ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதை என்ன?.

மாமா சரவணன்… மாப்பிள்ளை விதார்த்.. வெட்டித்தனமான வாழ்க்கை வாழ்கிறார் சரவணன். இவரது சகோதரி மகன் விதார்த்.

ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்ட டாய்லெட் கட்டிக் கொள்ள அரசு மானியம் கிடைக்கிறது. இதனால் வீட்டின் பின்புறம் குழி தோண்ட அங்கே ஒரு புதையல் கிடைக்கிறது. குழி தோண்ட வருபவர் ஜார்ஜ் மரியான்.

அப்போது சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் அதை மறைக்க பல திட்டங்கள் போடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இது பலருக்கும் தெரிய வரவே அனைவரும் பங்கு கேட்கின்றனர்.

அதை அனுபவிக்க முடிந்ததா…? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர் கதைக்குத் தேவையான நடிப்பை சரவணனும் விதார்தம் பங்கு போட்டு செய்திருக்கின்றனர்.

ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சி ஸ்கோர் செய்து இருக்கின்றனர் ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி. இரட்டை நாயகர்களாக இவர்கள் இருவரும் ஜொலிக்கின்றனர். காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம் இல்லை.

நாயகனை பார்த்ததும் காதலிக்கும் நாயகியாக அருந்ததி நாயர். இவரின் கண்கள் இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

நார்த் இந்தியா பிச்சைக்காரன் கேரக்டர் படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆனால் கதை ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்பதை உண்மை.

டெக்னிசியன்ஸ்..

அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார்.

பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாக உள்ளது.

ஜனங்கள் ரசிக்க ஜன ரஞ்சகமான படத்தை கொடுக்க வேண்டும் என படக் குழுவினர் முடிவு செய்து அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் லாஜிக் மறந்து காமெடியை ரசிக்கலாம்.

ஆயிரம் பொற்காசுகள்.. பொன் நகைச்சுவை

aayiram porkasugal movie review and rating in tamil

அகோரி விமர்சனம்..; பேய் அலற அலறவிட்டதா.?

அகோரி விமர்சனம்..; பேய் அலற அலறவிட்டதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

வித்தியாசமான கதையை படம் பார்க்க வேண்டும் என ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் அதை படமாக்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதி வைத்த கதை ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சித்து அவரது நண்பர்களுடன் அந்த வீட்டிற்கு செல்கிறார். அப்போது அந்த புத்தகம் அவருக்கு கிடைக்கிறது. அந்த புத்தகத்தில் எழுதிய படி ஒவ்வொன்றாக நடக்கிறது.

ஒரு கட்டத்தில் நாயகன் மற்றும் நாயகியை கொலை செய்தால் மட்டுமே நண்பர்களால் தப்பிக்க முடியும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? நண்பர்கள் கொலை செய்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகனாக சித்து.. நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.. கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.. பயம், தவிப்பு, பதட்டம் என ஒவ்வொன்றையும் இருவரும் அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சாமியாராக மைம் கோபி மற்றும் அகோரியாக சாயாஜி ஷிண்டே.. இருபது நடிப்பும் கவனிக்கப்படும் வகையிலும் ரசிக்கும்படி வகையிலும் உள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் வெற்றி, ரியாமிகா, சரத், மதனகோபால் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். ஆனால் அதிக இடங்களில் டபுள் மீனிங் காமெடிகள் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால் பேய் படங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை தானே.!?

டெக்னிசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த்..

படத்தொகுப்பாளர் ராஜ்குமார்..

கலை இயக்குநர் சந்திரகாந்த்..

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்ச மணி

இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்

பேய் படம்.. திகில் கதை ஆகியவற்றுடன் காமெடி கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் பல கேமரா கோணங்களில் படமாக்கி இருக்கின்றனர். பேய் படங்களுக்கு உள்ள வழக்கமான ஃபார்முலா தான் என்றாலும் அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ல்.

படத்தின் பின்னணி செய்யும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

திடீரென்று இடம்பெறும் அகோரி மற்றும் காட்சிகள் ரசிகர்களை குழப்பமடைய செய்கிறது.

Aghori movie review and rating in tamil

‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர் விமர்சனம்…

‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர் விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.

இந்த இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

1990களில் தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் உள்ள காடுகளைக் கட்டியாண்டவர் என்ற பெருமையை பெற்றவர் சந்தனகடத்தல் வீரப்பன்.

அவரது கதையை அவரே சொன்னால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்த ‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர்.

