சபாநாயகன் விமர்சனம்..

சபாநாயகன் விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…..

குடிபோதையில் வண்டி ஓட்டி போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார் நாயகன் அசோக் செல்வன்.. அப்போது ஜீப்பில் சென்று கொண்டிருக்கும்போதே தன்னுடைய பள்ளி காதல் கல்லூரி காதல் ஆகியவற்றை பிளாஷ்பேக்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதில் அவர் செய்த குறும்புகளும் சேட்டை.. காதலித்த பெண்கள்.. அந்த அனுபவங்களை பகிர்வது தான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

அசோக் செல்வனின் திருமணத்திற்கு பின் வந்திருக்கும் முதல் படம் அவர் கதை தேர்வு செய்யும் விதமும் சமீப காலமாக ரசிக்க வைக்கிறது.. ரொமான்ஸிலும் குறை சொல்லாத முடியாதபடி கவர்ந்திருக்கிறார்.

மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது போல..

12 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்த்திகா முரளிதரன் மீது காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி சௌத்ரி உடன் காதல், எம்பிஏ படிக்கும் போது மேகா ஆகாஷ் மீது காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடந்த காதல்கள் சுவாரசியமானவை என்றாலும் போதுமான உணர்வு அதில் இல்லை என்பது வருத்தமே.

அசோக்செல்வனின் நண்பர்களாக வரும், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் என அனைத்து கேரக்டர்களும் கவனிக்க வைக்கின்றனர்.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய மூவர்
ஒளிப்பதிவும் அருமை.

லியோ ஜேம்ஸின் இசையில் பாடல்களும் அதை படமாக்கிய விதமும் கண்களுக்கு இதமளிக்கிறது. அது போல கல்லூரி ஷாட்களும், பாடல் லொகேசன்களும் குளிர்ச்சி.

இந்தப் படத்தின் இயக்குனர் பல பெண்களால் ஏமாற்றப்பட்டாரோ என்னவோ? எந்தப் பெண்ணும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் காதலிப்பார் என்பது போல பல காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஆனாலும் இன்று காதலிக்கும் பல பெண்கள்… ஆண்கள் வாங்கும் வரதட்சணையை விட பெண்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் நிறைய நிறைய என்பதால் அப்படி காட்சிகளை அமைத்திருக்க கூடும்.

ஆனால் படத்தின் நீளம் தான் மிகப்பெரிய குறை.. நிறைய காட்சிகள் தேவையற்றதாகவே இருக்குது.. அதில் சுவாரசியம் இருந்தால் ரசித்திருக்கலாம்.

Saba Nayagan movie review and rating in tamil

டங்கி விமர்சனம் 3.25/5

டங்கி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்டோர் நடிந்துள்ளனர்.

ஒன் லைன்..

விசா இல்லாமல் திருட்டுத்தனமாக மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இதை கழுதை செல்லும் பாதையை இந்திய மொழியாக்கமாக டங்கி.

ஸ்டோரி…

3 நண்பர்கள் & 1 தோழி விசா இல்லாமல் ஒரு நாட்டிற்கு செல்ல நினைக்கின்றனர். இதற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானை தொடர்பு கொள்கிறார் டாப்ஸி. உதவி கேட்கிறார். ஷாருக்கும் உதவி செய்கிறார்.

இவர்கள் சட்ட விரோதமாக மற்றொரு நாட்டிற்கு செல்ல என்ன காரணம்? ஷாருக்கானுக்கும் டாப்ஸீக்கும் இதற்கு முன்பு இருந்த உறவு என்ன? இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் தப்பிச்செல்ல நினைக்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிகதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

சமீபத்தில் வெளியான இளைஞர் வயதானவர் என மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார் ஷாருக்கான். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.

சேவிங் செய்தால் இளைஞர்.. டை அடித்தால் வயதானவர் என தோற்றங்களில் மற்றும் பாடி லாங்குவேஜிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஷாருக்கான்

இங்கிலாந்து நீதிமன்றத்தில் மறைந்த நண்பனின் சாம்பல் அஸ்தியை வைத்துக்கொண்டு பேசும் வசனம் செம. அதுபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் பின்னி பெடல் எடுத்து விட்டார் ஷாருக்கான்.

டாப்சியின் நடிப்பு டாப் லெவல். வயதானவர் இளையவர் என இரண்டு தோற்றங்களில் அசத்தியிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் தான் டாப்சிக்கான கேரக்டர் கிடைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. ஷாருக்கிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சி வேற லெவல்.

