‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumai Kalamபத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர் மறைந்தாலும் அவர் செய்து வந்த நலத்திட்டப்பணிகள் எந்தவித தொய்வின்றி நடக்க இருக்கின்றது.

கடந்த பதிமூன்று வருடங்களாக தமிழகமெங்கும் இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் திரு.விவேக் அவர்களால் நடப்பட்டிருக்கின்றன.

இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.

இந்தக்குழுவில் திரு.செல் முருகன், தயாரிப்பாளர் திரு.லாரன்ஸ், திரு.அசோக் மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதையே தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின் பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய பெயர் மாற்றத்தோடு திரு.விவேக் அவர்களின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது.

இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என “பசுமை கலாம்” அமைப்பு தெரிவித்துள்ளது.

cell murugan includes Vivek name in Pasumai Kalam

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai (2)தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

எனவே இந்த தோற்றம் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்… புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு.

ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களிடம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்;

8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Pondicherry L-G Tamilisai warns of partial lockdown amid Covid surge

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று..; சூட்டிங் கேன்சல்

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று..; சூட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா.

பல நடிகர் – நடிகைகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில கலைஞர்கள் இறந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், மகேஷ்பாபு – கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’.

இப்பட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

இந்த தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.

COVID 19 forces cancellation of Actress Keerthy Suresh’s milestone movie shooting

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 65’.

அனிருத் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்தப் படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Pooja hegde to romance Suriya ?

Suriya

மாற்றுத் திறனாளி வீரர்கள் துபாய் செல்ல உதவிய கமல்..; அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?

மாற்றுத் திறனாளி வீரர்கள் துபாய் செல்ல உதவிய கமல்..; அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan (2)மாற்றுத் திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை 31.03.2021 அன்று நேரில் சந்தித்தனர்.

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் போட்டியாளர்கள் துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா கிடைத்திட உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் உதவினார்.

துபாய் சென்று போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.

துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் கோப்பையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

Chennai stars cricket team met MNM leader Kamal Haasan

இரவு நேர ஊரடங்கு..: பகல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு & தனியார் நிறுவனங்கள் திட்டம்

இரவு நேர ஊரடங்கு..: பகல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு & தனியார் நிறுவனங்கள் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Setc (2)நாளை ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மேலும் கோயம்பேட்டில் இருந்து பகல் நேரங்களில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

Govt and private buses from chennai to south districts increased

More Articles
Follows