தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ஹீரோ ஸ்ரீராம், ஆடுகளம் முருகதாஸ், வெலினா உள்ளிட்டவர்கள் தந்தை பெரியார் ஆட்டோ ஸ்டாண்டின் ஆட்டோ ஓட்டுனர்கள்.
ஸ்ரீராம் ஒரு பிரச்சினையால் ஊரை விட்டு வந்து சென்னையில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார். இவரின் தந்தை ஜெயிலில் இருக்கிறார். எனவே சொல்ல முடியாத சோகத்தில் வாழ்கிறார்.
ஒரு நாள் ஸ்ரீராம் ஆட்டோவில் ஊரை விட்டு ஓடி வந்த காதலர்கள் விஷ்னு மற்றும் சாயா தேவி (காயத்ரி மலர்) சவாரிக்கு வருகின்றனர்.
அவர்களுக்கு யாரும் ஆதரவில்லை என்பதால் அவர்களுக்கு உதவியும் செய்கிறார்.
ஒரு கட்டத்தில் நாயகி தனிமைப்படுத்தப்படுகிறார். ஏன் அவரின் கணவர் என்ன ஆனார்? அதன்பின்னர் ஹீரோ என்ன செய்தார்? ஹீரோவின் அப்பா ஏன் ஜெயிலில் இருக்கிறார்? என்ன பிரச்சினை? என்பதே மீதிக்கதை.
STYLISH MAKING… மாஃபியா விமர்சனம் 2.5/5
கேரக்டர்கள்..
ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட ஒரு சிலரே நமக்கு தெரிந்த முகங்கள். மற்றவர்கள் புதுமுகங்களே.. ஆனால் நடிப்பில் அசத்தல் அறிமுகங்கள்..
ஸ்ரீராம் மற்றும் சாயாதேவி (காயத்ரி) இருவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். கேரக்டரை உள்வாங்கி உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஹீரோயின் கண்களும் சரி உதடுகளும் சரி பேசும் பாஷை புதிது.
இருவருக்கும் இனி நிறைய வாய்ப்புகள் வரும். கண்களாலேயே இருவரும் பல மொழி பாஷைகளை பேசியுள்ளனர்.
அதுபோல் 2வது ஹீரோவாக வரும் விஷ்னுவும் ஷாப்ட்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று.
ஜாதியை மீறி கரம்பிடித்த காதலியை இவர் பார்த்துக் கொள்ளும் விதம் அருமையும் கூட.
இனி ஆடுகளம் முருகதாஸ் தனியாக காமெடி செய்யலாம். படத்தில் இவரது காமெடி நிச்சயம் பேசப்படும்.
அப்பாவி அப்பா… காட்ஃபாதர் விமர்சனம் 3/5
ரோபோ சங்கரின் மனைவி ப்ரியா. கவுன்சிலர் & வீட்டின் முதலாளி வேடத்தில் கலக்கி எடுத்துள்ளார்.
இவருக்கு ஆடுகளம் முருகதாசுக்கும் செமயாய் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அக்கா.. 20 வருசமா நீங்க வாயும் வயிறுமா இருந்தீங்களா? உங்க தியாகி புருசன் எங்க அக்கா? என அவரை கிண்டல் செய்யும் போதெல்லாம் தியேட்டரில் அப்ளாஸ்.
அதுபோல் சூப்பர் குட் சுப்ரமணி நடிக்க சான்ஸ் கேட்டு அலையும் நபராக அசத்தல். ரஜினி அரசியலுக்கு போறாரு. ரோபோட் 3 படத்தை என்னைய வச்சுதான் ஷங்கர் எடுக்க போறாரு என காமெடி செய்வதிலும் வயசாச்சு ஊருக்கு போறேன் என கலங்கும் இடத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
ஹீரோ ஸ்ரீராமின் அப்பவாக கஜராஜ். சில காட்சிகள் என்றாலும் ஜாதி வெறி பிடித்த அப்பாவாக நெஞ்சில் நிறைகிறார். க்ளைமாக்ஸில் இவரும் ஹீரோவும் சந்திக்கும் காட்சிகள் செம ட்விஸ்ட். அதை சொன்னால் கன்னி மாடம் கவனம் சிதறிவிடும்.
ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் ஸ்டெல்லா (வெலினா) கண்களாலேயே காதல் பேசியிருக்கிறார். இவரின் திருமண காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார். 3 காலு வாகனம் பாடல் ரசிக்க வைக்கிறது. மெலோடி பாடலும் இவருக்கு கைகொடுக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர் இனியனை எவ்வளவு பாராட்டினாலும் இனிக்கும். முக்கியமாக 2வது ஹீரோ (விஷ்னு) மற்றும் நாயகி இருவரும் படுக்கையில் தனிமையில் இருக்கும் அவர் வைத்துள்ள கேமரா ஆங்கிள் செம. நாயகி முகம் பாதி.. நாயகனின் முகம் பாதி என லைட்டிங்கில் மிரட்டியுள்ளார்.
அதுபோல் க்ளைமாக்ஸின் போது ரத்தம் தரையில் ஓடும்போது அதில் நாயகியின் முகம் காட்டப்படும் காட்சிகள் ரத்த வெறி ஒளிப்பதிவு.
ரிஷல் ஜெய்னி எடிட்டிங் செய்துள்ளார். முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் தேவையில்லை. ஒரு பாட்டை கட் செய்திருக்கலாம். மேலும் முதல்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் விறுவிறுப்பு இருந்திருக்கும்.
நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் இந்த படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திலேயே (பந்திலேயே) சிக்ஸர் அடித்துள்ளார். இனி இவர் இரட்டை குதிரை சவாரி தாராளமாக செய்யலாம்.
சினிமாவில் வருவதற்கு முன் ஆட்டோ டிரைவராக இருந்தவர் போஸ் வெங்கட். அப்போது அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். காட்சிகளை கவிதையாக்கியுள்ளார்.
இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் இரண்டும் எதிர்பாராத ட்விஸ்ட். காதலையும் ஜாதியை சொல்லி அதற்கு பாடமும் எடுத்துள்ளார் போஸ் வெங்கட்.
ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ஆக இந்த கன்னி மாடம்.. சாதியற்ற காதலர் மாடம்