இங்கிலாந்து சென்ற காதலியை மீட்க விக்கி போராட அது முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விக்கி கௌஷல் நடிப்பில் மிரட்டல்.

மேக்கிங் பாராட்டும்படியாக இருந்தாலும் ஒரு ராணுவ வீரர் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்ல உதவுவது எல்லாம் நம்பும் படியாக இல்லை.ஒரு தேசப்பற்று மிக்கவர் இப்படி நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி??

காரியமாக வேண்டுமென்றால் காலை பிடிப்பது காரியம் முடிந்தவுடன் கழட்டி விடுவது என சில சுயநலவாதிகளின் உருவமாகவே டாப்ஸி வருகிறார்.

அதிலும் முக்கியமாக இந்தியாவை வெறுக்கும் நபராக டாப்சி வருகிறார். அப்படி இருக்கும் போது அவருக்கு ஒரு இந்தியர் ஏன் உதவுகிறார்?

படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் படி வகையில் உள்ளது. முக்கியமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.

ஹிந்தியில் 3 இடியட்ஸ் , முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவர் தற்போது இயக்கியுள்ள படம் தான் டங்கி.

சட்ட விரோதமாக தப்பித்துச் செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் விசா இல்லாமல் தப்பிக்க சென்றால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒரு எச்சரிக்கை பதிவாக செய்திருக்கிறார் டைரக்டர்.

ஆக இந்த டங்கி ரசிகர்களுக்கு பிடித்த பீரங்கியாக இருக்கும் என நம்பலாம்..

Dunki movie review and rating in tamil

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்.. பொன் நகைச்சுவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதை என்ன?.

மாமா சரவணன்… மாப்பிள்ளை விதார்த்.. வெட்டித்தனமான வாழ்க்கை வாழ்கிறார் சரவணன். இவரது சகோதரி மகன் விதார்த்.

ஒரு கட்டத்தில் தங்கள் வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்ட டாய்லெட் கட்டிக் கொள்ள அரசு மானியம் கிடைக்கிறது. இதனால் வீட்டின் பின்புறம் குழி தோண்ட அங்கே ஒரு புதையல் கிடைக்கிறது. குழி தோண்ட வருபவர் ஜார்ஜ் மரியான்.

அப்போது சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் அதை மறைக்க பல திட்டங்கள் போடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இது பலருக்கும் தெரிய வரவே அனைவரும் பங்கு கேட்கின்றனர்.

அதை அனுபவிக்க முடிந்ததா…? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர் கதைக்குத் தேவையான நடிப்பை சரவணனும் விதார்தம் பங்கு போட்டு செய்திருக்கின்றனர்.

ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சி ஸ்கோர் செய்து இருக்கின்றனர் ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி. இரட்டை நாயகர்களாக இவர்கள் இருவரும் ஜொலிக்கின்றனர். காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம் இல்லை.

நாயகனை பார்த்ததும் காதலிக்கும் நாயகியாக அருந்ததி நாயர். இவரின் கண்கள் இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

நார்த் இந்தியா பிச்சைக்காரன் கேரக்டர் படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆனால் கதை ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்பதை உண்மை.

டெக்னிசியன்ஸ்..

அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார்.

பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாக உள்ளது.

ஜனங்கள் ரசிக்க ஜன ரஞ்சகமான படத்தை கொடுக்க வேண்டும் என படக் குழுவினர் முடிவு செய்து அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில காட்சிகளில் நாடகத் தன்மை தென்பட்டாலும் லாஜிக் மறந்து காமெடியை ரசிக்கலாம்.

ஆயிரம் பொற்காசுகள்.. பொன் நகைச்சுவை

aayiram porkasugal movie review and rating in tamil

அகோரி விமர்சனம்..; பேய் அலற அலறவிட்டதா.?

அகோரி விமர்சனம்..; பேய் அலற அலறவிட்டதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

வித்தியாசமான கதையை படம் பார்க்க வேண்டும் என ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் அதை படமாக்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதி வைத்த கதை ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சித்து அவரது நண்பர்களுடன் அந்த வீட்டிற்கு செல்கிறார். அப்போது அந்த புத்தகம் அவருக்கு கிடைக்கிறது. அந்த புத்தகத்தில் எழுதிய படி ஒவ்வொன்றாக நடக்கிறது.

