இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’

இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இந்த படம் உள்ளதால் மற்ற படங்கள் / நடிகர்கள் ரஜினியுடன் மோத மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் அதே நாளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களில் அருண் விஜய் நடித்த ‘வா டீல்’ மற்றும் ஆர்யா விஷால் இணைந்து நடித்து ‘எனிமி’ ஆகிய திரைப்படங்களும் நவம்பர் 4ல் ரிலீசாகும் என அறிவித்தனர்.

நவம்பர் 2ஆம் தேதி சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி திருநாளில் ரிலீசாகாது என அப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவரின் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது…

அந்த அறிக்கையில்…

திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம்.

அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.

வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்

Maanaadu – Release postponed to November 25th

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தால் டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபிக்கு கிடைத்த கௌரவம்

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தால் டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபிக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல், சுஃபியும் சுஜாதாவும் மலையாள திரைப்படம், டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபி, நடன இயக்குனர் லலிதா ஷோபி மலையாள சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது.

நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில்,…

“இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில், இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறியிருந்தனர். அது இன்று நிறைவேறியுள்ளது.
கடவுளுக்கு நன்றி

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Lalitha Shobi wins best choreographer award at Kerala film festival

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.

இதில் இந்திய சிறந்த திரைப்படமாக கர்ணன் தேர்வு பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

அதன் நிறைவு விழாவில் நேற்று (17.10.21) சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.

விரைவில் தியேட்டர்களில் கட்டில் திரையிடப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்

Kattil won best film award at Bengaluru film festival

நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான ரமணா, நந்தா இணைந்து உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் ராணா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் நடித்து வருகிறார்.

இவர்கள் மூவரும் இணையும் புதிய படத்திற்கு “லத்தி” என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.

விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார்.

இத்துடன் #வீரமே வாகை சூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க இளையதிலகம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தாமிரபரணி, ஆம்பள படத்திற்கு பிறகு பிரபு விஷால் இணைந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத் குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப்சுப்பராயன் ஸ்டண்ட் காட்சி அமைக்கிறார்.
எடிட்டிங்:N.B.ஶ்ரீகாந்த் செய்ய கலை பணிகளை எஸ்.கண்ணன் செய்து வருகிறார்.

Rana Productions first movie Vishal 32 is now titled Laththi

1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை படமாக்கும் ஜி.வி.பெருமாள் வரதன்

1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை படமாக்கும் ஜி.வி.பெருமாள் வரதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து ஜி.வி.பெருமாள் வரதன் எழுதியிருக்கும்
திரைக்கதையை கேட்ட பல பிரபலங்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இப்படக்குழு
பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதனிடம் கேட்ட போது…

“பல்லவ மன்னர்களில் முக்கியமமானவர் நந்தி வர்மன்.
அவரைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன். இதில், 75
சதவீதம் உண்மையும், 25 சதவீதம் கற்பனையும் இருக்கும்.

1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நந்தி வர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில்
அவர் வாழ்ந்த அந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல்
பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதால், தற்போது அந்த ஊரில் வசிக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு
வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்தி வர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல்துறையினர் வருகிறார்கள்.

அவர்களும் ஒருவர் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதை,
சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப்போகிறோம். என் கதையை கேட்டு பலர்
பாராட்டி வருகிறார்கள். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். படத்தில் இடம்பெறும் நகைச்சுவை
காட்சிகளும் ரசிகர்களை கவரும். ‘மரகத நாணயம்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களை ஒன்று சேர்த்தால் எப்படிப்பட்ட உணர்வு இருக்குமோ, அப்படிப்பட்ட உணர்வை என் படம் கொடுக்கும்.” என்றார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும்
கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை
ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். கிருஷ்ண மூர்த்தி
ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை
நிர்மாணிக்கிறார். நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிஞ்சி, செஞ்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம்குமார், ரவிகுமார், விருமாண்டி, கெளதம், மோகன்.ஜி, ’மான்ஸ்டர்’ நெல்சன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர்கள் கோகுல் பெனாய், பி.வி.சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன், சுரேஷ் ரவி, தயாரிப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

A Gripping Suspense-Thriller Based On True Incident Involving 1000-Year Mystery

விவாகரத்தை அறிவித்துவிட்டு சரசரவென படங்களை ஒப்புக் கொள்ளும் சமந்தா

விவாகரத்தை அறிவித்துவிட்டு சரசரவென படங்களை ஒப்புக் கொள்ளும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் விவாகரத்து குறித்து சமந்தா அறிவித்து 10 நாட்கள் கூட நிறைவாகவில்லை.

இந்த நிலையில், சரசரவென அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா.

தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Dream warrior Pictures நிறுவனம், தமிழ் திரையுலகில் மாறுபட்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாகும்.

ஜோக்கர், அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம், காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.

தற்போது Dream warrior Pictures தயாரிப்பில் ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.

இவர் #ஒருநாள்கூத்து டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் அவர்களிடமும், #கண்ணும்கண்ணும்கொள்ளையடித்தால் பட டைரக்டர் தேசிங்குபெரியசாமி அவர்களிடமும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

Dream warrior Pictures நிறுவனத்தில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த படத்தை போலவே தமிழ் & தெலுங்கில் உருவாகவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சமந்தா.

இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் 14வது படைப்பாகும். சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கின்றனர்.

ஹரி அண்ட் ஹரீஸ் இணைந்து இயக்கவுள்ளனர். நவம்பரில் இதன் சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் சமந்தா.

திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ளாமல் புதிய புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதால் தான் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Samanthas upcoming movie updates after her divorce

More Articles
Follows