தி லெஜண்ட் விமர்சனம்.; சரவெடியில் சாரல் மழை

தி லெஜண்ட் விமர்சனம்.; சரவெடியில் சாரல் மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

விஞ்ஞானி சரவணன்.. சர்க்கரை
நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறார். அதனை நம் நாட்டுக்காக நாட்டுமையாக்க போராடுகிறார்.

அதற்கு எதிராக மெடிக்கல் மாஃபியா-களுடன் போராடுகிறார். இதுதான் படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி சரவணன் (அருள் சரவணன்) மக்களுக்கு சேவை செய்ய தன் சொந்த ஊருக்கு வருகிறார்.

தன் பால்ய நண்பனை சர்க்கரை நோய்க்கு பரிகொடுத்து விட்டதால் அந்த நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்க இறங்குகிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சரவெடி சரவணன் என்ற தீம் மியூசிக் உடன் தான் அறிமுகமாகிறார் சரவணன். அதன் பிறகு ப்ளாஷ்பேக் காட்சிகள்.

சரவணன் தான் படத்தின் எல்லாம். ஆனால் டயலாக்கில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. விவேக் & யோகிபாபு உடன் காமெடி… காதலியுடன் ரொமான்ஸ்… வில்லனுடன் ஃபைட் என களம் உள்ளது. ஆனால் சரவணன் தான் அப்படியே நிற்கிறார்.

நாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி நடித்துள்ளனர். இருவரும் நடிப்பிலும் அழகிலும் கவர்ச்சியிலும் சிறப்பு.

காமெடியனாக விவேக் நடித்துள்ளார். அவர் டப்பிங் பேசுவதற்குள் இறந்துவிட்டதால் அவருக்கு மட்டும் லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. காமெடி ஓகே.

ஆனால் டைட்டில் கார்டில் விவேக்கு அஞ்சல் கூட செலுத்தவில்லை.

யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார், லதா, லிவிங்ஸ்டன், சுமன், தீபா, திவ்ய தர்ஷினி, முனிஷ்காந்த் , மன்சூர் அலிகான் என சரவணா ஸ்டோர் விளம்பரம் போல் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

50 வருட தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். சரவணன் ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் போல் பிரம்மாண்டமாக ஒவ்வொரு காட்சியும் உள்ளது. பாடலும் சரி.. காதலும் சரி… சென்டிமெண்டும் சரி… ஆக்சனும் சரி… எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சம்.

இந்த படத்தை ஹாரீஸ் ஜெயராஜின் கம்பேக் எனலாம்.. கொஞ்சி.. கொஞ்சி.. . ‘வாடிவாசல்’ ‘மஸலோ மசலு’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கூடவே தாளம் போட வைக்கிறது.

சண்டைக் காட்சிகளின் பின்னணி இசையும் மிரட்டல். சில இடங்களில் ஓவர் டோஸ்.

நிறைய பாடல்கள்.. சண்டை என மாறி மாறி வந்தாலும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான்.. ஆரம்பம் முதல் க்ளைமாக்‌ஸ் வரை கலர்ஃபுல்.. ஆக இருக்கு.

ரூபன் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்த்தாலும் 2ம் பாதி நீளத்தை குறைத்திருக்கலாம்.

இயக்கம்…

நாம் டிவி-யில் தினமும் பார்க்கும் (800க்கும் மேற்பட்ட) விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி ஆகிய இருவரும் இந்த படத்தை இயக்கியுள்ளனர். (அஜித் – விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர்கள் இவர்களே.)

திடீரென டெல்லி… திடீரென பூஞ்சோலை.. திடீரென பாரீஃன் என காட்சிகள் கோர்வையில்லாமல் நகர்கிறது.

சூர்ய வம்சம் பட வாத்து சீன்… விவேக்கின் பழைய கேரள காமெடி… எம்ஜிஆரின் சாட்டையடி பைஃட் சீன்… பெரிய ஹீரோக்களின் பன்ச் வசனங்கள் என பலமுறை பார்த்த காட்சிகளே வருவது போரடிக்கிறது.