ஒரு கட்டத்தில் நாயகன் மற்றும் நாயகியை கொலை செய்தால் மட்டுமே நண்பர்களால் தப்பிக்க முடியும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? நண்பர்கள் கொலை செய்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகனாக சித்து.. நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.. கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.. பயம், தவிப்பு, பதட்டம் என ஒவ்வொன்றையும் இருவரும் அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சாமியாராக மைம் கோபி மற்றும் அகோரியாக சாயாஜி ஷிண்டே.. இருபது நடிப்பும் கவனிக்கப்படும் வகையிலும் ரசிக்கும்படி வகையிலும் உள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் வெற்றி, ரியாமிகா, சரத், மதனகோபால் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். ஆனால் அதிக இடங்களில் டபுள் மீனிங் காமெடிகள் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால் பேய் படங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை தானே.!?

டெக்னிசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த்..

படத்தொகுப்பாளர் ராஜ்குமார்..

கலை இயக்குநர் சந்திரகாந்த்..

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்ச மணி

இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்

பேய் படம்.. திகில் கதை ஆகியவற்றுடன் காமெடி கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் பல கேமரா கோணங்களில் படமாக்கி இருக்கின்றனர். பேய் படங்களுக்கு உள்ள வழக்கமான ஃபார்முலா தான் என்றாலும் அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ல்.

படத்தின் பின்னணி செய்யும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

திடீரென்று இடம்பெறும் அகோரி மற்றும் காட்சிகள் ரசிகர்களை குழப்பமடைய செய்கிறது.

Aghori movie review and rating in tamil

‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர் விமர்சனம்…

‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர் விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.

இந்த இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

1990களில் தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் உள்ள காடுகளைக் கட்டியாண்டவர் என்ற பெருமையை பெற்றவர் சந்தனகடத்தல் வீரப்பன்.

அவரது கதையை அவரே சொன்னால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்த ‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர்.

1995 – 96-களில் வீரப்பனைப் தன் பத்திரிகைக்காக பேட்டி எடுக்க காட்டிற்குள் சென்ற நக்கீரன் பதிவு செய்த செய்தி மற்றும் வீடியோக்களை இந்த கதை விவரிக்கிறது.

வீரப்பன் வாழ்வில் நடந்த போலீஸ் வழக்குகள், வீரப்பன் செய்த படுகொலைகள், சந்தனமரக் கடத்தல்.. யானை தந்தங்கள் கடத்தல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு எபிசோடுகளாக இந்த தொடர் கதை விவரிக்கிறது.

மேலும் பொதுமக்கள் வதை முகாம்கள், காவல்துறை செய்த சித்ரவதைகள், காவல்துறைக்கும், அந்த பகுதி மக்களின் மனநிலை, வீரப்பனின் அரசியல் என எபிசோடுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

எவரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வீரப்பன் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் உலக செய்திகளை அறிந்திருப்பது அதை அவரை அவரது சொந்தக் குரலில் பேசி இருப்பது உள்ளிட்டவைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் நாம் நாட்டிற்குள் இருந்து பார்த்துக் கொண்டு அரசியல் வேறு.. காட்டுக்குள் நடக்கும் அரசியல் வேறு என வீரப்பன் பார்வையில் சொல்லி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மலைவாழ் மக்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் கண் கலங்க வைக்கிறது. இது வீரப்பன் பற்றிய ஆவணப்படம் என்பதால் அவர் பேசிய காணொளிகள் தொடர் முழுவதும் நிரம்பி இருக்கின்றன.

வீரப்பன் மீது ஆயிரம் ஆயிரம் குற்றச்சாட்டுகளை போலீஸ் வைத்தாலும் மக்களை நம்ப வைத்தாலும் போலீஸ் செய்த குற்றங்கள் யாருக்கும் தெரிவதில்லை.. ஆனால் அதை தைரியமாக சொன்ன வீரன் வீரப்பன்.

ஒரு காட்சியில் அவர் பேசும் வசனம் கைதட்ட வைக்கிறது. “காசு கொடுத்து ஆடு திண்ணா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கிறேன்?” என்கிறார்.

இத்துடன் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வழக்கறிஞர்கள் மோகன், தமயந்தி, நடிகை ரோகினி, காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர், இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், ஊர்கிராமமக்கள் என பலரும் வீரப்பன் குறித்த கதை விவரங்களை விவரிப்பதாக காட்சிகள் நகர்கின்றன.

