தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, ரகுல்ப்ரித்தி சிங், போஸ் வெங்கட், சத்யன், மனோபாலா, வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : வினோத்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
எடிட்டிங்: சிவநந்தீஸ்வரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: எஸ்ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர்ஸ்)

கதைக்களம்…

தீரன் திருமாறன் என்ற கார்த்திக் ஒரு டி.எஸ்.பி. போலீஸ் டிரெய்னிங் சமயத்திலேயே அவரது பேட்சிசில் முதல் மாணவனாக வந்தவர்.

தன் எதிர் வீட்டில் இருக்கும் பிரியா (ரகுல் பிரித்தீ சிங்)வை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

சிறுவயதிலேயே தன் போலீஸ் தந்தையை இழந்தவர் தீரன். தன் தந்தையை போல் தானும் உத்யோகத்தில் இருக்கும்போதே தன் உயிரே போனாலும் பரவாயில்லை என நேர்மையாக பணியாற்றி வருகிறார்.

இதனால் அடிக்கடி உயர் அதிகாரிகளால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ஊர் எல்லையில் ஒதுக்கு புறமாக இருக்கும் வீடுகளை குறிவைத்து அந்த குடும்பத்தினரை கொடூரமாக கொன்று ஒரு கும்பல் கொள்ளையடிக்கின்றனர்.

இது அடிக்கடி தமிழகத்தில் தொடர்கிறது. ஆனால் ஒரு தடயமும் இல்லாமல் அந்த கும்பல் கொள்ளையடிப்பதால் போலீஸ் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் அங்குள்ள பான்பராக், நாட்டு வெடிக்குண்டு மற்றும் இதர பொருட்களால் அவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.

இதனையடுத்து வட இந்தியாவுக்கு தன் அணியுடன் செல்கிறார் தீரன். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

வட இந்தியாவுக்கு சென்ற அவர் அந்த கும்பலை பிடித்தாரா? அவர்கள் யார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே இந்த தீரனின் தீவிர வேட்டை.

theeran stills

கேரக்டர்கள்…

இதில் கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதை தீரனாக உருமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம். காஸ்ட்யூம், கடமை, கம்பீரம், கட்டுடல் என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார் கார்த்தி.

பருத்தி வீரன் கார்த்தி என்ற பெயர் இனி தீரன் கார்த்தி என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.

ராஜஸ்தான் சென்று, அங்கு கஷ்டப்படும் போலீஸ் டீம் என தன் முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். காக்கியில் மட்டுமல்ல காதலிலும் அடி பின்னியிருக்கிறார். ரகுல்பிரித்தியிடம் செமயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இதுநாள் வரை ச்சும்மா ஹீரோயின் என்று வந்த ரகுல் பிரித்தி சிங் இதில் கதைக்கு ஏற்ற நாயகியாக வாழ்ந்திருக்கிறார்.

இவரது கன்னத்தில் கார்த்தி விரல் வைத்து சாப்பாட்டு சுவையை சொல்லும் போது அவர் காட்டும் முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. இனி இவருக்கான வாய்ப்புகள் வந்து குவியும்.

மனோபாலா இதில் சீரியஸான அப்பாவாக வந்து நன்றாக நடித்திருக்கிறார்.

சத்யன் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த சீரியஸான சப்ஜெட்டுக்கு காமெடி தேவையில்லை என்பதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

போஸ்வெங்கட் உள்ளிட்ட அந்த காவலர்கள் அனைவரும் கம்பீரம். தீரன் போன்ற போலீஸை பார்த்தால் நம்மை அறியாமல் நாமே சல்யூட் அடிப்போம்.

நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாக நடித்துள்ளனர்.

வட இந்திய வில்லன்களாக வரும் அனைவரும் செம டெரர்ர் லுக். வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் ஆகியோர் கொள்ளையர்களாகவே வந்து நம் மனதையும் நடிப்பால் கொள்ளையடிக்கிறார்கள்.

அவர்கள் பகுதியில் கார்த்தி சென்று மாட்டிக் கொள்ளும் அந்த காட்சி கைத்தட்டலை அள்ளும்.

Theeran597 new

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செவத்த புள்ள பாடல் ரொமான்டிக் என்றால் தீரன் டா பாடல் அதிரடி. ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் அந்த அழுக்கான புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்துள்ளது.

வறண்டு போன வட இந்தியாவை ஒரு சினிமா டிக்கெட்டில் பார்த்த முழு திருப்தி கிடைக்கும் அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

படத்தில் கத்திரிக்கு வேலையே இல்லை. எடிட்டர் கச்சிதம்.

theeran stills 1

இயக்கம் பற்றிய அலசல்…

வினோத்.. கார்த்தி வினோத் வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளனர். இனியும் இந்த கூட்டணி தொடர வாழ்த்துக்கள்.

வெறுமனே போலீஸ் ஸ்டோரி என்று சொல்லாமல் அதற்கு சில 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அந்த கொள்ளையடிக்கும் கும்பல் யார்? அவர்களின் பலம் என்ன? என்பதை ஆராய்ந்து ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் டைரக்டர்.

இண்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் சீன் தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.

நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரிகளின் கடைசி கால நிலைமை என்னவாக இருக்கும்? என்பதையும் யதார்த்தமாக சொல்லி மனதை கலங்கவைக்கிறார் வினோத்.

தீரன் காக்கி சட்டைக்காரர்கள் இனி காலரை நேர்மையாக தூக்கிவிட்டு கொள்ளலாம்

அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன், மாரிமுத்து, பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : கோபி நயினார்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

இது ஒரு அரசியல் கதை. அவசியமான கதை. அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கதை. அலட்டிக் கொள்ளாத கதை, அன்பான கதை, அழகான கதை… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு கிராமம் காட்டூர். குடி தண்ணீர் கூடாத இல்லாத பகுதி.

அந்த கிராமத்தில் கஷ்டப்படும் மக்களில் ஒருத்தி சுனு லட்சுமி. இவரது 4 வயது மகளை வெளியே அழைத்துப் போகும் அங்கு தோண்டப்பட்டிருக்கும் 36 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழந்து விடுகிறாள்.

அந்த குழந்தையைக் காப்பாற்ற கலெக்டர் நயன்தாரா முதல் தாசில்தார், விஓஏ, தீயணைப்பு படை, போலீஸ், எம்எம்ஏ, கவுன்சிலர் என அனைவரும் ஆஜர்.

ஆனால் இவர்கள் செய்யும் முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வி அடைகிறது.

இதனால் பல அரசியல் சதிகளை மீறி நயன்தாரா அந்த குழந்தையை மீட்க என்ன செய்தார்? என்பதே இந்த அறம்.

கேரக்டர்கள்…

நயன்தாரா போல ஒரு ஹீரோயின் இருந்தா இனிமே ஹீரோ இல்லாமல் கூட படம் எடுக்க நினைப்பார்கள் இயக்குனர்கள்.

குழிக்குள் இருக்கும் குழந்தையை மீட்க ஒரு தாயைப் போல் தவிப்பை பிரதிபலித்துள்ளார் நயன்தாரா.

அவரின் இயல்பான நடிப்பு, நேர்த்தியான பார்வை, என அனைத்தும் படத்திற்கு ப்ளஸ்.

மக்கள் பிரச்சினையை மக்கள் இடத்தில் இருந்து நயன்தாரா பேசும் காட்சிகள் கைத்தட்டலை அள்ளும்.

சுமதியாக வரும் சுனு லட்சுமி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடும் அந்தக் குழந்தையும் அவளது அண்ணனும் அருமையான நடிப்பு.

பழனி பட்டாளம், ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களுக்கு வசனங்கள்தான் பெரிதும் கைகொடுக்கும். அதை சரியாக செய்துள்ளார் இயக்குனர்.

“இந்தியாவுல விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும். ஆனால் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை, குழிக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஒரு மெசின் இல்லை.

இன்னும் கயிறு நம்பித்தான் இருக்கானுங்க. என அதிரடி வசனங்கள் நம்மையும் யோசிக்க வைக்கும்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் நன்றாக உழைத்திருக்கிறார். ஆழ்துளைக் கிணறு குழந்தை மீட்பை நிஜமாகவே பெரும் பள்ளம் தோண்டிப் படமாக்கியிருக்கிறார்கள்.

