சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இயக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ பட இயக்குனர் அஸ்வின் உடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தை முடித்துவிட்டு சிவா உடன் வெங்கட் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

‘பிரின்ஸ்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியபோது வெங்கட் பிரபு உடன் இணைவதை உறுதிப்படுத்தினார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ்

Sivakarthikeyan and Venkat Prabu will be joining for new venture

நில அரசியலை தோலுரித்து கன்னடத்தை கலக்கும் ‘கந்தாரா’ இந்திய மொழிகளில் ரிலீஸ்

நில அரசியலை தோலுரித்து கன்னடத்தை கலக்கும் ‘கந்தாரா’ இந்திய மொழிகளில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக கன்னட படங்களுக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘தியா’, ‘கருட கமனா விருஷப வாகன’, ‘777 சார்லி’, ‘கேஜிஎப் 1 & 2’ உள்ளிட்ட படங்களின் வருகைக்குப் பிறகு கன்னட படங்களை விரும்பி பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கந்தாரா’ (Kantara).

ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.) நாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.

நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினை மோதலை தோலுரிக்கும் படமாகும்.

இந்த நிலையில் படக்குழு தற்போது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மினி ரிவ்யூ..

1980களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார். அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.

சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.

கூடுதல் தகவல்…

‘கந்தாரா’ படத்தை “தலைசிறந்த படைப்பு” என்று பாராட்டி இதன் மலையாள பதிப்பை கேரளாவில் வாங்கி வெளியிடப் போவதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannada movie Kantara will be dubbed in Indian languages

தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

3 நாயகிகளுடன் 3 வேடங்களில் பான் இந்தியா படத்தில் டோவினோ தாமஸ்

3 நாயகிகளுடன் 3 வேடங்களில் பான் இந்தியா படத்தில் டோவினோ தாமஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’.

(இவர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.)

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது.

கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகியகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை UGM Productions தயாரிக்கிறது.

Magic Frames நிறுவனம் தயாரிப்பில் இணைந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் – கோகுல் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்,
புரடக்சன் கண்ட்ரோலர் – பாதுஷா
எடிட்டிங் – ஷமீர் முகமது,
ஸ்டில்ஸ் – ஜோமோன் T ஜான்
மார்க்கெட்டிங் டிசைன் – பப்பட் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தனய் சூர்யா & திலீப் லெக்கலா (trendy tolly)
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (AIM)

அஜயந்தே ரண்டம் மோஷனம்

Ajayante Randam Moshanam Kicks-off with an auspicious pooja ceremony

#AjayanteRandamMoshanam Kicks-off with an auspicious pooja ceremony ?

Pan india film releasing in 3D ? ing @ttovino @IamKrithiShetty @aishu_dil #SurabhiLajshmi

A #JithinLal ?

#TovinoThomas @dhibuofficial #UGMProductions @magicframes2011 @urstanaysuriya #ARMMovie @teamaimpr

‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம்.

இவர் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்றது.

மேலும் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தங்கமீன்கள் & சவரக்கத்தி & சைக்கோ ஆகிய படங்களிலும் நடிகராக நடித்துள்ளார் இயக்குனர் ராம்.

இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி & அஞ்சலி ஜோடியை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார் ராம்.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய மதி.VS படத்தொகுப்பு செய்து வருகிறார்.

நடன இயக்குனராக சாண்டியும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வாவும் பணியாற்றியுள்ளனர்.

V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு “ஏழு கடல் ஏழு மலை” என பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் டைட்டிலை அறிவிக்கும் வகையில் டைட்டில் அறிவிப்பு வீடியோவையும் படக்குழுவி வெளியிட்டுள்ளது.

இன்று அக்டோபர் 11ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின்பாலி ஆகியோரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly and Anjali Joining movie title release

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நுழைவுத் தேர்வாகியதில் இருந்தே ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ (குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’) டிரேண்டிங்கில் உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராகுல் கோலி மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி என செய்தி வெளியாகியுள்ளது.

10 வயதான ராகுல் கோலி , ரத்த புற்றுநோயால் பாதிக்க பட்டிருந்தார் . பல மாதங்களாக புற்றுநோயுடன் போராடிய அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்த செய்தி திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

More Articles
Follows