என் படம் நல்லாயில்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்வேன்.. – மிஷ்கின்

என் படம் நல்லாயில்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்வேன்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskinஇன்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார்.

மிஷ்கின் பேசுகையில்…

சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான்.

இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது.

விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும் நல்லா இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன் . என்று கூறிய மிஷ்கின் தனது புதிய படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் எனது புதிய படம் குறித்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிசாசு 2 படத்தின் கதையை கூறி அதற்கு ஒப்புதலும் வாங்கி விரைவில் படம் துவங்க இருக்கிறது.

ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க உடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த நிகழ்வை முதற்கட்டமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோஷப்படுகிறேன். இந்த நாளில் உங்களுடன் இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போதும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் இணைந்து என் முழு ஆதரவைக் கொடுப்பேன் என்றார்.

I accept both positive and negative reviews says director Mysskin

RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini for change postersகொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி குறித்து ரத்து விளக்கம் கேட்டு கோர்ட்டில் முறையீட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

சென்னை மாநகராட்சியில் முடித்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்காக கோர்ட்டை நாடியதால் நீதிபதி எச்சரிச்சை விட பின் வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த்.

அதாவது… பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒரு வால் போஸ்டரை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். அதில்…

RAJINI FOR CHANGE ரஜினி பார் சேஞ்ச் என வசனம் இடம்பெற்ற போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

Rajini for change posters seen across chennai

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jeevith kumarமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது.

இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியர் பிடித்தனர்.

அதன்படி திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதுடன், தேசிய அளவில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

மேலும், சேலத்தை சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்
1,615 மாணவர்கள் தேர்ச்சி.

4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார்.

ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜீவித் குமார்.

Theni government school student scores 664 out of 720 in NEET exam

யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress vamshikaவழக்கம்போல சென்னையில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கோடம்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற கார்களை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது ஒரு காரில் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

அவர் கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது.

நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பது உறுதியானது.

எனவே அவர் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த வம்ஷிகா செய்தியாளர்களிடம் பேசினார்.

” தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் கார் ஓட்டி இருந்ததாக தெரிவித்தார்.

மது அருந்துவிட்டு கார் ஓட்டுவது தப்புதான்.

ஆனால் யாரும் செய்யாத தப்பை தான் செய்யவில்லை என விளக்கம் வேற அளித்துள்ளார்.

அதன்பின்னர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர் எனவும் நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.

Kannada actress Vamshika caught red handed in drunk and drive

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhunthu va andreaவாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம்.
நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.
நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த கூட்டணிக்கான வரிகளை திவ்யா லீ நாயர் எழுதியுள்ளார்.
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=BzihkXIUQ94&feature=youtu.be
பாடல் குழுவினர் விவரம்:
பாடல் தயாரிப்பு: ப்ரித்வி சந்திரசேகர்
பாடல் எழுதி இசையமைத்தவர்கள்: ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே
ஆங்கில வரிகள்: ஆண்ட்ரியா
ராப்: ஏடிகே

Andrea and ATK team up for Ezhunthu va

காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi sarath kumarஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது.

இந்திய நாட்டு வருவாயில் சுமார் 93,000 கோடி ரூபாய் பங்களிப்பை ஊடகங்கள் & பொழுபோக்கு துறை வழங்குகிறது.

கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல.

நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவப் போவதில்லை.

காந்தி படத்தை மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும்.

அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது.

எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sarathkumar extends support to Vijay Sethupathi on ‘800’ controversy

More Articles
Follows