மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinஇயக்குன மிஷ்கின் சைக்கோ என்ற பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடன் தமிழ் சினிமாவின் மூலை முடுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதுவும் மேஸ்ட்ரோ இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி இருக்கிறது.

இயக்குனர் மிஷ்கின் பற்றியும், இந்த படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வியந்து பேசும்போது, “வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்திற்கு மாறான சிறந்த கிளாசிக்கல் படங்களை வழங்குவதில் மிஷ்கின் சார் கைதேர்ந்தவர். அவருடன் பணி புரிவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

சிறந்த படங்களை வழங்கும் அதே நேரத்தில் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைப்பதில் வல்லவர், அதனாலேயே தயாரிப்பாளர்களின் இயக்குனராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் ஒரே படத்தில் இணையும்போது வேறு என்ன வேண்டும்? தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தங்கள் திறமையால் உலகளாவிய பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரை போலவும் நானும் அவர்கள் இணைந்து செய்யும் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

அசாதாரணமான, அதே நேரம் கவனத்தை ஈர்க்கும் நடிகர்கள் பட்டாளத்தை பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் நட்சத்திரங்கள் தேர்வு என்பது இயக்குநரின் மனநிலையை பொறுத்து எடுக்கப்படும் முடிவு. ஆனால் மிஷ்கின் சார் விஷயத்தில் இது முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் மற்றும் ராம் ஆகியோர் அவருடைய தேர்வுகள், எங்களுக்கு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உண்மையில், மிஷ்கின் சார் எங்களை பரிந்துரைக்க சொல்லியிருந்தால் கூட, நாங்களும் அதே பெயர்களை சொல்லியிருப்போம்” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இந்த படம், வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor rocket ramanathanதமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர்.

“ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ராக்கட் ராமநாதன். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரத குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்”.

கேரளாவுக்கு ஒரு கோடி நிதியுதவி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

கேரளாவுக்கு ஒரு கோடி நிதியுதவி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DmGwOpuVsAU3nupசமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையில் அஜித்தை இயக்கும் வினோத் !

சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை “கேரளா… கேரளா…டோண்ட் வொர்ரி கேரளா… என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

இப்போது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 1 கோடி கேரளாவுக்கு வழங்கியுள்ளார்.

அடுத்த படத்தை இயக்க திருநெல்வேலியில் முகாமிட்டுள்ள தனுஷ்

அடுத்த படத்தை இயக்க திருநெல்வேலியில் முகாமிட்டுள்ள தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushதிரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ்.

இவர் ராஜ்கிரணை நாயகனாக வைத்து இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம் தனுஷ்.

வடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.?

தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காகத் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார்.

எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்!

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VJ suresh“நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன” என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன.

‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதன் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.

இயக்குனரின் முந்தைய படங்களான ‘மோ’ மற்றும் ‘அதிமேதாவிகள்’ படங்களின் நாயகனான சுரேஷ் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மைம் கோபி மற்றும் கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆதித்யா-சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல்-விமல் ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஒயிட் மூன் டாக்கிஸுடன் இணைந்து BRS டாக்கீஸ் கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள ‘காட்டேரி’..!

சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள ‘காட்டேரி’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

katteriஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார் .

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குனர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான்.. சொல்லப்போனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம். இந்த நிகழ்வில் பேசிய பொன்னம்பலம், “இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்” என கூறினார்.

நடிகர் சேத்தன் பேசும்போது, “எனக்கு காமெடி பண்ண ரொம்ப ஆசை.. ஆனால் எல்லோரும் என்னை சீரியஸான ஆளாகவே பார்க்கிறார்கள்.. தமிழ்ப்படம்-2 அந்தக்குறையை போக்கியது. அதை தொடர்ந்து இந்த ‘காட்டேரி’ படத்திலும் காமெடி ரோலில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.

லொள்ளுசபா மனோகர் பேசும்போது, “இந்தப்படத்தில் ஒரு மந்திரவாதி கேரக்டரில் நடித்துள்ளேன்.. டீகே என்னை பக்குவப்படுத்தி நடிக்க வைப்பதற்காக இலங்கைக்கெல்லாம் அழைத்து சென்றார். அதிலும் அந்த விஷ ஊசி அடிக்கும் காட்சிகளை அவர் என்னை வைத்து எடுத்த விதம் இருக்கிறதே, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என கலகலப்பூட்டினார்.