படம் ஆரம்பித்த உடன்.. ‘அவன் சாதாரண ஆள் இல்ல’ என்ற பில்டப் வசனங்கள் முடியல..

தன் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் உள்ள 500 – 1000 டிரெஸ்களை தனக்கு மட்டுமே பயன்படுத்தி இருப்பார் போல.. ப்ரேமுக்கு ஒரு காஸ்டியூம் மாற்றிவிட்டார் சரவணன்.

கோடிக்கணக்கில் செலவு செய்து முழுக்க முழுக்க ஹீரோயிசத்தை சொன்னவர்கள் படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனத்தை செலுத்தி இருந்தால் நிஜமாகவே ‘தி லெஜண்ட்’ லெஜண்டாக இருந்திருப்பார்.

ஆக… தி லெஜண்ட்… சரவெடியில் சாரல் மழை

The legend movie review and rating in Tamil

ஜோதி விமர்சனம் 4.25/5.; தாய்(வலி)மை

ஜோதி விமர்சனம் 4.25/5.; தாய்(வலி)மை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, கிரீஷா க்ரூப் மற்றும் ராஜா சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோதி.
SPR ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா சேதுபதி இப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் விமர்சனம் இதோ….
ஒன்லைன்…
நம் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.  இதில் பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணிகளின் வயிற்றை கிழித்தும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அது பற்றிய கதைக்களம் தான் இந்த ஜோதி.
நாயகன் வெற்றி. இவர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர். இவரின் மனைவி க்ருஷா கிரூப். வெற்றி பணி புரியும் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிகிறார் குமரவேல்.
வெற்றியின் எதிர் வீட்டில் வசிக்கும்  தம்பதியர் ராட்சச பட வில்லன் சரவணன். இவர் ஒரு டாக்டர். தனியாக ஒரு  மருத்துவமனையும் நடத்தி வருகிறார் அவரது மனைவி ஷீலா.
வெற்றி – கிரிஷாவுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் எதிர் வீட்டில் கர்ப்பிணியாக இருக்கும் ஷீலா மீது மிகுந்த அன்பு காட்டுகின்றனர்.
தன் மனைவியின் பிரசவத்திற்கு இன்னும் நான்கு நாட்களே மட்டும் இருக்கும் நிலையில் திடீரென ஒரு அறுவை சிகிச்சைக்காக வெளியூர் செல்கிறார் சரவணன்.
அந்தக் கட்டத்தில் கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவின் வயிறை கிழித்து ஒரு மர்ம நபர் குழந்தையை திருடி / கடத்தி செல்கிறார்.
வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய சம்பவம் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது. இதனையடுத்து வெற்றி & குமரவேல் விசாரணைக்காக களத்தில் இறங்குகின்றனர்.
அவர்களின் புலனாய்வு பார்வை பல்வேறு கோணங்களில் திரும்புகிறது. ஒரு கட்டத்தில் தன் மனைவி மீது கூட சந்தேகப்படுகிறார் வெற்றி.
அந்த குழந்தையை திருடியவர் யார்.? வயிறை கிழித்து திருட காரணம் என்ன? என்ற பல்வேறு விடைகளுக்கு பதில் அளிக்கிறது படத்தின் கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்..
எட்டு தோட்டாக்கள் ஜிவி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தான் இந்த படத்தின் நாயகன். அவர் கதைகளை தேர்வு செய்யும் பணியை கண்டிப்பாக பாராட்டலாம். ஆனால் முகபாவனைகளில்  முதிர்ச்சி தேவை. ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே  உணர்த்துகிறது. கதையின் களம் அப்படி இருந்தாலும் எப்போதும் இறுகிய முகத்துடன் காணப்படுவதால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.
கதையின் நாயகியாக ஜோதி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ஷீலா. மண்டேலா & திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் இந்த ஷீலா.  இந்த படத்திலும் பாராட்டும் படியான நடிப்பை கொடுத்துள்ளார். கிளைமாக்ஸ்-இல் இவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.
