தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர் ரவிக்குமார். பல ஆண்டுகளுக்கு முன்னரே டைம் டிராவல் கதையை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியமாக கொடுத்திருந்தவர் இவர்.
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரகுமான் உடன் கைகோர்த்து விருந்து படைத்திருக்கிறார்.. அயலான் விமர்சனத்தை பார்ப்போம்..
இதுவும் கிட்டத்தட்ட டைம் ட்ராவல் கதை என கூறலாம்.. காரணம் 2030ல் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை வித்தியாசமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஸ்டோரி…
மக்கள் தொகை அதிகமானதால் 2030ல் வாயு எனர்ஜி பூமிக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. வழக்கம் போல தேவைக்கு ஏற்ப வியாபாரம் & வியாபாரிகளும் அதிகரிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் பூமியில் மிக ஆழமான ஒரு இடத்தில் இருந்து அந்த எனர்ஜியை எடுக்க பல முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் பேசுகிறார் வில்லன் ஷரத் கேல்கர். இதற்காக அவர் ஒரு ஸ்பெஷல் கருவி வைத்திருப்பதாக சொல்கிறார்.
வில்லனின் திட்டத்தை தெரிந்து கொண்ட வேற்றுக்கிரக ஏலியன் ஒன்று எல்லா ஜீவராசிகளையும் காக்க களத்தில் குதிக்கிறது.. இதனால் ஏலியனுக்கும் வில்லன் ஆரியனுக்கும் (ஷரத் கேல்கர்) மோதல் முற்றுகிறது.
ஒரு கட்டத்தில் இயற்கை விரும்பியான சிவகார்த்திகேயனை ஏலியன் சந்திக்கிறது இருவரும் நட்பாகின்றனர். நாளடைவில் ஏலியனின் சக்தி எல்லாம் சிவகார்த்திகேயன் கைக்கு மாறுகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? வில்லன் திட்டத்தை முறியடித்தார் நாயகன்? சக்தி கிடைத்த பின் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? அதன் பின்னர் ஏலியன் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகளையும் கவரும் கலையைத் தெரிந்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கு ஏற்ப திரைக்கதையும் தேர்வு செய்கிறார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.
டான்ஸ், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பட்டையை கிளப்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தனது ஒன்லைனர் காமெடி மூலம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் யோகிபாபு. இவருடன் கருணாகரனும் கைகோர்த்து உள்ளது கூடுதல் பலமான கூட்டணி.
ஏலியனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் அசத்தல்.. அதிக உழைப்பை கொட்டி இருக்கிறார்..
நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங்.. கதைக்கு ஏற்ப மிக இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக ஷரத் கேல்கர். முதலீட்டாருடன் ஒப்பந்த பேசும் விஷயமாகட்டும் ஏலியனை எதிர்த்து நிற்கும் துணிச்சலாகட்டும் என அசத்தியிருக்கிறார் ஷரத்.
டெக்னீசியன்ஸ்..
பொதுவாகவே வேற்று கிரக கதை ஏலியன் கதை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப அழகாக திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
2020 மட்டுமல்ல 2030+ வரைக்கும் தன்னால் இசையமைக்க முடியும் என்பதை தன் இசையின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.
ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் குரல் கொடுத்து அந்த கேரக்டருக்கு மெருகேற்றி இருக்கிறார்.
என்னதான் ஆங்கில படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து நாம் அசந்து போனாலும் இந்த அயலானிலும் அதற்கு ஏற்ப பிரம்மாண்டத்தை கொடுத்து இருக்கிறது (தயாரிப்பு) கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
ஏலியனை குழந்தைகள் கொண்டாடும் வகையில் பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
சமீபகாலமாக 1980 – 90 போன்ற கதைகள் அமைந்து வரும் நிலையில் 2030 கதை களத்தை அமைத்து குடும்பத்துடன் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இந்த பூமியும் இந்த பிரபஞ்சமும் மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கும் அதுதான் உலகம்.
இந்த ஜீவராசிகளுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும் ஒன்றோடு ஒன்றாக சார்ந்தே வாழ்கின்றன.
இந்த ஜீவராசிகளை ஏலியன் காப்பாற்ற போராடுவது போல கதை அமைத்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கின்றனர் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன்.
Ayalaan movie review and rating in tamil