படக்குழுவினரிலேயே ரவிமரியாவின் பேச்சுதான் கலகலப்பாகவும் மீடியாவுக்கு தீனிபோடும் விதமாகவும் அமைந்தது..இந்தப்படத்திற்குள் தான் வந்தது, ஷட்டிங்ஸ்பாட் கலாட்டாக்கள், தனக்கேற்பட்ட சோகங்கள் என அனைத்தையும் கலகலப்பாக மேடையில் கொட்டினார் ரவிமரியா..

ரவிமரியா பேசும்போது, “இந்தப்படத்தில் ஐந்து நாட்கள் நடித்திருந்த நிலையில் திரையுலக ஸ்ட்ரைக் வந்தது.. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தபோது இயக்குனர் டீகே என்னை அழைத்து வேறு ஒரு கேரக்டரை கொடுத்து இது சூப்பராக இருக்கும் நடியுங்கள் என கூறிவிட்டார்.. பின்னர்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட என்னை மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் என்பது..சொல்லப்போனால் அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.

இது ஒருபக்கம் என்றால் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னை படப்பிடிப்பு நாட்கள் முழுதும் கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதிசெய்து பார்த்துக்கொண்டார்கள்.. இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் சோகமாக அமைந்தாலும் எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இக்கிருந்தது..இதுவரை, வில்லன்,காமெடி கலந்த வில்லன் என நடித்துவந்தேன்.. இயக்குனர் டீகே தான், நீங்க காமெடியனாகவே நடிங்க சார் என புது கேரக்டரில் என்னை பொருத்தியுள்ளார் .

ஹாரர் படங்களில் சந்திரமுகிக்கு பின்னர் புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் என்றால் அது காட்டேரிதான் என அடித்துச்சொல்வேன்.. பாக்யராஜை போல திரைக்கதையில் வித்தியாசமாக யோசித்துள்ளார் டீகே.

அதேபோல வரலட்சுமியுடன் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.. ஒரு காட்சியில் அவர் என்னை உதைக்க வேண்டும்.. என்னிடம் பாதுகாப்பது கவசம் அணிந்திருக்கீங்களா என கேட்டார் வரலட்சுமி..நான் எதற்கு என கேட்க அவரோ ரொம்ப கூலாக, ‘நான் பாலா சார் ஸ்டூடண்ட்.. உதைக்கிறது எல்லாமே ரியலாவே பண்ணித்தான் பழக்கம்” என தன் பங்குக்கு டெரர் ஏற்றினார் வரலட்சுமி. இன்னொரு நாயகி சோனம் பஜ்வா தான் என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.. எப்படியோ இந்தப்படத்தில் என்னை கனவுக்கண்ணன் ஆக ஆக்கிட்டாங்க” என கலகலப்பாக தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

இசையமைப்பாளர் பிரசாத் பேசும்போது, “பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் எனக்கு பயம்.. அதுவும் இந்தப்படத்தின் ஹாரர் காட்சிகளை பார்த்து, இரவில் இசையமைக்க பயந்துகொண்டு பகலில் தான் இசையமைத்தேன்” என கூறினார்

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திற்கு இது அறுவடைக்காலம் என சொல்லலாம்.. பண்டிகை நாட்கள் ஏதாவது ஒன்றில் புதுப்படத்திற்கு பூஜை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமான ரிலீஸ் தேதிகளில் வெளியிட படங்களை தொடர்ந்து தயாராக வைத்திருக்கிறார்கள். இந்த காட்டேரியும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என கூறினார்.

நாயகன் வைபவ் பேசும்போது, “ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் ஒரு படம் நடித்துவிடவேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நான்கு வருடமாக துரத்தி தூரத்தில் லவ் பண்ணினேன்.. பரிசாகத்தான் இந்த காட்டேரி வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

இயக்குனர் டீகே பேசும்போது, “யாமிருக்க பயமே ஹிட்டானாலும் அடுத்ததாக கவலை வேண்டாம் படம் சரியாக போகவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படம் இயக்கும் வாய்ப்பை தந்தார்.. இந்தப்படத்தின் டைட்டிலையும் அவர்தான் எனக்கு கொடுத்தார்.. அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறன்” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான் பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது..அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை . டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார்.. அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்” என .பேசினார்.

More Articles
Follows