1995 – 96-களில் வீரப்பனைப் தன் பத்திரிகைக்காக பேட்டி எடுக்க காட்டிற்குள் சென்ற நக்கீரன் பதிவு செய்த செய்தி மற்றும் வீடியோக்களை இந்த கதை விவரிக்கிறது.

வீரப்பன் வாழ்வில் நடந்த போலீஸ் வழக்குகள், வீரப்பன் செய்த படுகொலைகள், சந்தனமரக் கடத்தல்.. யானை தந்தங்கள் கடத்தல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு எபிசோடுகளாக இந்த தொடர் கதை விவரிக்கிறது.

மேலும் பொதுமக்கள் வதை முகாம்கள், காவல்துறை செய்த சித்ரவதைகள், காவல்துறைக்கும், அந்த பகுதி மக்களின் மனநிலை, வீரப்பனின் அரசியல் என எபிசோடுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

எவரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வீரப்பன் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் உலக செய்திகளை அறிந்திருப்பது அதை அவரை அவரது சொந்தக் குரலில் பேசி இருப்பது உள்ளிட்டவைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் நாம் நாட்டிற்குள் இருந்து பார்த்துக் கொண்டு அரசியல் வேறு.. காட்டுக்குள் நடக்கும் அரசியல் வேறு என வீரப்பன் பார்வையில் சொல்லி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மலைவாழ் மக்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் கண் கலங்க வைக்கிறது. இது வீரப்பன் பற்றிய ஆவணப்படம் என்பதால் அவர் பேசிய காணொளிகள் தொடர் முழுவதும் நிரம்பி இருக்கின்றன.

வீரப்பன் மீது ஆயிரம் ஆயிரம் குற்றச்சாட்டுகளை போலீஸ் வைத்தாலும் மக்களை நம்ப வைத்தாலும் போலீஸ் செய்த குற்றங்கள் யாருக்கும் தெரிவதில்லை.. ஆனால் அதை தைரியமாக சொன்ன வீரன் வீரப்பன்.

ஒரு காட்சியில் அவர் பேசும் வசனம் கைதட்ட வைக்கிறது. “காசு கொடுத்து ஆடு திண்ணா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கிறேன்?” என்கிறார்.

இத்துடன் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வழக்கறிஞர்கள் மோகன், தமயந்தி, நடிகை ரோகினி, காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர், இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், ஊர்கிராமமக்கள் என பலரும் வீரப்பன் குறித்த கதை விவரங்களை விவரிப்பதாக காட்சிகள் நகர்கின்றன.

இவையில்லாமல்… 1995இல் ஜெயலலிதா ஆட்சி செய்த போது நடத்திய நிகழ்வுகள்.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட மோதல்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்.. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயம் திமுக நிலைபாடு உள்ளிட்டவைகளும் ஆராய்ந்து இருக்கிறது இந்த தொடர்.

Koose Munisamy Veerappan movie review and rating in tamil

ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்…

உறியடி விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சண்முகம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணவேல், வடசென்னை அன்பு, ஜெயராஜ், சார்ட்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் மற்றும் பலர்.

தயாரிப்பு:ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

இயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத்

படம் வழங்குவது: லோகேஷ் கனகராஜ் – ஜி ஸ்குவாட்

ரிலீஸ்: சக்தி.பிலிம் ஃபேக்டரி

கதைக்களம்…

சென்னையை அடுத்த பழவேற்காடு பகுதிதான் கதைக்களமாகிறது.

அண்ணன் பெஞ்சமின்.. தம்பி ஜோசப் தம்பியின் கூட்டாளி கிருபா..

அண்ணன் ஒரு பாக்ஸர்.. தன்னால் சாதிக்க முடியாததை தன் பகுதி மக்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அந்த பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதற்கு ஜோசப்பும் துணை போகிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை எழவே அண்ணனை கொலை செய்து விடுகிறான் ஜோசப். இதனால் ஜெயிலுக்கு செல்ல போது தன் கூட்டாளி கூட தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கிருபா பெரிய அரசியல்வாதி ஆகிடுகிறான். இதன் பிறகு என்ன நடந்தது? ஜெயிலுக்கு சென்ற ஜோசப் திரும்பி வந்தார்? நண்பருடன் மீண்டும் சேர்ந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப் அந்தப் பகுதி இளைஞன் செல்வாவை (விஜயகுமாரை) வைத்து என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கேரக்டர்ஸ்…

உறியடி படத்தின் மூலம் உரிமைக்காக உரக்க கத்திய விஜயகுமார் இதிலும் அதே துருதுருப்புடன் நம்மை கவர்ந்திருக்கிறார். ஆக்ரோஷ இளைஞராகவும் அதிரடி ஸ்கோர் செய்திருக்கிறார்.

