தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தினேஷ் குமரன் இயக்கத்தில், உருவாகி ஆஹா ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் ‘மால்’.
சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ படத்தில் சிலை கடத்தலை மையப்படுத்தி கதை இருக்கும். அதை கதை களத்துடன் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் ‘மால்’.
கதைக்களம்…
ஒரு சிலையை விற்றுத் தர வேண்டும் அதற்கு கமிஷன் தருகிறேன் என ஒரு ஏஜென்ட் வருகிறார். ரூ 100 கோடி மதிப்புள்ள சிலையை 30 கோடிக்கு அவர் விற்க நினைக்கும் போது அதில் உள்ள வியாபாரம் தந்திரம் வெளிப்படுகிறது.
அதன் பிறகு ராஜராஜ சோழர் சிலை கடத்தல் கும்பல் அறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.
ஒரு பக்கம் போலீஸ் கஜராஜ் சிலையை தன் வீட்டுக்குள் மறைத்து வைத்து கோடிக்கணக்கில் விற்க முயல்கிறார்.
இன்னொரு கதையில்.. தன் காதலியுடன் தவிக்கிறார் ரிப்போர்ட்டர் விஜே பப்பு. அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்து நடக்க கார் ஓட்டியவரை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருக்கின்றனர். ஆனால் அவனிடம் தான் சிலை இருப்பது என்பது இவர்களுக்கு தெரியாது.
அடுத்த கதையில் அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் இருவரும் ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்க செயின் திருட முயல்கின்றனர். அதுவும் போலீஸ் கஜராஜ் வீட்டில்..
இந்த நான்கு கதைகளையும் ஒரே இடத்தில் (மருத்துவமனையில்) சேர வைக்கிறார்.
அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
போலீஸ் கஜராஜ் நேர்மையான போலீசாக காண்பித்துக் கொண்டு வில்லத்தனம் காட்டி கதையின் நாயகன் ஆகியிருக்கிறார்
சாய் கார்த்திக்கின் மனைவியாக கெளரி நந்தா. இவரது கண்களும் ரசிக்க வைக்கிறது.
புதுமுக நடிகர் என்றாலும் சாய் கார்த்திக் நம்மை நடிப்பில் ஈர்க்கிறார்.
விஜே பப்பு மற்றும் ஜெ இருவரும் காதலர்கள். ஆனால் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை.
அஷ்ரப் & தினேஷ் குமரன் இருவரும் கொஞ்சம் கலகலப்பு கூட்டி இருக்கின்றனர். இதில் தினேஷ் படத்தின் டைரக்டர் என்பதால் ஓவர்டேக் செய்ய முயற்சித்துள்ளார்.
படத்தில் இரண்டே பெண்கள் தான் கௌரி நந்தா மற்றும் ஜே. ஆனால் ஜெ-க்கு பெரிதாக காதலும் இல்லை காட்சியும் இல்லை. கௌரி ஒரே காட்சியில் வந்தாலும் நம்மை சுண்டி இழுக்கிறார்.
டெக்னீசியன்கள்…
ஒளிப்பதிவு படத்தொகுப்பு என இரண்டையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் ஆர். சிவராஜ். 12 மணி நேரத்திற்குள் நடக்கும் இரவு கதை என்றாலும் அதற்கான கேமரா கோணங்களை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் சிவராஜ்.
ஒளிப்பதிவாளரே எடிட்டிங் செய்து இருக்கிறார் என்பது சிறப்பான செயல் என்றாலும் திருடர்கள் முகமூடி கூட அணியாமல் திருட செல்வார்களா? இதைக் கூடவா கவனிக்கவில்லை என்பது வருத்தம்.
பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. நிறைய இடங்களில் புதிய இசையமைப்பாளர் போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது. திரில்லர் படங்களுக்கு உரிய இசையை கொடுத்திருந்தால் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.
கடத்தல் கும்பலுக்குள் ஏற்படும் ஈகோவை வைத்துக் காட்சியை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குப் பிறகு வரும் காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை என்பதால் முதல் காட்சி வீணடிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல்… காதலர்கள் பிரிதல்.. நேர்மையான போலீஸ்.. போலியான (நேர்மையற்ற) போலீஸ்.. கடத்தல் கும்பலுக்குள் ஈகோ பிரச்சனை உள்ளிட்டவைகளை சரியான விதத்தில் கையாண்டு உள்ளார் இயக்குனர் தினேஷ் குமரன்.
ஒரே இரவுக்குள் நடக்கும் 4 கதைகள் இருந்தாலும் இழுத்து முடிச்சு போட்டு கிளைமாக்ஸில் சுபமாக முடித்துள்ளார் இயக்குநர். ஆங்காங்கே லாஜிக் குறைகள் இருந்தாலும் இளம் வயதில் திறமையான கலைஞர்களை நம்பி மால் படத்தை கொடுத்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.
ஆக மால்… சிலை கடத்தல் சிக்கல்
Maal movie review and rating in tamil