தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2020 டிசம்பர் 29ஆம் தேதி தன் அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி அம்போ என ஆற்றில் தவிக்க விட்டு சென்றார்.
அந்த அரசியல் அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் தன் வீட்டிலேயே மறைந்து ஒளிந்து கிடந்தார் ரஜினிகாந்த்.
தன் மருமகனும் நடிகருமான தனுஷின் புது மனை பூஜையில் கலந்து கொண்டார்.
பிறகு இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை வந்தார்.
இந்நிலையில் வரும் 8ந்தேதி ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளவிருக்கிறாராம் ரஜினி.
மார்ச் இறுதிவரை கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்.
களத்திற்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.
2 இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்போ அந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Super Star Rajinikanth wish to act more films