இவையில்லாமல்… 1995இல் ஜெயலலிதா ஆட்சி செய்த போது நடத்திய நிகழ்வுகள்.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட மோதல்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்.. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயம் திமுக நிலைபாடு உள்ளிட்டவைகளும் ஆராய்ந்து இருக்கிறது இந்த தொடர்.

Koose Munisamy Veerappan movie review and rating in tamil

ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்…

உறியடி விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சண்முகம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணவேல், வடசென்னை அன்பு, ஜெயராஜ், சார்ட்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் மற்றும் பலர்.

தயாரிப்பு:ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

இயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத்

படம் வழங்குவது: லோகேஷ் கனகராஜ் – ஜி ஸ்குவாட்

ரிலீஸ்: சக்தி.பிலிம் ஃபேக்டரி

கதைக்களம்…

சென்னையை அடுத்த பழவேற்காடு பகுதிதான் கதைக்களமாகிறது.

அண்ணன் பெஞ்சமின்.. தம்பி ஜோசப் தம்பியின் கூட்டாளி கிருபா..

அண்ணன் ஒரு பாக்ஸர்.. தன்னால் சாதிக்க முடியாததை தன் பகுதி மக்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அந்த பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதற்கு ஜோசப்பும் துணை போகிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை எழவே அண்ணனை கொலை செய்து விடுகிறான் ஜோசப். இதனால் ஜெயிலுக்கு செல்ல போது தன் கூட்டாளி கூட தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கிருபா பெரிய அரசியல்வாதி ஆகிடுகிறான். இதன் பிறகு என்ன நடந்தது? ஜெயிலுக்கு சென்ற ஜோசப் திரும்பி வந்தார்? நண்பருடன் மீண்டும் சேர்ந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப் அந்தப் பகுதி இளைஞன் செல்வாவை (விஜயகுமாரை) வைத்து என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கேரக்டர்ஸ்…

உறியடி படத்தின் மூலம் உரிமைக்காக உரக்க கத்திய விஜயகுமார் இதிலும் அதே துருதுருப்புடன் நம்மை கவர்ந்திருக்கிறார். ஆக்ரோஷ இளைஞராகவும் அதிரடி ஸ்கோர் செய்திருக்கிறார்.

விரோதமான வில்லத்தனம் கலந்த கேரக்டரை செய்திருக்கிறார் அவினாஷ். அரசியல்வாதி கிருபாவைக் கொல்ல போடும் திட்டங்கள் வேற லெவல்.

நாயகி மோனிஷா தேவையில்லாத கேரக்டர் என்றாலும் சில இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

கார்த்தியாக சரவணவேல், வில்லனாக ஜோசப் எனும் அவினாஷ் ரகுதேவன், அரசியல்வாதியாக கஞ்சா வியாபாரி சங்கர்தாஸ் ஆகியோர் கேரக்டர்கள் இப்படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்ஸ்…

கேமரா மேன் பிரிட்டோ.. வடசென்னை கடந்த பழவேற்காடு போல காட்சியளித்து அதிரடி காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

யாரும் காணாத.. பாடல் நன்றாக ஒர்க் அவுட் ஆன ஒன்றாகும். ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையால் மிரட்டி இருக்கிறார் கோவிந்த் வசந்தா. அது போல விண்டேஜ் ரசனையான பின்னணி இசையும் சிறப்பு.

இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்றாலும் அவரது வழக்கமான போதைப்பொருள் தான் இந்த படத்தில் ஆணிவேர். இளைஞர்கள் வாழ்வில் போதை நுழைந்து விட்டால் அதில் அரசியலும் நுழையும்… இந்த இரண்டிலும் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் எந்த நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்? சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கேங்ஸ்டர் கதை என்பதால் பழிவாங்கல் கதை தொடர்கிறது.. இந்த கும்பல் அந்த கும்பலை தாக்க… அந்த கும்பல் இந்த கும்பலை தாக்க இந்த நீளத்தை குறைத்து இருக்கலாம்.

பைட் கிளப் என வைத்து விட்டதால் சண்டைக்காட்சிகள் குறைவில்லை. அதே சமயம் கஞ்சா வாடைக்கும் குறைவில்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத்.

Fight Club movie review and rating in tamil

More Articles
Follows