‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம்.

இவர் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்றது.

மேலும் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தங்கமீன்கள் & சவரக்கத்தி & சைக்கோ ஆகிய படங்களிலும் நடிகராக நடித்துள்ளார் இயக்குனர் ராம்.

இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி & அஞ்சலி ஜோடியை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார் ராம்.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய மதி.VS படத்தொகுப்பு செய்து வருகிறார்.

நடன இயக்குனராக சாண்டியும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வாவும் பணியாற்றியுள்ளனர்.

V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு “ஏழு கடல் ஏழு மலை” என பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் டைட்டிலை அறிவிக்கும் வகையில் டைட்டில் அறிவிப்பு வீடியோவையும் படக்குழுவி வெளியிட்டுள்ளது.

இன்று அக்டோபர் 11ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின்பாலி ஆகியோரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly and Anjali Joining movie title release

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நுழைவுத் தேர்வாகியதில் இருந்தே ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ (குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’) டிரேண்டிங்கில் உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராகுல் கோலி மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி என செய்தி வெளியாகியுள்ளது.

10 வயதான ராகுல் கோலி , ரத்த புற்றுநோயால் பாதிக்க பட்டிருந்தார் . பல மாதங்களாக புற்றுநோயுடன் போராடிய அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்த செய்தி திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் விஜய்யின் ‘தளபதி 67’ தான்.

கெளதம் வாசுதேவ் மேனன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அணுகியதை உறுதிப்படுத்திய நிலையில், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிருத்விராஜ் சுகுமாரன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கலையரசன் தனது நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜால் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை, படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.

அதில் ,”வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை” ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .

மற்றொரு படமான ‘அக்னி பாதை’ படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.

படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு :அருள்.
இசை :பாலகணேஷ் .
எடிட்டிங் :B.S.வாசு.
கலை : ஜனா .
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
இணை தயாரிப்பு – ஆயர்பாடி கண்ணன்
தயாரிப்பு – ஜெம் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம்.
இயக்கம் – ராஜ் கிருஷ்ணா

” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு ” படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது …

கடந்த ஆட்சியில் ஒரு கல்வியாளன், ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

உலகில் கல்வி என்பது ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அது அவனது ஏழு தலைமுறையை காக்கும்.

ஆனால் அந்த கல்வியை காசுக்கு விற்கும் அரசியல்வாதிகள் கல்வியாளனாக மாறி நடத்தும் அநியாயங்கள் பற்றிய உண்மை சம்பவம் இது என்றார் ராஜ் கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்கி , ஒரே கட்ட படப்பிடிப்பில் முடித்து ஜனவரியில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெம் பிக்சர்ஸின் அடுத்த படமான “அக்னி பாதை” படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தது ஏன்? மீண்டும் வருவாரா.?; சூர்யா விளக்கம்

‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தது ஏன்? மீண்டும் வருவாரா.?; சூர்யா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.

அப்போது அவரிடம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தது ஏன்? ரோலக்ஸ் திரும்பி வருவாரா.? என கேட்கப்பட்டது

அப்போது சூர்யா பேசுகையில்…

‘விக்ரம்’ படத்தில் கமலுக்காகவே ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்.

ரோலக்ஸ் திரும்பி வருவாரா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும். ஒருவேளை திரும்ப நடிக்க வேண்டுமெனில் நிச்சயம் நடிப்பேன்” என பதிலளித்தார் சூர்யா.

விதிமீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா.; தமிழக அரசு விசாரணை

விதிமீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா.; தமிழக அரசு விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 9ஆம் தேதி மாலை தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

“21-36 வயதுடையவர்களே சினை முட்டை தானம் செய்யவேண்டும். தானம் செய்பவர்களுக்குத் திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்க வேண்டும்.

இதில் விதிமுறை பின்பற்றப்பட்டதா என்று நயன்தாராவிடம் விளக்கம் கோரப்படும்” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows