டத்தட்ட டைம் ட்ராவல் கதை என கூறலாம்.. காரணம் 2030ல் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை வித்தியாசமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஸ்டோரி…

மக்கள் தொகை அதிகமானதால் 2030ல் வாயு எனர்ஜி பூமிக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. வழக்கம் போல தேவைக்கு ஏற்ப வியாபாரம் & வியாபாரிகளும் அதிகரிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் பூமியில் மிக ஆழமான ஒரு இடத்தில் இருந்து அந்த எனர்ஜியை எடுக்க பல முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் பேசுகிறார் வில்லன் ஷரத் கேல்கர். இதற்காக அவர் ஒரு ஸ்பெஷல் கருவி வைத்திருப்பதாக சொல்கிறார்.

வில்லனின் திட்டத்தை தெரிந்து கொண்ட வேற்றுக்கிரக ஏலியன் ஒன்று எல்லா ஜீவராசிகளையும் காக்க களத்தில் குதிக்கிறது.. இதனால் ஏலியனுக்கும் வில்லன் ஆரியனுக்கும் (ஷரத் கேல்கர்) மோதல் முற்றுகிறது.

ஒரு கட்டத்தில் இயற்கை விரும்பியான சிவகார்த்திகேயனை ஏலியன் சந்திக்கிறது இருவரும் நட்பாகின்றனர். நாளடைவில் ஏலியனின் சக்தி எல்லாம் சிவகார்த்திகேயன் கைக்கு மாறுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? வில்லன் திட்டத்தை முறியடித்தார் நாயகன்? சக்தி கிடைத்த பின் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? அதன் பின்னர் ஏலியன் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகளையும் கவரும் கலையைத் தெரிந்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கு ஏற்ப திரைக்கதையும் தேர்வு செய்கிறார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.

டான்ஸ், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பட்டையை கிளப்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனது ஒன்லைனர் காமெடி மூலம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் யோகிபாபு. இவருடன் கருணாகரனும் கைகோர்த்து உள்ளது கூடுதல் பலமான கூட்டணி.

ஏலியனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் அசத்தல்.. அதிக உழைப்பை கொட்டி இருக்கிறார்..

நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங்.. கதைக்கு ஏற்ப மிக இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வில்லனாக ஷரத் கேல்கர். முதலீட்டாருடன் ஒப்பந்த பேசும் விஷயமாகட்டும் ஏலியனை எதிர்த்து நிற்கும் துணிச்சலாகட்டும் என அசத்தியிருக்கிறார் ஷரத்.

டெக்னீசியன்ஸ்..

பொதுவாகவே வேற்று கிரக கதை ஏலியன் கதை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப அழகாக திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

2020 மட்டுமல்ல 2030+ வரைக்கும் தன்னால் இசையமைக்க முடியும் என்பதை தன் இசையின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் குரல் கொடுத்து அந்த கேரக்டருக்கு மெருகேற்றி இருக்கிறார்.

என்னதான் ஆங்கில படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து நாம் அசந்து போனாலும் இந்த அயலானிலும் அதற்கு ஏற்ப பிரம்மாண்டத்தை கொடுத்து இருக்கிறது (தயாரிப்பு) கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

ஏலியனை குழந்தைகள் கொண்டாடும் வகையில் பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.

சமீபகாலமாக 1980 – 90 போன்ற கதைகள் அமைந்து வரும் நிலையில் 2030 கதை களத்தை அமைத்து குடும்பத்துடன் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இந்த பூமியும் இந்த பிரபஞ்சமும் மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கும் அதுதான் உலகம்.

இந்த ஜீவராசிகளுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும் ஒன்றோடு ஒன்றாக சார்ந்தே வாழ்கின்றன.

இந்த ஜீவராசிகளை ஏலியன் காப்பாற்ற போராடுவது போல கதை அமைத்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கின்றனர் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன்.

Ayalaan movie review and rating in tamil

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பட விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

1993 ஆண்டில் கதை தொடங்குகிறது. நானும் பேய்தான் என்ற படத்தை இயக்கியவர் மரியம் ஜார்ஜ்.