உணர்வுப்பூர்வமாக இசையை ஜிப்ரான் கொடுத்து நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறார்.

மக்கள் அரசு அதிகாரியை பார்த்து வர ஏன் இவ்வளவு தாமதம்? என கேட்கும்போது, ரொம்ப அவுட்டராக இருக்கு என்னும்போது மக்கள் கேட்கும் கேள்விகள் நச்.

ஓட்டு கேட்கும்போது நாங்க இங்கோ இருக்கோம் வரத்தெரியலையா? ஓட்டுப் போட எங்களை கூட்டிட்டு போக தெரியலையா? இப்போதான் நாங்க இவ்வளவு தூரத்துல இருக்கோம் தெரியுதா? என கேட்கும்போது எந்த அரசாங்கத்திடமும் பதில் இருக்காது.

அருமையான கதையை கோபி நயினார் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து கொடுத்திருக்கிறார்.

அறம்… அருமை. அவசியம்.

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின், சூரி, ஹரிஷ் ராகவேந்தர், அப்புக்குட்டி, அருள்தாஸ், தீலிபன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவு: லஷ்மன்
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: அன்னை பிலிம் பேக்டரி ஆண்டனி

nenjil

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சியே ஆஸ்பத்திரியில் தொடங்குகிறது. சந்தீப்பின் அப்பா சிவா ஒரு சிறிய சிகிக்சைக்காக ஆஸ்பத்திரியில் சேருகிறார். ஒரு போலி டாக்டர் ஆப்ரேசன் செய்ய அவர் மரணமடைகிறார்.

அதன்பின்னர் அதை வேறு ஒரு கோணத்தில் செல்கிறது.

கேட்ரிங் செய்துக் கொண்டே கறி வெட்டுவதை போல ஆட்களை காலி செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.

ஒருமுறை இவர் போடும் ஸ்கெட்சில் சிக்குகிறார் விக்ராந்த். தன் நண்பனை விக்ராந்த் வில்லனிடம் இருந்து காப்பாறும் சந்தீப், ஒரு பொய் குற்றச்சாட்டை கூறி தன் நண்பனையே சிறைக்குள் தள்ளுகிறார்.

தன் நண்பன் ஜெயிலில் இருந்து வெளி வரும் முன்னே, விக்ராந்த்தை கொல்ல திட்டமிட்டவர்களை தேடி அலைகிறார்.

இது தெரியாத விக்ராந்த், ஜாமீனில் வெளியே வரும்போது சந்தீப் மீது கோபமாக இருக்கிறார்.

அவர்கள் யார்? எதற்காக கொல்ல திட்டமிடுகின்றனர்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Nenjil-Thunivirundhal-Movie-Stills-

கேரக்டர்கள்…

மாநகரம் படத்தில் ரசிகைகளை கவர்ந்த சந்தீப் தான் இதில் ஹீரோ. நல்ல உடல்வாகு. ஆறடி உயரம். என முறுக்கேறி வருகிறார்.

இவர் சும்மா வந்து நின்றாலே அடிக்க வந்தது போல் இருக்கும். ஆனால் ஆக்சன் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதற்கு பதிலாக உடும்பு பிடி பிடிச்சி எதிரிகளை கட்டியணைத்து கொள்கிறார்.

தன்னுடைய பழைய பார்முலாவிலேயே இருக்கிறார் விக்ராந்த். சீரியசான கேரக்டர்கள் அழுத்தமான முகம் என்றால் இவரை கூப்பிடுகிறார்களா? எனத் தெரியவில்லை.

மனிதர் சிரிக்கவே மாட்டார் போல. ஆனால் உடல் இளைத்து வளைத்து நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.

சூரி, அப்புக்குட்டி ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். மாவீரன் கிட்டு படத்தில் ஒரு டயலாக் கொடுத்தார் சூரிக்கு. இதில் கொஞ்சம் அதிகம். வேறு ஒன்றுமில்லை.