விரோதமான வில்லத்தனம் கலந்த கேரக்டரை செய்திருக்கிறார் அவினாஷ். அரசியல்வாதி கிருபாவைக் கொல்ல போடும் திட்டங்கள் வேற லெவல்.

நாயகி மோனிஷா தேவையில்லாத கேரக்டர் என்றாலும் சில இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

கார்த்தியாக சரவணவேல், வில்லனாக ஜோசப் எனும் அவினாஷ் ரகுதேவன், அரசியல்வாதியாக கஞ்சா வியாபாரி சங்கர்தாஸ் ஆகியோர் கேரக்டர்கள் இப்படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்ஸ்…

கேமரா மேன் பிரிட்டோ.. வடசென்னை கடந்த பழவேற்காடு போல காட்சியளித்து அதிரடி காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

யாரும் காணாத.. பாடல் நன்றாக ஒர்க் அவுட் ஆன ஒன்றாகும். ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையால் மிரட்டி இருக்கிறார் கோவிந்த் வசந்தா. அது போல விண்டேஜ் ரசனையான பின்னணி இசையும் சிறப்பு.

இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்றாலும் அவரது வழக்கமான போதைப்பொருள் தான் இந்த படத்தில் ஆணிவேர். இளைஞர்கள் வாழ்வில் போதை நுழைந்து விட்டால் அதில் அரசியலும் நுழையும்… இந்த இரண்டிலும் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் எந்த நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்? சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கேங்ஸ்டர் கதை என்பதால் பழிவாங்கல் கதை தொடர்கிறது.. இந்த கும்பல் அந்த கும்பலை தாக்க… அந்த கும்பல் இந்த கும்பலை தாக்க இந்த நீளத்தை குறைத்து இருக்கலாம்.

பைட் கிளப் என வைத்து விட்டதால் சண்டைக்காட்சிகள் குறைவில்லை. அதே சமயம் கஞ்சா வாடைக்கும் குறைவில்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத்.

Fight Club movie review and rating in tamil

கண்ணகி விமர்சனம்… புரட்சி பெண்கள்

கண்ணகி விமர்சனம்… புரட்சி பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் புரட்சி பெண்ணே.. நியாயத்திற்காக போராடும் துணிச்சல் மிக்க பெண்கள் புரட்சி பெண்களே.. இதை மையப்படுத்தி நான்கு பெண்களின் வாழ்க்கையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

கண்ணகி படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கதைக்களம்…

வித்யா பிரதீப் – அம்மு அபிராமி – கீர்த்தி பாண்டியன் – ஷாலின் ஜோயா.. இந்தப் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதைகளத்தை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

விவகாரத்துக்கு கேட்கும் கணவன்.. ஆனால் விவகாரத்து மறுக்கும் மனைவியாக வித்யா பிரதீப்..

அடுத்ததாக கீர்த்தி பாண்டியன்.. கர்ப்பத்தை கலைக்க சொல்லும் காதலன் அதனை மறுக்கும் கீர்த்தி.

திருமணத்திற்காக வரன் தேடி காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி.

கண்ணகி

திருமண உறவில் நம்பிக்கை இல்லாத ஷாலின் ஜோயா.. ஆனால் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கையை மேற்கொள்கிறார்.

இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் கதைதான் இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பின்பு வந்திருக்கும் முதல் படம் இது. வித்தியாசமாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

கண்ணகி

தன் 2வது திருமண வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என வித்யா பிரதீப் நினைப்பது விவகாரத்தான பெண்களின் உணர்வை உணர்த்தும்.

நவீன 90s கிட்ஸ் டைப்பில் ஷாலின் ஜோயா. கவனிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அம்மு அபிராமிக்கு ஒவ்வொரு வரனும் நெருங்கும்போது ஒவ்வொரு ஆண் மகனையும் எப்படி கணவனாக பார்க்க முடியும் என கேட்பது நம்மை கண் கலங்க வைக்கும்.. நம் வீட்டில் திருமணமாகாத பெண் இருந்தால் அவரின் நிலை நமக்கு உணர வைக்கும்.

டெக்னீசியன்ஸ்…

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்க ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவாளர் நேர்த்தியான உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் எடிட்டர் கொஞ்சமாவது கட்டிங் போட்டு இருக்கலாம் தேவையற்ற காட்சிகள் படத்தின் நீளத்தையும் நம் பொறுமையும் சோதிக்கிறது.

கண்ணகி

தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது.