இவரின் தந்தையாக மைம் கோபி நடித்துள்ளார். ஒரு தந்தை எப்படியெல்லாம் மகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கிறார்.
கான்ஸ்டபிளாக வரும் குமரவேல்  கனகச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து வெற்றி மனைவியாக வரும் க்ருஷாவும்  குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.
இவர்களுடன் ஷீலாவின் தங்கையாக வருபவரும்…  இரண்டு பெண் டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பில் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர்.
முக்கியமாக ரங்கா என்ற பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி படத்தின் நாயகனாகவே உயர்ந்திருக்கிறார். அவரின் கேரக்டர் அசத்தல். செம ட்விஸ்ட்.
சண்டைக் காட்சியில் அசத்திய ஹரீஷ், அவரின் தம்பி உள்ளிட்ட அனைவரும் சின்ன சின்ன கேரக்டர்களில் வந்தாலும் இவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர்.
டெக்னீஷியன்கள்..
படத்தில் ஒரே ஒரு ஃபைட் தான் ஆனால் அதையும் ரசிக்கும்படி எதார்த்தமாக படம் பிடித்துள்ளனர். அது போல பாடல் காட்சிகளும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியாக அமைந்துள்ளன.
ஜோதி படத்தை கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கி உள்ளனர். அங்குள்ள வள்ளி விலாஸ் மற்றும் காமினி மருத்துவமனைகளையும் படத்தின் கதைக்களத்திற்காக பயன்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.
இடைவேளை வரை குழந்தையை கடத்தியவர் யார் யார்? என்ற கேள்விகள் ரசிகர் மனதில் நிச்சயமாக ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் கிருஷ்ண பரமாத்மா.
ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம். சேஷையாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – சுவி குமார், சண்டை பயிற்சி இயக்கம் – ஆர்.சக்தி சரவணன்..
சதுரங்க வேட்டை முதல் விரைவில் வெளியாக உள்ள டைரி ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ள ராஜா சேதுபதி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்.. வெறுமனே மசாலா படங்களை கொடுக்காமல் ஒரு தரமான அதே சமயம் விழிப்புணர்வு படமாக தயாரித்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.
குழந்தை கடத்தலில் ஈடுபடும் திருடர்கள் ஆயாக்கள் வார்டுபாய்கள் முதல் டாக்டர்கள் வரை என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே..
குழந்தை கடத்தலில் துணையாக செயல்படும் மருத்துவமனைகள் தமிழகத்தில் கூட சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானாவிலும் மூன்று மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ‘வெற்றி’க்கு உதாரணமான உண்மைச் சம்பவம்.
குழந்தை கடத்தலுக்கு பின் நடக்கும் வியாபாரமும் இதில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.. ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளை கடத்துபவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்
ஆக ஜோதி… தாய்(வலி)மை
jothi movie review and rating in tamil
மகாவீர்யர் விமர்சனம் 1.5/5; மலையாள மக்கு.. நீதி செத்துடுச்சு!

மகாவீர்யர் விமர்சனம் 1.5/5; மலையாள மக்கு.. நீதி செத்துடுச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அரசர் காலத்தில் நடந்த ஒரு பிரச்சனையும் நவீன காலத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையும் இரண்டையும் கலந்து நவீன காலத்து கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.. அது என்ன என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

கேரளாவில் ஒரு பகுதியில் உள்ள கோயில் அருகே அமர்ந்து தியானம் செய்கிறார் சாமியார் நிவின் பாலி.

அதிகாலை நேரத்தில் அந்தக் கோயிலில் உள்ள அனுமார் சிலை காணவில்லை என கோயில் அர்ச்சகர் புகார் கொடுக்கிறார்.