ஒரு முறை அவர் அந்த தியேட்டருக்கு சென்று படம் பார்க்க நினைக்கையில் திடீரென அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்தியிடம் சிக்கி கொள்கிறார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தியேட்டருக்கு படம் பார்க்க சில இளைஞர்கள் & இளைஞ்சிகள் செல்கின்றனர்.

வாங்க அங்கிள் விளையாடலாம் என்ற ஏ பிட்டு படத்தை பார்க்க வருகின்றனர். அவர்களும் தியேட்டரை விட்டு வெளியே செல்ல முடியாமல் படத்தை ரசிக்கவும் முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர்

பேய் படத்தை ஓட்டிய அந்த தியேட்டருக்கு என்ன பிரச்சனை.? அந்த தியேட்டரில் ஏதேனும் பிளாஷ் பேக் இருக்கிறதா? இவர்கள் சிக்கிக் கொள்ள காரணம் என்ன? இவர்களைப் பேய் பழிவாங்க திட்டமிட்டதன் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை

கேரக்டர்ஸ்…

Sathymurthi as sathya
Vijaya Kumar Rajendran as Vijay
Gopi aravind as Gopi
Sudhakar Jayaraman as Sudhakar
Munishkaanth as M. Dharmaraj
George Maryan as Christopher kannaiyan
Riythvika as Geetha
Harija as Harija
Yaashika aanand as Isha
RS karthik as Micheal
Sha ra as Gobi
Abdool as Abdool
Crane manohar as Uthama raja
Augustine as Prakash
Santhosh as Chinraasu
Jaiseelan as SK
Nandha as Nandha
Ajith as Trump
Charukesh as அரவிந்த்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

பிளாஷ்பேக் காட்சி இந்த படத்திற்கு கூடுதல் பலம்.. அந்த காட்சிகளில் வரும் முனீஸ்காந்த், ரித்விகா ஆர் எஸ் கார்த்திக் சாரா அப்துல் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர்.

இவர்கள் வரும் காட்சிகளில் பேய் இல்லை என்றாலும் பேய்தனமான உழைப்பை கொடுத்திருக்கின்றனர்

Youtube-ல் பிரபலமான விஜய் ஹரிஜா கோபி சுதாகர் ஆகியோர் youtube போலவே சினிமாவை நினைத்து விட்டார்களே?! அதே சேட்டைகளை செய்து நம்மை நோகடித்து விட்டனர்.

நாயகனாக சத்தியமூர்த்தி… பாவம் இவர்தான் நாயகன் என்பது இவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.. பல காட்சிகளிலும் பலரது உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

டெக்னீசியன்ஸ்…

Direction – Ramesh Venkat
Music – Kaushik Krish
DOP – Joshua J Perez
Editor – Ganesh siva
Sound Mix – Harish Kumar
Colorist – Nandha Kumar (I Gene)
Stunt – Suresh Horse Babu
Art director- V. Sasi kumar
Art assistant- Raja, Gnanavel
Costumer- Ravindran
Make up – Shanmugam
Dubbing engineer – Rajesh
VFX – Aksha Animation ( Ashok Kumar )
SFX – Prem Kumar
Production Manager – Siva Kumar
PRO – SathishKumar
Publicity Designer – Yuvaraj Ganesan, Yadav JBS

*Production House* :
Akshaya Pictures Rajan

25 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டு முயற்சியாக இந்த படத்தை எடுத்துள்ளனர். அவர்களின் கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதே சமயம் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதும் நமது கடமை தானே..

எந்த ஒரு கதைக்களமாக இருந்தாலும் கதையே இல்லை என்றாலும் அதை ரசிகர்கள் ரசிக்கும்படி திரை வடிவம் கொடுத்து வசனங்கள் கொடுத்தால் நிச்சயம் ரசிப்பார்கள்.. ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் கொண்டு வந்திருப்பது தான் நமக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது.

