தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
சினிமாவில் உப்புமா கம்பெனி என்பதை கேள்விப்பட்டிருப்போம்.. இதில் உப்புமா இயக்குநரை நம்பி ஏமாந்து போன தயாரிப்பாளரின் பாவப்பட்ட நிலைதான் திரையின் மறுபக்கம்.
ரஜினிகாந்தை பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என சென்னை வரும் தயாரிப்பாளரை.. நீங்கள் ஒரு படத்தை தயாரித்தால் அதை நான் இயக்குகிறேன்.
அந்தப் படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் அருகே உங்களை உட்கார வைக்கிறேன் என்கிறார் இயக்குனர். அதை நம்பி படமும் எடுக்கிறார் இந்த விவசாய தயாரிப்பாளர்.
ஆனால் படம் முடிந்து வியாபாரம் செய்ய முடியாமல் கடன் மேல் கடன் வாங்கி வீட்டை விட்டு நிலத்தை விற்று மனைவியின் தாலியை விற்று தற்கொலை செய்து கொள்ளும் ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் கதை இது.
திரைக்கும் முன்னால் உருவான படத்தை நாம் பார்த்து இருக்கிறோம்.. திரைக்குப் பின்னால் நடப்பவற்றை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இப்பட இயக்குநர்.
கேரக்டர்கள்…
சத்யமூர்த்தியாக நடித்தவர் தயாரிப்பாளரின் இன்னல்களை கண்முன்னே கண்ணீரோடு நிறுத்தியிருக்கிறார். பரிதாப கேரக்டரில் முகமது கெளஷ்.
இயக்குனர் போர்வையில் சுற்றித் திரியும் செந்தில்.. இவருக்கு காமெடி கை வந்த கலை. அலட்டலின்றி நடித்திருக்கிறார் நடராஜன் மணிகண்டன். ஆங்காங்கே காமெடி சாரல்களை தெறிக்கவிட்டுள்ளார்.
ஆனாலும் வாய்ப்பு தேடி தவறான வழியில் செல்லவிருந்த ஒரு பெண்ணை நேர்வழிப்படுத்தும் காட்சி ரசிக்க வைக்கிறது.
இளமை துள்ளும் நாயகி ஹேமா ஜெனிலியா.. கொஞ்சம் ரசிக்க வைத்து சூடேற்றுகிறார்.
கந்துவட்டி பைனான்சியராக அன்பரசன். அதேசமயம் இவரது பெயர் நிஜ சினிமா பைனான்சியரை நினைவுபடுத்துகிறது.. அதற்காக தான் அப்படி ஒரு பெயரை வைத்தாரோ என்னவோ..??
இயக்குநர் நிதின் சாம்சன் படத்துக்குள் உருவாகும் படத்திலும் நாயகன்.
வாழ்க்கையில் 64 கலைகள் இருக்கலாம். சினிமாவில் உள்ள 44 கிராப்டுகளை ஒரே ஆளாக நின்று செய்து காட்டி இந்த படத்தை கொடுத்துள்ளார் நிதின் சாம்சன்.
படம் முடிந்து எண்டு கார்டு போடும்போது லைட் மேன் சப்ளையர் டிரைவர் டீபாய் லைட் மேன் என அனைத்திலும் இவரது பெயரே ஓடிக்கொண்டே இருக்கிறது.
டெக்னீசியன்கள்…
அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசையில் ‘ஏமாந்து போடா முட்டாளே’… ‘ஒருமுறை பார்த்தால் உயிர் போகும்’,… ‘ஆசையிலும் பேராசை’ ஆகிய பாடல்கள் உள்ளன இதில் முட்டாளே பாடல் நிச்சயம் ஒரு விழிப்புணர்வு பாடலாக அமைந்துள்ளது
ஒரு சினிமா உருவான பிறகு அதனை விற்க வியாபாரம் செய்ய ஒரு தயாரிப்பாளர் படும் வேதனைகளை இன்ச் பை இன்ச் ஆக காட்டி இருக்கிறார் இயக்குநர்.
அதே சமயம் படம் எடுக்கும் போது என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதையே சில காட்சிகளாக வைத்திருக்கலாம்.. முக்கியமாக ஒரு படப்பிடிப்பு நடைபெறும் போது அந்தப் பகுதியில் சூட்டிங் வைக்க காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருந்தாலும் ரவுண்ட்ஸ் வரும் போலீஸ் மாமூல் கேட்கும் காட்சிகளையும் வைத்திருக்கலாம்… அப்பொழுதுதான் ஒரு படம் எடுப்பது எத்தனை வலி மிகுந்தது என்பது மக்களுக்கும் தெரிய வந்திருக்கும்.
ஒரு படம் தயாரிக்க வருபவர்கள் இந்த படத்தை பார்த்து திரையின் மறுபக்கத்தை தெரிந்து கொண்டு படம் எடுக்கலாம். அத்தனை நுட்பமான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.
முக்கியமாக திருமணம் செய்து கொள்ளாத இயக்குனர் வெற்றியை கொடுத்தால் மட்டுமே அவருக்கு பெண் கிடைக்கும் என்பதையும் காட்டியிருக்கிறார்.
அதே சமயம் சினிமாவில் ஹீரோயினாக வளர வேண்டும் என ஆசைப்படும் நாயகிக்கு அவரது வீட்டிலும் மாப்பிள்ளை தேடும் படலம் என குடும்ப சூழ்நிலையும் ஒரு போன் காட்சியில் காட்டி இருக்கிறார்.
இவை எல்லாம் மீறி படுக்கையை பகிர நினைக்கும் நாயகிகள் என்பதை காட்டி அதனை மீறி விருதை வெல்லும் காட்சியை வைத்திருப்பது சிறப்பு.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க.. சென்சாரில் யூ சர்டிபிகேட் கிடைக்க பணம்… படத்தை வெளிநாட்டில் விற்க பணம்.. படத்தை விற்று தருகிறேன் என போலி ஆட்களை வைத்து போடும் நாடகம்.. என புரோக்கர்களின் அட்டூழியத்தையும் அக்குவேறாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
இத்துடன் ஆங்கில படக் கதைகளை சுட்டு படம் எடுப்பதும்.. இயக்குனர் சங்கத்தில் கதாசிரியர்களின் பிரச்சனை.. என அனைத்தையும் காட்சிகளாக கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
Thiraiyin Marupakkam movie review and rating in tamil