இந்த ஊருக்கு புதிதாக வந்த நிவின் பாலி மீது ஊர் மக்கள் சந்தேகப்பட இந்த பிரச்சனை கோர்ட்டுக்கு செல்கிறது.

கோர்ட் நிவின்பாலியை விசாரிக்கிறது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு அரசரின் வழக்கும் அதே கோர்ட்டிற்கு விசாரணைக்கு வருகிறது.

எனவே நிவின்பாலி வழக்கை நிறுத்தி வைத்து விட்டு அரசருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் நீதிபதி.

அதில் அரசருக்கு உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மந்திரி வேண்டுகோள் விடுகிறார். அரசர் & நீதிபதியால் தீர்க்க முடியாத பிரச்சினையை இறுதியாக நிவின்பாலி தீர்த்து வைக்கிறார்.

அது என்ன என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ரொமான்டிக் ஹீரோ ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற நிவின் பாலி இந்த படத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கி வழுக்கி விழுந்து விட்டார் என்றே சொல்லலாம்.

நடிகர் லால் ராஜாவாக மிரட்டல். அவரது மந்திரியாக நடிகர் ஆசிப் அலி பக்குவமான நடிப்பு. கதாநாயகி ஷான்வி ஸ்ரீவாத்சவ்.

டெக்னீசியன்கள்...

கேமராமேன் சந்துரு செல்வராஜ்..

ஆக்சன் ஹீரோ பைஜு என இரண்டு ஹிட் படங்களை நிவின்பாலியை வைத்து இயக்கியவர் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.

படத்தின் ஒளிப்பதிவு நிச்சயமாக நம்மை கவரும்.. கேரளாவின் அழகை நம் கண் முன் காட்டுகிறது. பின்னணி இசை படத்திற்கு போதுமான அளவில் உள்ளது.

ஆனால் படத்தின் கதை ஓட்டம் தான் என்னவென்று சொல்வதே தெரியவில்லை.

ஒரு சாமானியனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் நாடுவது காவல்துறையை தான்..

ஒருவேளை காவல் துறையில் நீதி கிடைக்கவில்லை என்றால் சிபாரிசு செய்ய அரசியல்வாதிகளை நாடுவர். ஒருவேளை அப்படியும் நீதி கிடைக்கவில்லை என்றால் அவர் இறுதியாக நாடும் இடம் நீதிமன்றம்.

ஆனால் நீதி வேண்டிய ஒரு பெண்.. நீதிமன்றத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்துவது எந்த விதத்தில் சரி.?

ஒரு பெண்ணை அழ வைக்க வேண்டும் அவள் கண்ணீர் சிந்த வேண்டும் என்பதற்காகவே முதலில் அவளை கிள்ளுவது.. பின்பு அவளை துன்புறுத்துவது.. ஆடைகளை களைந்து விடுவது.. நிர்வாணமாக்குவது என்று மக்கள் முன்னிலையில் நீதிபதியே நீதிமன்றத்தில் செய்ய சொல்கிறார்.

ஒருவேளை அவள் கண்ணீர் சிந்தினால் அந்தக் கண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரசர் அருந்தினால் அவரது விக்கல் நின்று விடுமாம்.. அதற்காக தான் இந்த துன்புறுத்தல் என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்..

அதன் பிறகு இறுதியாக நிவின்பாலி செய்யும் செயலால் (தோகை இறகால் வருடுவது) அவள் கண்ணீர் சிந்துகிறாள்..

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நாம் நீதிமன்றத் தீர்ப்பு அவலங்களை கண்டு வருகிறோம்.. அதாவது மத்தியில் ஆளும் கட்சிக்கோ அல்லது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது நீதிமன்றம்.