வில்லன் அடியாள்கள் போல வரும் அருள்தாஸ், தீலிபன் ஆகியோர் சிறப்பு.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அடிக்கடி வந்தாலும், சந்தீப் தான் ஸ்கெட்ச் போட்டு கண்டு பிடிக்கிறார். இன்ஸ்பெக்டர் நீயா நானா கோபிநாத்தின் உறவினர் போலவே இருக்கிறாரே? யார் அவர்?

ஹரிஷ் உத்தமன் தாடியுடன் வருகிறார். அவருக்கு மிரட்டலான கெட் அப் இதுதான். நன்றாக பொருந்தியிருக்கிறது.

போலீசுக்கு சந்தேகம் வராமல் எதையும் அசால்ட்டாக ஸ்கெட்ச் போடுவது ஹரிஷ் உத்தமனின் தனி ஸ்டைல்.

விக்ராந்த் காதலியாகவும் சந்தீப்பின் தங்கையாக வரும் ஷாதிகா தன் நடிப்பில் கெட்டி.

என்னடா இது ஹீரோயின் மெஹ்ரின் பத்தி சொல்லவேயில்லை என்கிறீர்களா? படத்திலேயும் ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால், மெழுகு பொம்மை போல அழகாக இருக்கிறார் மெஹ்ரின்.

Nenjil-Thunivirundhal-35

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எச்சச்ச எச்சச்ச, ஏய் அரக்கா, அறம் செய்ய விரும்பு ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

இமான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு ஒரு பிஜிஎம் என்றால் ஹீரோவுக்கு ஒரு பிஜிஎம் நன்றாக இருக்கிறது.

லஷ்மன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், க்ளைமாக்ஸ் பைட் லைட்டிங்கும் ரசிக்க வைக்கிறது.

ஆனால் எடிட்டர் தன்னுடைய வேலையை நிறைய இடத்தில் மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

அந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை காட்சி எதற்கு? க்ளைமாக்ஸ் முடியும் நேரத்தில் பின்னர் வரும் அந்த கோயில் காட்சிகள் எதற்கு?

Nenjil-Thunivirundhal-Movie-Stills-13-1024x683

இயக்கம் பற்றிய அலசல்…

காதல், மோதல், குடும்பம், கமர்ஷியல் என அனைத்தையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் சுசீந்திரன் படங்கள் என்றால் அதைப் பார்க்கும்போது ஒரு சுகம் இருக்கும். இதில் முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் இருக்கிறது.

மருத்துவத் துறையில் போலி டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற கான்செப் உடன் முதல் காட்சி தொடங்க, அதை ஹீரோ ஒரு சின்ன டயலாக் பேசி முடித்து வைத்துவிட்டார் என்பது பெரும் குறை.

நெஞ்சில் துணிவிருந்தால்… பார்க்கலாம்

இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, மஞ்சிமாமோகன், சூரி, ஆர்கே. சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, கௌரவ், ரோகினி மற்றும் பலர்.
இயக்கம் : கௌரவ்
இசை : இமான்
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
எடிட்டிங்: பிரவீன் கே.எல்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: லைக்கா நிறுவனம்

ippadai vellum

கதைக்களம்…

டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடிக்கிறது. இதற்கு இரு அமைப்பினர் பொறுப்பு ஏற்றாலும், இது போன்ற குண்டுகளை தயாரிப்பவன் சோட்டா (டேனியல் பாலாஜி) என்பது தெரிய வருகிறது.

இவனை சிறையிலும் அடைக்கின்றனர். ஆனால் அங்கும் குண்டு வெடிக்க செய்து, அடுத்த புரொஜக்டை செயல்படுத்த சிறையிலிருந்து தப்பிக்கிறார்.

அப்போது எதிர்பாராவிதமாக உதயநிதியின் காரில் டேனியல் மோத, அவர் தீவிரவாதி என தெரியாமல் உதவி செய்கிறார் உதயநிதி.

அதன்பின்னர் அங்கிருந்து தப்பும் டேனியல் டப்பிங் கலைஞரான சூரியின் பைக்கில் லிப்ட் கேட்கிறார். அவரும் உதவுகிறார்.

பின்னர் போலீஸ் விசாரணையில் உதயநிதியும் சூரியும் தீவிரவாதிக்கு உதவியது தெரிய வருகிறது.

