தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தை கேபி பாலா என்பவர் வெளியிடுகிறார்.
நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும். அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி வந்தவர் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த படத்தை வெளியிடுகிறார் என பலரும் மேடையில் பேசினர்.
பின்னர் மேடையில் வனிதா விஜயகுமார் பேசும்போது..
“என்னை பார்த்தால் பயமாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். எனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களும் இதை தான் சொல்கிறார்கள். நான் என்ன கடித்து தின்று விட போகிறேனா? என்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு தைரியமான பெண்தான் ஆனால் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்றார்.
லொள்ளுசபா மனோகர் பேசும்போது இந்த படம் பழைய படம் போல இருக்கிறது என்றார். நானும் அதை தவறாக சொல்லவில்லை. எனக்கும் 1990களில் பார்த்த படத்தை போல தான் இந்த படத்தின் காட்சிகள் இருந்தன. பாடல் காட்சிகளும் நன்றாக இருந்தது. 1990களில் விஜய் அஜித் படங்களின் பார்த்தபோது எப்படி இருந்ததோ ?! அதை உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டது” என்று பேசினார் வனிதா.
Vanitha speech at Dhillu irundha Poradu audio launch