இது போன்ற சூழலில்… ஒரு அரசுக்கு ஒரு அரசருக்கு ஆதரவாக நீதிபதியே அதுவும் நீதிமன்றத்தில் செயல்படுவது பெரும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

அதுவும் நீதிமன்றத்திற்கு வரும் அரசர் குற்றவாளி கூண்டில் நிற்காமல் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு நீதி கேட்பது என்ன நியாயம்.?

இப்படி ஒரு சினிமா.. அதுவும் மலையாள பட உலகில் வந்திருப்பது வேதனைக்குரிய செயலாகும்.. இதில் நிவின் பாலி நடித்திருப்பது எந்த விதத்தில் என்பதே புரியவில்லை.

ஆக..மஹாவீர்யர்.. மலையாளத்தில் ஒரு மக்கு… நீதி செத்துடுச்சி நாட்டாமை..

Mahaveeryar movie review and rating in tamil

நதி விமர்சனம்.; ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

நதி விமர்சனம்.; ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இரு வேறு சாதி பிரிவைச் சேர்ந்த பையனும் பொண்ணும் காதலிக்கிறார்கள். இதனால் இரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளே படத்தின் கதை. ஆனால் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.

கதைக்களம்…

மதுரை கதைக்களமாக இருப்பதால் மதுரையின் நாயகன் சசிகுமார் கொடுக்கும் வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸ் ஏழை மாணவன். ஒரு கல்லூரியில் படிக்கிறார். இவரின் தந்தை ஆட்டோ டிரைவர் முனீஸ் காந்த்.

அதே கல்லூரியில் படிக்கும் வசதியான பெண் ஆனந்தி. இவரின் அப்பா வெங்கடேஷ். பெரியப்பா வேலராமமூர்த்தி. இவர்கள் ஜாதி கட்சியை சேர்ந்த பிரபலங்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர ஒரு கட்டத்தில் சாதியால் பிரச்சனை உருவாகிறது.

அதன் பிறகு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? காதல் வென்றதா? சாதி வென்றதா? கௌரவம் வென்றதா? என்பதே படத்தில் கதை.

கேரக்டர்கள்…

சாந்தமான முகத்துடன் சாம் ஜோன்ஸ். அதுதான் இவருக்கு பலமும் பலவீனமும்.. இவருக்கு ரொமான்ஸ் பெரிதாக வரவில்லை. அதே சமயம் கோபமும் பெரிதாக வரவில்லை.. வில்லனை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் மெச்சூரிட்டியே இல்லை.

ஆனந்தி ஒரு திறமையான அழகான நடிகை. சின்ன சின்ன முக பாவனைகளால் கவருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஆனந்தி எடுக்கும் முடிவு சாதியை எதிர்க்கும் கட்சிகளுக்கும் குடும்பத்திற்கும் மரண அடி.

அவனை வெட்டுடா.. அதாண்டா கௌரவம்.. என்ற அதே பழைய வசனங்களோடு வேலராமமூர்த்தி வெங்கடேஷ் நடித்துள்ளனர். வேலராம மூர்த்தியின் ஆக்டிங் பல காட்சிகள் ஓவராக உள்ளது.

ரஜினி பக்தராக, ஆட்டோ ஓட்டுநராக முனீஸ்காந்த். நதி படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார்.

ஆனந்தியின் மாமாவாக கரு பழனியப்பன். தன் வழக்கமான நக்கல் நையாண்டியுடன் சிறிது வில்லத்தனம் செய்திருக்கிறார். ஆனால் இவர் தலையில் விக் இவருக்கு சரியாக செட் ஆகவில்லை. இவரின் அல்லக்கையாக கோடங்கி வடிவேலு நடித்துள்ளார்.

டெக்னீசியன்கள்…

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ஓகே தான். பெரிதாக கவரவில்லை பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். ஒளிப்பதிவில் தன்னுடைய அனுபவத்தை கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார் எம்எஸ் பிரபு.

தயாரிப்பு : மாஸ் சினிமாஸ்
இயக்கம் – தாமரை செல்வன்.