இதனால் அவர்களை கைது செய்ய, அவர்கள் இருவரும் தாங்கள் நிரபராதிகள் என நிரூபிக்க போராடும் போராட்டமே இப்படை வெல்லும்.

Ippadai-Vellum-Press-Meet-Stills-696x364

கேரக்டர்கள்…

உதயநிதியை உச்சத்திற்கு கொண்டு செல்லும் படம் இது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

அவரது டிரெஸ் கலர் முதல் டான்ஸ் வரை கவனம் செலுத்தி நடித்திருக்கிறார்.

ஆக்ரோஷமாக பைட் செய்யாமல் பிரிலியன்ட்டாக பைட் செய்து ஸ்கோர் செய்கிறார்.

இடைவேளை சமயத்தில்தான் உதயநிதியுடன் சூரி இணைகிறார். அதிலிருந்து கதைக்கு தேவையான காமெடியை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்கள்.

வெறும் டூயட் பாட மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற நாயகி நான் என மஞ்சிமா நடிப்பை வழங்கியிருக்கிறார்.

Udhayanidhi-Stalin-And-Manjima-Mohan-Ippadai-Vellum-Tamil-Movie-Stills-3

டேனியல் பாலாஜிக்கு ஆரம்ப காட்சியில் அசத்தல் அறிமுகம். அதனை தொடர்ந்து சைலண்டாக ஸ்கெட்ச் போடுவது செம.

அதிரடி போலீஸ் ஆக ஆர்.கே.சுரேஷ். தங்கை பாசம், கடமை என இரண்டிலும் கம்பீரமாக நிற்கிறார்.

சிங்கம் ஸ்டைல் மீசையில் மிடுக்காக வருகிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

ஸ்ரீமன் சில காட்சிகளில் வந்தாலும் காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

சூரியின் மனைவியாக வரும் ரோகினி அனுதாபம் பட வைக்கிறார்.

பஸ் டிரைவராக ராதிகா சரத்குமாரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது.

இவர்களைத் தவிர டேனியல் பாலாஜியின் ஆட்களாக வரும் அந்த பெண் உட்பட அனைவரும் கச்சிதம்.

இப்படி எல்லா கேரக்டரையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார் இயக்குனர்.

Ippadai-Vellum-Tamil-Movie-poster

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் குலேபா பாடலும் அந்த பாரீன் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

லோக்கேசன் தேர்வு செய்த இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர் சந்துரு அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு அப்ளாஸை அள்ளும்.

குறிப்பாக டாப் ஆங்கிள் காட்சிகள், ஒரு காட்சிக்கும் மற்ற காட்சிக்கும் தொடர்பு படுத்தும் சிக்னல்கள் காட்சிகள், என அனைத்தும் அருமை.

எடிட்டர் பிரவீன் படத்தை விறுவிறுப்பாக பெரிதும் உதவியிருக்கிறார்.

ippadai vellum team

இயக்கம் பற்றிய அலசல்…

இயக்குனர் கௌரவ் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதை இதிலும் நிரூபித்து இருக்கிறார்.

வில்லன் சென்னையில் நுழையும்போது, ஒரு கருந்தேள் சென்னை எல்லையில் வருவது ரசிக்க வைக்கிறது.

ராதிகா ஏன் பஸ் ஓட்டுனராக ஆனார்? என அதை ஒரு பாடலில் சொன்ன விதம் என அனைத்தும் அருமை.

குலேபா பாடலில் மஞ்சிமாவும் அந்த பாவடையும் தியேட்டரிலேயே நம்மை அமர வைக்கிறது.

இமெயில் அனுப்பினால் ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கப்படும் என்பதால் அதை டிராப்ஃட்டில் சேர்த்து வைப்பது, என தீவிரவாதிகள் ஸ்கெட்ச் போடுவது கைத்தட்ட வைக்கிறது.

மேலும் சூரியை டப்பிங் ஆர்ஸ்ட்டிக்காக நடிக்க வைத்து, அவருக்கு நினைவு திரும்பிய உடன் நான் தீவிரவாதிக்கெல்லாம் தீவிரவாதி என பேச வைத்திருப்பது என சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் படத்தை பேச வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் வசனங்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

இப்படை வெல்லும்… இப்படம் தோற்கின் எப்படம் வெல்லும்?

அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் மற்றும் பலர்.
இயக்கம் : மிலிந்த் ராவ்
இசை : ஹரிஷ் – சதீஷ்
ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: சித்தார்த்

aval stills 2

கதைக்களம்…

இது ஒரு வழக்கமான பேய்ப்படம் என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.

வெறும் முகத்துக்கு மட்டும் மேக்அப் போட்டு காமெடி செய்து, சாரி. பயமுறுத்தும் படமல்ல.

நிஜமாகவே அவள் ஒரு டெரர் பீஸ்தான். அதைப் பற்றி பார்ப்போம்.

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

சித்தார்த் ஒரு மூளை நரம்பியல் டாக்டர். அவர் ஹிமாச்சல பிரதேசத்தில் தன் மனைவியுடன் தனியாக வசிக்கிறார்.

இவருக்கு அருகில் உள்ள வீட்டில் அதுல்குல்கர்னி, தன் மனைவி, இருமகள்கள் மற்றும் தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

ஒரு நாள் அதுல்குல்கர்னியின் மூத்த பெண், வீட்டு அருகில் உள்ள ஒரு கிணற்றில் தற்கொலை செய்துக் கொள்ள குதிக்கிறார்.

அவரைக் காப்பாற்ற குதிக்கும் சித்தார்த், கிணற்றுக்கு அடியில் ஒரு அமானுஷ்ய உருவத்தைப் பார்க்கிறார்.

அதன்பின் இந்த இரு குடும்பங்களுக்கும் நடக்கும் சம்பவங்களே படத்தின் டெரர் கதையாகும்.

aval movie posters

கேரக்டர்கள்…

படத்தின் முதல்பாதி செம சூடாக செல்கிறது. அதற்கு முக்கிய காரணம் சித்தார்த்-ஆண்ட்ரியாவின் லிப்லாக் காட்சிகள்.

எத்தனை லிப் கிஸ் அடித்திருப்பார்கள் என்று எண்ண நம் கை-கால் விரல்களே போதாது.

புதிதாக திருமண ஆண்களுக்கு உரிதான ரொமான்ஸில் சித்தார்த்தும், பெண்களே உரிதான பொஸஸிவ்னெஸில் ஆண்ட்ரியாவும் கலக்கியிருக்கின்றனர்.

இதில் சித்தார்த்தின் ஹேர் ஸ்டைல் மற்றும் லுக் ரசிகர்களை ஈர்க்கும்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சித்தார்த் தன் முழு நடிப்பை வழங்கி, அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார்.

அதுல்குல்கர்னி அவரது இரண்டு மகள்களும் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.

முக்கியமாக மூத்த பெண் அனிஷா விக்டர் (படத்தில் ஜெனி) மிரட்டியிருக்கிறார். பேய் இவருக்குள் இறங்கும்போது, அதை பிரதிபலிக்கும்போதும் நடுங்க வைக்கிறார்.

இவர்களுடன் ப்ளாஷ் பேக்கில் வரும் அந்த சீனாக்காரரும் நல்ல தேர்வு.

aval stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இதுபோன்ற பேய் படங்களுக்கு ஒலியும் ஒளியும் மிக முக்கியம். அந்த இரண்டையும் சரியாக கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் மிரட்டலுக்கு உதவியுள்ளது.

காட்டு கத்துற மாதிரி மியூசிக் போடாமல் படத்திற்கு எது தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் க்ரிஷ்.

ஒரு திகிலான பேய் படத்தை கொடுத்துள்ள மிலிந்த் ராவ் அவர்களை மிக தாராளமாக பாராட்டலாம்.

அவள்.. லிப்லாக் த்ரில்லர்

திட்டிவாசல் விமர்சனம்

திட்டிவாசல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நாசர், மகேந்திரன், அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா மற்றும் பலர்.

இயக்கம் : பிரதாப் முரளி
இசை : ஹரிஷ் – சதீஷ்
ஒளிப்பதிவு: சீனிவாசன்
படத்தொகுப்பு: ஆர்.எஸ்.சதீஷ்குமார்
பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்

கதைக்களம்…

காட்டில் வாழும் மக்களை அங்கிருந்து காலி செய்ய திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போடும் திட்டங்களை அண்மைக்காலமாக பல படங்களில் பார்த்து வருகிறோம்.

