தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின்.
இவர் நிறைய படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார்.
இவரின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது.
தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.
‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கும்போது இவருக்கும் நடிகர் விஷாலுக்கு மோதல் ஏற்படவே அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
தற்போது விஷால் அந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் விஷால் உடன் மீண்டும் இணைவீர்களா? என்ற கேள்விக்கு மிஷ்கின் பதில் அளிக்கையில்.
“எனக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது முன்பெல்லாம் கோபமாக இருந்தேன் இப்போது அந்த கோபம் குறைந்து விட்டது.
இனிமேல் அவனுடன் சேர்ந்து என்னால் படம் பண்ண முடியாது. ஒருவேளை விஷால் என்னிடம் கேட்டால் அவனுக்காக படம் இயக்குவேன். நானாக சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன்.
நாங்கள் இணைந்தால் தான் இந்த நாடு உருப்படப்போகுதா என்ன? அது அப்படியே இருக்கட்டும்.
ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் வணக்கம் சொல்லுவேன் கட்டிப்பிடித்துக் கொள்வேன் அவ்வளவுதான்.” என மின்னலாக பதில் அளித்துள்ளார் மிஷ்கின்.
Mysskin talks about working vishal again?