படத்தில் இரண்டு மணி நேரம் வரை வழக்கமான காதல் காட்சிகளையும்.. வழக்கமான ஜாதி காட்சிகளையும்.. வழக்கமான கல்லூரி காட்சிகளையும்.. மாணவர்கள் மோதலையும் காட்டியே போர் அடிக்க வைத்து விட்டார் தாமரைச்செல்வன். இதுவே ஓடுது… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக உள்ளது. ஒருவேளை கிளைமாக்ஸ் காட்சியை முதலில் சொல்லித்தான் நடிகை ஆனந்தி இந்த படத்திற்காக ஒப்பந்த செய்திருப்பார் என்னவோ.?

ஆக.. இந்த ‘நதி’… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?

NADHI movie review and rating in Tamil

மஹா விமர்சனம்.; சிம்பு – ஹன்சிகா கெமிஸ்ட்ரியா.?

மஹா விமர்சனம்.; சிம்பு – ஹன்சிகா கெமிஸ்ட்ரியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான படம் ‘மஹா’.

ஹன்சிகாவின் 50 வது படமான மஹாவை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் யு.ஆர்.ஜமீல்.

கதைக்களம்…

ஹன்சிகா.. கிறிஸ்தவர். சிம்பு – இஸ்லாமியர்.

விமான பணிப்பெண்ணாக வரும் ஹன்சிகா மோத்வானி பைலட் சிம்புவை காதலிக்கிறார்.

இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை மானஸ்வி.

ஒரு கட்டத்தில் மானஸ்வி ஒரு சைக்கோ நபரால் கடத்தப்படுகிறார். ரூ. 25 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டுகிறார். இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்கிறார்.

எனவே போலீஸ் ஆபிசர் ஸ்ரீகாந்திடம் புகார் அளிக்கிறார் ஹன்சிகா. ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் ஹன்சிகாவே ஒரு திட்டம் போடுகிறார். அது என்ன? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மகா படத்தில் சிம்பு வரும் காட்சி குறைவாகவே உள்ளது. ஒரு பாட்டு ஒரு பைட் என அசத்தல்.. மேலும் தன் ஒரிஜினல் லவ் ஸ்டோரியை சேர்த்து பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறார்.

மாறுப்பட்ட நடிப்பில் ஹன்சிகா. வெறுமனே டூயட் மட்டும் பாடாமல் தன் குழந்தைக்காகவும் அடுத்தவர் குழந்தைக்காகவும் ஹன்சிகா எடுக்கும் ரிஸ்க் காட்சிகள் செம.

ஸ்ரீகாந்துக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் ஸ்மார்ட் + ஷார்ப்.

தம்பி ராமையா கருணாகரன் மானஷ்வி ஆகியோரின் கேரக்டர்கள் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு ஓகே… ஜிப்ரான் இசை பெரிதாக கை கொடுக்கவில்லை. பாடல்கள் சுமார்.

யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். மாஸ் ஹீரோ சிம்பு இருந்தபோதும் ஹீரோயின் கேரக்டரை வலுவாக்கி உள்ளார். கதையில் கவனம் செலுத்தியவர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

விறுவிறுப்பாக அமைக்க வேண்டிய திரைக்கதையை விவேகம் இல்லாமல் செய்துவிட்டார்.

தேஜாவு விமர்சனம்.; எழுத்தாளரும் என்கவுண்டரும்

தேஜாவு விமர்சனம்.; எழுத்தாளரும் என்கவுண்டரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன்புதான் அருள்நிதி நடிப்பில் டி ப்ளாக் என்ற படம் வெளியானது. தற்போது தேஜாவு என்ற அடுத்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

நாளை ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தேஜாவு’ படத்தை பத்திரிகையாளர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் அருள்நிதி, மதுபாலா, காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

படத்தில் டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார்.

