தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்று முதல் அலையில் 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.
அதன் பின்னர் படிப்படியாக 50% சீட்… 100% சீட் என உயர்த்தப்பட்டன.
தற்போது கொரோனா 2வது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
அப்போது 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த நவம்பர் மாதம் தீபாவளி முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ & அருண்விஜய்யின் ‘வா டீல்’ & ஆர்யா – விஷாலின் ‘எனிமி’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது உறுதியாகும் பட்சத்தில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
மேலும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் மிகவும் மகிழ்வார்கள் என நம்பலாம்..
Will TN govt approve 100% occupancy in theatre?