பொதுவாக பேய் படங்களை ஒரு அடர்ந்த காட்டு பங்களாவுக்கு வைத்திருப்பார்கள். அல்லது யாருமே போகாத பங்களாவுக்கு இதன் கதையை நகர்த்தி இருப்பார்கள். இதில் வித்தியாசமாக ஒரு தியேட்டரில் நடப்பதாக கதைக்களத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.

அதிலும் ஒரு பேய் படத்தை அந்தத் தியேட்டரில் ஓடவிட்டு நால்வரை கொன்றுவிட்டு ஒரு பரபரப்பை ஏற்றி வித்தியாசமான கதைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அந்த தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்கள் பேயிடம் மாட்டிக் கொண்டு வெளியே ஓடவும் முடியாமல் தியேட்டிற்குள் ஒளியவும் முடியாமல் படும் அவஸ்தைகளை இந்தப் படம் சொல்கிறது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu movie review

காதலில் சிக்கிய நண்பன்.; கும்பாரி விமர்சனம்..

காதலில் சிக்கிய நண்பன்.; கும்பாரி விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

காதல் நட்பு அண்ணன் தங்கை பாசம் என அனைத்தையும் கலந்து ஒரு முக்கோண கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். கும்பாரி என்றால் நண்பனை குறிக்கும் சொல்லாகும்.

ஸ்டோரி…

விஜய் விஷ்வா (அருண்) இவரின் நண்பன் நலீப் ஜியா – (ஜோசப்). சிறு வயது முதலே யாரும் இல்லாத இவர்கள் உற்ற நண்பர்களாக வளர்ந்து வருகின்றனர்.

நாயகன் விஜய் விஸ்வா ஒரு கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒருநாள் இவர் தெருவில் கேபிள் கனெக்சன் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக நாயகி மஹானா ஓடி வருகிறார்.

என்னைஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. என்னை காப்பாற்றுங்கள் என கதறி அழுகிறார். எவருமே உதவி செய்ய முன் வராத நிலையில் நாயகன் உதவி செய்கிறார். அந்த ரவுடிகளை அடித்து துவைத்து ஓட விடுகிறார் விஜய்.

நிறுத்துங்க… நிறுத்துங்க.. நாங்க youtube சேனலுக்காக பிராங்க் ஷோ செய்கிறோம் என நாயகி மகானா சொல்லவே கடுப்பான விஜய் அவரை அடித்து விடுகிறார்.

பிராங்க் ஷோ என்ற பெயரில் நீங்கள் செய்யும் இது போன்ற செயல்களால் தான் உதவி செய்யக்கூட யார் முன்வர மாட்டார்கள் என அட்வைஸ் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

இதனால் மஹானாவின் யூடியூப் சேனலுக்கும் பெயர் வரவே எனவே நாயகனை காதலிக்க தொடங்கினார் மகானா.

ஒரு கட்டத்தில் விஜய் விஸ்வாகவும் காதலிக்க தன் அண்ணன் ஜான் விஜய்யின் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்ய நினைக்கிறார் மகானா.

ஆனால் பதிவு திருமணம் செய்வதற்கு 21 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என சொல்கிறார் அதிகாரி. அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் காதலுடன் தலைமறைவாகி விடுகிறாள் மகானா.

இதனிடையில் விஜய் விஷ்வாவின் நண்பர் காணாமல் போகிறார்.. அவர் என்ன ஆனார்

அதன் பிறகு என்ன நடந்தது? காதலர்கள் கைகூடினார்கள்.? தங்கையை தேடி வந்த அண்ணன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்..

விஜய் விஷ்வா – அருண் (நாயகன்)

நலீப் ஜியா – ஜோசப் (நண்பன் )

மஹானா சஞ்சீவி – தர்ஷினி (நாயகி)

ஜான்விஜய் – துரை (நாயகி அண்ணன்)

மதுமிதா – ஆர்த்தி (நாயகி தோழி)

பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்திகுமாரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதல்.. நட்பு என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார் விஜய் விஷ்வா. மஹானா உடன் ரொமான்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை.

