தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அனுதீப் இயக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதன் பின்னர் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ பட இயக்குனர் அஸ்வின் உடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படங்களை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தை முடித்துவிட்டு சிவா உடன் வெங்கட் இணைவார் என எதிர்பார்க்கலாம்.
‘பிரின்ஸ்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியபோது வெங்கட் பிரபு உடன் இணைவதை உறுதிப்படுத்தினார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan and Venkat Prabu will be joining for new venture