தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் நடிகர்கள் நாசர், கார்த்தி, விஷால், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனை எடுத்து தனது எக்ஸ் தளத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்…
Dear Udhaya, I sincerely thank u as a friend, producer, actor and now sports minister of Tamil Nadu govt for your contribution to our South Indian artistes association building efforts and your willingness to finish it as early as possible and also coming forward to help in any way through the government also. Indeed a lovely gesture. God Bless. ( Actor Vishal )
Udhayanidhi donated Rs 1crore to Nadigar Sangam new building