தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடு மொழிகளில் இருந்து பல படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன.
எனவே இந்தியாவிலிருந்தும் படங்கள் அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி அடுத்தாண்டு 2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவுக்கு இந்தியா சார்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழில் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படமும் தேர்வாகி உள்ளது.
மடோனா அஸ்வின் இயக்கிய இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
நேரடியாக டிவியில் வெளியாகி பின்னர் ஓடிடியிலும் வெளியானது.
‘‘என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை’’
இத்துடன் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்த 14 படங்களில் இருந்து ஒரு படத்தை 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள்.
எனவே இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி செல்ல போகிறது என்பது விரைவில் தெரியவரும்.
Yogi babu’s Mandela is shortlisted for India’s entry to the Academy Awards