எஸ்டிஆருக்கு ரெட் கார்ட்.? விஷாலை கண்டிக்கும் சிம்பு ரசிகர்கள்

எஸ்டிஆருக்கு ரெட் கார்ட்.? விஷாலை கண்டிக்கும் சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu fans condemns Vishal and Producer Michael Rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே மட்டுமே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கமும் கேட்டது. அவரது படங்களுக்கு தடையும் போட்டது.

தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஆனால் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர்கள் சிம்புவுக்கு ஆதரவாக பேசி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Simbu fans condemns Vishal and Producer Michael Rayappan

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and vishnuசுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் விஷ்ணு விஷால்,

அண்மையில் இவர் நடித்த ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவருக்கும், நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவருக்கும், கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

வழக்கமான கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணு டுவிட்டரில் கூறியிருப்பதாவது : நானும், ரஜினியும் ஓர் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். தற்போது எங்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

எங்களது மகனுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் செய்தோம், இனியும் செய்வோம். பல ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், இனி நல்ல நண்பர்களாக இருப்போம்.

எங்களது மகன் மற்றும் இருவரது குடும்பங்களின் நலன் கருதி எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 222 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இந்தியன் 2 படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, முத்துராஜ் கலை பணிகளை கவனித்து வருகிறார்.

இதன் செட் அமைக்கும் பணிகளை நேற்று முதல் பூஜையுடன் படக்குழு துவங்கியது.

அடுத்த டிசம்பர் முதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் இல்லை)

இதுபற்றி கேட்டதற்கு… கமல் கேரக்டர் மற்றும் உறுதியாகியுள்ளது. துல்கர் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை யாரும் அனுகவில்லை. என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சூட்டிங் தொடங்கும் முன் மற்ற கலைஞர்கள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 2

செகன்ட் ஹீரோவை காதல் (மறு) திருமணம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

செகன்ட் ஹீரோவை காதல் (மறு) திருமணம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundharya rajini re marriage visakanகடந்த 2010ம் ஆண்டில் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வேத் என்ற பெயரில் 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அதன் பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

தற்போது தந்தை ரஜினியுடன் வசித்து வருகிறார் சவுந்தர்யா.

இந்நிலையில் சௌந்தர்யா 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். தற்போது தந்தையுடன் இருந்து இவரும் தொழிலை கவனித்து வருகிறாராம்.

இவரும் சவுந்தர்யாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தாகவும் பின்னர் பழக்கமாகி இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணத்தை மிக எளிமையாக நடத்தவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சௌந்தர்யாவை விவாகரத்து செய்ய அஸ்வின் சில மாதங்களுக்கு முன்பே 2வது திருமணம் செய்துக் கொண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya Rajinis 2nd marriage She going to marry an actor

soundarya rajini சௌந்தர்யா ரஜினி

Breaking இலவசங்கள் நிச்சயம் தேவை.; சர்கார் சர்ச்சை குறித்து ரஜினி அதிரடி

Breaking இலவசங்கள் நிச்சயம் தேவை.; சர்கார் சர்ச்சை குறித்து ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Free is must says Rajinikanth in Sarkar deleted scenes issueமுருகதாஸ் இயக்கி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை மக்கள் தீயிட்டு எரிப்பதாக காட்சிகள் இருந்தன.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போர்கொடி உயர்த்த சர்கார் படம் மறுதணிக்கை செய்யப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சற்றுமுன் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்கப்பட்டது.

சர்க்கார் பட விவகாரத்தில் அரசு பேச்சுவார்த்தைக்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை தாக்குவது, பேனரை கிழிப்பது மிகவும் தவறான செயல். பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

100% மக்களுக்கு இலவசங்கள் தேவை தான் (ஏழைகளுக்கு). ஆனால் அது யாருக்கு சென்றடைகிறது என்பதை பார்க்க வேண்டும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுக்க கூடாது. என்றார்.

மேலும் பாஜக. குறித்து கேட்டதற்கு….

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும் – ரஜினி

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன்.

10 பேர் ஒருவரை (பாஜக.) வை எதிர்த்தால் யார் பலசாலி? என விளக்கம் அளித்தார்.

Free is must says Rajinikanth in Sarkar deleted scenes issue

Breaking நான் முட்டாள் இல்லை.; எந்த 7 பேர்? கேள்விக்கு ரஜினி நெத்தியடி

Breaking நான் முட்டாள் இல்லை.; எந்த 7 பேர்? கேள்விக்கு ரஜினி நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Rajiv Gandhi murder case and 7 Persons release issueசென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது ஒரு நிருபர் 7 பேர் விவகாரத்தில் குடியரசு தலைவர் கடிதம் நிரகாரிக்கப்பட்டது குறித்து ஒருவர் கேட்டார்.

எந்த 7 பேர் பத்தி கேள்வி கேட்கிறீங்க? என்று ரஜினி அவரிடம் கேட்டார். உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேர் விடுதலை குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியவில்லை என்று செய்திகளை வெளியிட்டனர்.

இது வைரலாக பரவியது. (நம் தளத்தில் இந்த செய்தி வெளியிடவில்லை)

தற்போது சற்றுமுன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அனைத்திற்கும் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது…

*ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை ஒரு சிலர் உருவாக்கி வருகின்றனர்.*

*7 பேர் குறித்து கேள்வி கேட்ட விதம் தெளிவாக இல்லை. செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.

*பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் பத்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியவன் நான்.*

*27 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.*

*பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்பது என்னுடைய கருத்து.*

*அன்றாட நிகழ்வுகள் குறித்து இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன். முழுதாக அரசியலுக்கு வந்த பிறகே பதிலளிப்பேன்.*

*முன்னாள் முதல்வர் ஜெ மரணத்திற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்ற அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு, பிறர் மனம் புண்படாத வகையில் அமைச்சர்கள் பேசுவது நல்லது என்றார். இதே கேள்வியை நான் அமைச்சர்களிடம் பார்த்து கேட்டால் சரியாக இருக்குமா?

*பாஜகவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

Rajini talks about Rajiv Gandhi murder case and 7 Persons release issue

More Articles
Follows