இதுவும் அதுபோன்ற கதைதான்.

ஆனால் இதில் முதல் காட்சி அண்மையில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்த்த உணர்வை தருகிறது.

தங்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்கிறார் நாயகி தனு ஷெட்டி.

இது பெரிய சர்ச்சையாக, நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் கலெக்டர் இங்கு வர வேண்டும் என கட்டளையிடுகிறார்.

அதன்படி கலெக்டர் வர, தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கிறார் நாயகி.

அந்த ப்ளாஷ்பேக்கில், ஒரு பொய் குற்றச்சாட்டில் காட்டு இளைஞர்களை சிறைக்கு அனுப்பி விடுகின்றனர் அரசியல்வாதிகள்.

சிறையிலிருந்து விடுதலை பெறும் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு எப்படி பாடம் புகட்டினார்கள்? தங்கள் கோரிக்கையை எப்படி பெற்றார்கள்? என்பதை சுவராஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரதாப் முரளி.

DNDvW7OUMAAEZXk

கேரக்டர்கள்…

மூப்பா என்ற ஊர் பெரியவர் கேரக்டரில் நாசர். இவர் என்ன சொன்னாலும் அந்த ஊர் இவரை நம்பும். அவரை கடவுளாகவே பார்க்கின்றனர்.

ஒரு காட்சியில் ஊரை காலி செய்கிறோம் என்று இவர் சொன்ன உடன் அந்த ஊரே அதிர இவர் அடுத்து செய்யும் செயல் ரசிக்க வைக்கிறது.

தங்க ரதம் ஜீப் ஓட்டும் கேரக்டரில் மகேந்திரன். அந்த காட்டு பகுதி இளைஞராகவே வருகிறார். இவரின் காதலி தனு ஷெட்டி.

இவருடன் மற்றொரு ஜோடியும் உள்ளது. வினோத் மற்றும் ஐஸ்வர்யா. இவர்களின் காதல் ரொமான்சும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

ஜெயில் கைதியாக இருந்து புரட்சிகளை செய்யும் அஜய் ரத்னம் மற்றும் போலீசாக வந்து அடாவடித்தனம் செய்யும் தீரஜ் அஜய் ரத்னம் (அஜய் ரத்னத்தின் மகன்) மற்றும் மந்திரியாக வரும் ஸ்ரீனிவாசப்பா ஆகியோரும் நல்ல தேர்வு

DNRs2hxVoAAmEJ_

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹரிஷ் – சதீஷ் ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

எங்க ஊரு தங்க தேரு பாடல் தாளம் போட்ட வைக்கிறது.

சிறையில் பாடும் புறப்படு தோழா பாடல் விழிப்புணர்வை தரும்.

பின்னணி இசையும் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

சீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அந்த காடும் அழகு சேர்க்கிறது.

DNcSLX_V4AAw1D7

 

படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இப்படம் சமூக கருத்துள்ள படம் என்றாலும் கமர்சியல் ஐட்டங்களை கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். ஆனா பெரும்பாலான காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையோடு பயணிக்கிறது என்பதே உண்மை.

முக்கியமாக அந்த சிறைச்சாலை காட்சிகள்.

மேலும் அடர்ந்த காட்டில் உள்ள பெண்கள் பேசும்போது சிட்டி பெண்கள் பேசும் இங்கிலீஷ் போல உச்சரிப்பு சரியாக இருக்கிறது.

யாருக்கும் அந்த காட்டு மொழியே வரவில்லை என்பது குறையாக தெரிகிறது.

மக்களுக்கு நீதி எப்போதும் கிடைப்பதில்லை. அதனை போராடி பெற வேண்டியுள்ளது.

நாம் இறுதிவரை மௌனமாக இருந்தால் மக்கள் புரட்சியும் வராது மறுமலர்ச்சியும் வராது என ஆணித்தரமாக சொன்ன இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

திட்டி வாசல்.. திகட்டாத வாசல்

More Articles
Follows