இடைவேளைக்கு முன்பு திரைக்கதையின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதில் இயக்குனரின் தடுமாற்றம் தெரிகிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் கீர்த்தி பாண்டியனின் கேரக்டர் திருப்புமுனை எதிர்பாராத ஒன்றாகும்.

ஆனால் அதுவே குளறுபடிக்கும் காரணமாக அமைந்துவிட்டது. அதை கொஞ்சம் தெளிவுப்படுத்தி இருந்தால் இந்த கண்ணகி இன்னும் கவனிக்கப்பட்டு இருப்பாள்.

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்… சமூகத்திற்கு பெண்களுக்கான நிலை என்ன அவர்கள் படும் அவஸ்தை என்ன? அவர்கள் செய்யும் ரகளை என்ன? அவர்கள் படும் வேதனை என்ன? அவர்கள் செய்யும் சாதனை என்ன? என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி இருப்பது கண்ணகி-யின் பெருமையை உணர்த்தியுள்ளது.

கண்ணகி

Kannagi movie review and rating in tamil

கட்டில் மேல் காதல்.. – கட்டில் விமர்சனம் 3.25/5

கட்டில் மேல் காதல்.. – கட்டில் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஈவி கணேஷ் பாபு, சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் மற்றும் பலர்.

பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் & மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ‘கட்டில்’ படத்தை தயாரித்துள்ளது.

நாம் உழைத்து களைத்து வீட்டிற்கு சென்றால் அட கட்டிலில் படுத்து தூங்க மாட்டோமோ என நினைப்பதுண்டு. இது கட்டில் என்று சாதாரணமாக கருதினாலும் ஒவ்வொரு தலைமுறையும் உருவாக இந்த கட்டில் எவ்வளவு உழைத்திருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் விதமாக இந்த படத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நாயகனும் இயக்குனருமான கணேஷ் பாபு.

ஸ்டோரி லைன்…

நாயகன் கணேஷ் பாபு. இவர் அம்மா கீதா கைலாசம் மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 6 வயது மகன்.. அடுத்த குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் சிருஷ்டி.

ஒரு கட்டத்தில் கணேஷ் பாபுவின் உடன் பிறந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிடுகின்றனர். எனவே தங்களின் பரம்பரை வீட்டை விற்க சொல்கின்றனர்.

வீட்டை விற்க மனம் இல்லாத கணேஷ் பாபு வீட்டில் உள்ள தனக்கு பிடித்தமான கட்டிலையும் விற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விற்க அனைவரும் சம்மதிக்கின்றனர்.

அப்போது அந்த பெரிய கட்டிலை வைக்க இடமில்லாமல் தவிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

தாத்தா, தந்தை, மகன் என 3 தலைமுறை கேரக்டரில் நடித்து இருக்கிறார் கணேஷ்பாபு. வயதுக்கு ஏற்ப உடல்மொழி பாவனை என அனைத்தையும் முடிந்தவரை அழகாகவே செய்திருக்கிறார் நாயகன் கணேஷ் பாபு.

இவரே இயக்குனர் என்பதால் இரண்டு பொறுப்புகளை உணர்ந்து கட்டிலை வடிவமைத்திருக்கிறார் கணேஷ் பாபு.

சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாகவே உணர்ந்து பிரசவ வேதனை போல நமக்கும் வலியை ஏற்படுத்துகிறார்

தாயாக கீதா கைலாசம். யதார்த்த நடிப்பில் கவர்கிறார். அதுபோல பத்திரிக்கையாளர் செந்தில் அவர்களும் தன் கேரக்டரில் கனக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

சின்ன கேரக்டரில் விதார்த் சிறப்பு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு: ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரன்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம் : ஈவி கணேஷ் பாபு.

கட்டில் என்பதால் உறக்கம்.. உறக்கம் என்றால் இசை.. இசை என்றால் தாலாட்டு என்பதற்கு ஏற்ப ஸ்ரீகாந்த் தேவா தன் இசையை தாலாட்டாக கொடுத்திருக்கிறார்.

ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவும் பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்ப காட்சிகளை திறமையாக கையாண்டுள்ளனர்.

கட்டில் என்றால் உறக்கம் மட்டும் அல்ல.. அது உறவுகளுக்கு இணையானது.. அதுவும் ஒரு குடும்ப உறவுகள் உருவாக தலைமுறைகள் உருவாக கட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.. அதை உணர்வுடன் கட்டில் மூலம் கதை சொல்லி இருக்கிறார் கணேஷ் பாபு.

கட்டில்

kattil movie review and rating in tamil

More Articles
Follows