திறமையும் அழகும் கொண்ட நாயகியாக மஹானா.. அண்ணனிடம் இவர் பேசும் காட்சியில் மைண்ட் வாய்ஸ் ரசிக்க வைக்கிறது அது போல் காதலுக்காக ஏங்குவதும் கெஞ்சுவதும் என ரசிக்க வைக்கிறார்.

காமெடி கலந்த வில்லத்தனத்தை செய்து இருக்கிறார் ஜான் விஜய். இவருடன் உதவிக்கு வரும் அடியாட்கள் ஒருவர் தண்ணீர் போட்டு விட்டு செய்யும் ரகளை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

வில்லத்தனத்தில் மிரட்டிய ‘பருத்தி வீரன்’ சரவணன் இதில் கொஞ்சம் காமெடி செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கும் நிறைய வாய்ப்பு கொடுத்து இருந்தால் ரசிக்க வைத்திருப்பார்.

மஹானாவை காதலிக்கும் நண்பர்களில் ஒருவராக காதல் சுகுமார் நடித்திருக்கிறார்.
சீரியசான படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கிறார் நடிகர் சாம்ஸ்.. இவர் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.

நலீப் ஜியா.. காதலுக்கு உதவும் நண்பனாக நடித்திருக்கிறார். விரைவில் இவருக்கும் புதிய படத்தில் நாயகனாக வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜாங்கிரி மதுமிதா தோழியாக நடித்திருக்கிறார். இதில் காமெடி செய்திருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருப்பார்.

காமெடி என்ற பெயரில் அம்மன் வேடமிட்டு கொஞ்சம் சோதிக்கிறார் நடிகை மீனாள்.

டெக்னீசியன்ஸ்…

இயக்கம் – கெவின் ஜோசப்

ஒளிப்பதிவு – பிரசாத் ஆறுமுகம்

கன்னியாகுமரி காட்சிகள் கொள்ளை அழகு. அதுபோல பாடல் காட்சிகளில். அழகான லொகேஷனை தேர்ந்தெடுத்து படமாக்கி உள்ளனர்

எடிட்டிங் – T.S.ஜெய்

சண்டைப்பயிற்சி – மிராக்கிள் மைக்கேல்

இசை- ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி

பாடல் ஆசிரியர்கள் – வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி

நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே.. நாளை வரும் சோகம் கடந்திடுமே என்ற பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன..

பாடியவர்கள்
அந்தோணிதாசன், ஐஸ்வ சாய்சரண்.

மீனவர்கள் மொழியில் கன்னியாகுமரி பாஷையில் ஒரு அழகான குத்துப்பாட்டையும் போட்டு இருக்கிறார் இசையமைப்பாளர்.

இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

என்னதான் வாழ்க்கையில் காதல் கிடைத்தாலும் தனது நண்பனை கைவிடாத ஒரு நட்பையும் இயக்குனர் காட்சிப்படுத்திருப்பது நட்புக்கு பெருமை.

அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்னும் கூடுதல் உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்திருக்கலாம். பழைய பாடல்களை போட்டு கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறார். அதற்கு பதிலாக அண்ணன் தங்கைக்கு என ஒரு அழகான பாச பாடலை கொடுத்திருக்கலாம்.

ஓடிப்போன காதலர்கள் தேடிப் பிடிக்கும் அண்ணன்.. தொலைந்து போன நண்பன் என பரபரப்பாக இருக்க வேண்டிய கதையை விறுவிறுப்பு இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக இந்த கும்பாரி.. காதலில் சிக்கிய நண்பன்

கும்பாரி

Kumbari movie review and rating in tamil

ரூட் நம்பர் 17 விமர்சனம்.. காட்டையும் விடாத காட்டுமிராண்டிகள்!

ரூட் நம்பர் 17 விமர்சனம்.. காட்டையும் விடாத காட்டுமிராண்டிகள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’.

14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஓர் அடர்ந்த காட்டுக்குள் தங்கள் ஆதாயத்திற்காக ஒரு சாலை அமைக்க விரும்புகின்றனர் சில அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்… ஆனால் இதற்கு தடையாக இருக்கிறார் நேர்மையான அதிகாரி ஜித்தன் ரமேஷ். இது ஒரு ஃபிளாஷ்பேக் கதை..