ஸ்மிருதி காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கும் போது பூஜா என்ற தன் பெயருடன் நாவல் கதாசிரியர் சுப்ரமணியன் சாய்நகர் என்ற பெயரை கூறுகிறார்.

அதன் பிறகு ஸ்மிருதிக்கு என்ன நடந்தது? என்பது போலீசுக்கு தெரியவில்லை.

அவருடைய மொபைல் ஃபோனையும் அவர்களால் ட்ரேஸ் செய்ய முடியவில்லை.

இதனிடையில் இந்த நாவல் கதாசிரியர் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த கதையில் பூஜா என்பவர் கடத்தப்படுகிறார்.

அவர் எந்த வண்டியில் கடத்தப்பட்டார் அவரை மீட்க ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார். அதன் பிறகு என்ன என்ன நடக்கிறது என்பதை நடப்பதற்கு முன்பே தெளிவாக தன் கதையில் எழுதுகிறார்.

இவரது கதைக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒத்துப் போவதால் போலீஸ் இவரை கண்காணிக்கிறது. ஆனாலும் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெண்ணை மீட்பதற்காக சிறப்பு அதிகாரியாக நாயகன் அருள்நிதி வரவழைக்கப்படுகிறார்.

இவரது விசாரணையில்… எழுத்தாளருக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உணர்கிறார்.

இந்தக்கதைக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு.? பூஜாவை கடத்த என்ன காரணம்? கடத்தல் சம்பவத்திற்கு பின்னடி என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ் ஆபீஸராக அருள்நிதி ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் இரண்டு நாட்கள் விசாரணையிலும் ஒரே மாதிரியான உடையில் வருகிறார். ஆனால் மகளை தொலைத்த மதுபாலாவோ பல ஆடைகளை மாற்றி விடுகிறார். இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

அழகான திறமையான நடிகை ஸ்ருதி வெங்கட் . அவர் ஒரு துணை நடிகை போல ஓரிரு காட்சிகளில் வருகிறார். இரண்டு மூன்று டயலாக் மட்டுமே பேசுகிறார். இயக்குனருக்கு ஸ்மிருத்தி மீது என்ன கோபம்?

காளி வெங்கட்டின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கார்கி படத்தில் வக்கீலாக நடித்தவர் இந்த படத்தில் போலீஸ் ஆகவும் சில நகைச்சுவைகளை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறார்.

எழுத்தாளராக வருகிறார் அச்யுத் குமார். கொடுத்த குடிகார கேரக்டரில் கச்சிதம். ஆனால் இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள எம் எஸ் பாஸ்கர் வாய்ஸ் இவருக்கு ஒட்டவில்லை. வேறு ஒரு ஆர்டிஸ்ட் பயன்படுத்தி இருக்கலாம்

டெக்னீஷியன்கள்

படத்திற்கு இருபெரும் தூண்களாக இசையமைப்பாளர் ஜிப்ரானும், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும் பணியாற்றி உள்ளனர். படத்தை முழுவதுமாகவும் ரசிக்க வைக்க இவர்களின் பங்கு முக்கியமானது.

முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அரவிந்த் படத்தை இயக்கியுள்ளார். இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. விறுவிறுப்பாக கதை களத்தை அமைத்து அடுத்தது என்ன அடுத்தது என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு பார்க்க வைத்து விட்டார்.

ஆனால் கிளைமாக்ஸ் இல் நிறைய ட்விஸ்ட்களை கொடுத்து நிறைய லாஜிக் மீறல்கள் படத்தில் உள்ளன. அதை சொன்னால் படத்தின் கதை புரிந்து விடும் என்பதால் நாம் சொல்லவில்லை.

ஒரு குற்றவாளிக்கு அவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் காவல்துறை காவல்துறையில் இருக்கும் ஒருவரின் விவரங்களை அறிய நினைக்க மாட்டார்களா.?

ஆக.. இந்த தேஜாவு.. தேர்ச்சி..

Dejavu movie review and rating.

More Articles
Follows