ஸ்டோரி…

நாயகனும் நாயகியும் ஒரே ஒரு நாள் எந்த செல்போன் தொந்தரவும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை இன்பமாக கழிக்க விரும்புகின்றனர்.. அதன்படி செல்போனை வீட்டில் வைத்துவிட்டு ஒரு அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா செல்கின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரையும் ஜித்தன் ரமேஷ் கடத்தி சென்று விடுகிறார். பிரம்மாண்ட குகைக்குள் இவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்.

மினிஸ்டர் மகனை தேடி வரும் காவல் அதிகாரியையும் அந்தக் குகைக்குள் அடைத்து வைக்கிறார்.. இவர்களை அடைத்து வைப்பதன் நோக்கம் என்ன? ஜித்தன் ஃப்ளாஷ்பேக் & இந்த கதைக்கும் என்ன தொடர்பு?

இதனை கண்டுபிடிக்க மற்றொரு போலீஸ் அதிகாரி அருவி மதன் வருகிறார்.

அவர் வந்த பிறகுதான் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது.. அது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்…

நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க நாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார்.

ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ்.. இதுவரை ஏற்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவர் நாயகனா? வில்லனா? என்று குழப்பம் நீடிக்கும் வகையில் முயற்சி எடுத்து இருக்கிறார்.

நேர்மையான அதிகாரியாக தன்னுடைய பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கிறார். பின்னர் நீண்ட தலை முடி தாடி என பயங்கரமான தோற்றத்தில் வருகிறார்.. ஆனால் நமக்கு தான் பயம் வரவில்லை.

அருவி மதன் & ஹரிஷ் ப்ர்ராடி ஆகியோரின் பாத்திரங்கள் அருமை.

நாயகி அஞ்சுவை நிச்சயமாக பாராட்ட வேண்டும். படம் தொடங்கி சில நேரம் கலர்ஃபுல் காட்சிகளில் வந்தாலும் அதன் பின்னர் சேற்றில் விழுந்து ஒரே உடையில் படம் முழுவதும் நடித்திருக்கிறார் அதுவும் அந்த சேற்றுடன் அவர் எப்படி தான் அடித்தாரோ என்ன வியக்க வைக்கிறது.

இவர்களுடன் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் மற்றும் பலர் கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிரசாந்த் ஒளிப்பதிவு செய்ய மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இசையமைத்துள்ளார்.

பல விமர்சனங்களில் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி என சொல்லி இருப்போம்.. நிச்சயமாக இந்த படத்தின் ஒளிப்பதிவு அந்த வகையை சாரும்.. கூல்டிரிங்ஸ் தவறி கீழே விழுவது முதல் அடர்ந்த காட்டு ரோட்டுக்குள் டயர் நிற்பது வரை தன்னுடைய கேமரா கண்களில் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

அவுசப்பசன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை மிரட்டல்.. அது போல தாலாட்டு பாடல் தாலாட்டும் படியாக உள்ளது..

பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மலையாள இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க பேய் படம் என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி திடீரென திரில்லருக்கு மாறி தன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

தங்கள் சுயநலத்திற்காக தங்கள் சுயலாபத்திற்காக இந்த நாட்டின் வளத்தை சுருண்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் காட்டு வளத்தையும் விட்டு வைக்கவில்லை..

நாட்டு வளத்தை அழித்தால் மக்கள் போராடுவார்கள்.. ஆனால் காட்டை அழித்தால் மிருகங்கள் போராடப் போவதில்லை என நினைத்து விட்டார்களே என்னவோ.?! அதிலும் ஒரு ரூட்டை கண்டுபிடித்து அவர்கள் சுய லாபம் அடைவது தான் இந்த ரூட் நம்பர் 17 படத்தின் முக்கிய கரு..

இப்படம் 2023 டிசம்பர் 29ஆம் தேதி வெளியானது.

Route Number 17 movie review and rating in tamil

More Articles
Follows